பயாலஜிகல் ஈ தடுப்பூசியை குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம்!

 

 

 

 

 

María-Elena-Bottazzi | Primicia Honduras

 

 

டாக்டர் மரியா எலினா பாட்டசி


பயாலஜிகல் ஈ தடுப்பூசிக்குழு


நீங்கள் ஆராய்ச்சி செய்துவரும் பயாலஜிகல் ஈ தடுப்பூசி பற்றி கூறுங்களேன்.


கடந்த ஆண்டு நாங்கள் கோவிட்-19 க்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் இறங்கினோம். இந்தக்குழு ஆராய்ச்சியை வேகமாகவும் நுட்பமாகவும் செய்வதோடு இதற்கான சோதனைகளும் நடைபெறவுள்ளன. அரசிடம் சோதனை நடத்தவும் அதனை விரிவுபடுத்தவும் அனுமதி கிடைத்துள்ளது. உலகளவில் மருத்துவ சோதனை நடத்தவும் சிஇபிஐ போன்ற அமைப்பிடம் அனுமதி பெற்றுள்ளோம்.


முதல்கட்ட சோதனைகளுக்கான முடிவுகள் எப்போது கிடைக்கும்?


விரைவில் முதல் கட்ட சோதனைகளை ஆராய்ச்சியாளர்கள் முடித்து முடிவுகளை வெளியிடுவார்கள் என நினைக்கிறேன். மூன்றாவது கட்ட சோதனைக்கான அனுமதி பெற்றுள்ள நிலையில் அடுத்த வாரமே இதுபற்றிய தகவல்களை வெளியிடுவார்கள் என்று நினைக்கிறேன்.


மாறியுள்ள வைரசுக்கு எதிராக தடுப்பூசி எப்படி மேம்பட்டுள்ளது என்று கூறுங்கள்.


நாங்கள் எங்கள் ஆய்வகத்தில் பயாலஜிகல் ஈ தடுப்பூசிக்காக இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்த ஊசி, இப்போது மாறியுள்ள டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படும். சார்ஸ், மெர்ஸ் ஆகிய நோய்களுக்கு அடுத்து கொரோனாவுக்கு தடுப்பூசிகளை தயாரித்து வருகிறோம். வைரசில் ஏற்படும் மாறுதல்களுக்கு ஏற்ப செயல்படும்படி தடுப்பூசியின் திறனை அதிகரித்து வருகிறோம். எதிர்காலத்தில் இரண்டாவது மூன்றாவது தலைமுறை தடுப்பூசிகள் கூட வழங்கப்படலாம்.


தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம் என்று கூறினீர்களே?


ஈஸ்ட் எக்ஸ்பிரஷன் டெக்னாலஜி என்பதுதான் பல்வேறு தடுப்பூசிகளுக்கான அடிப்படையாக உள்ளது. மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசியிலும் கூட இதைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதனை குழந்தைகளுக்கு செலுத்தி வருகிறார்கள். இந்த வகையில் வயது வந்தவர்களுக்கு பயாலஜிகல் ஈ தடுப்பூசி செலுத்தப்பட்டபிறகு, குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம்.


இரண்டாவது டோஸை ஒருவர் செலுத்த அதிக காலதாமதமாகிறது. இதைபற்றி என்ன நினைக்கிறீர்கள்?


ஒருவருக்கு நோய்த்தொற்றை தடுக்கும் ஏற்பாடாக இரண்டுமுறை தடுப்பூசிகளை செலுத்தப்படுகிறது. அதிக மக்கள்தொகை இருக்கும்போது, இரண்டுமுறை தடுப்பூசியை செலுத்துவது கடினமானதுதான். இதில் தடுப்பூசி இருப்பும் முக்கியமானதுதான். வைரஸ் தொடர்ச்சியாக மாற்றம் பெற்று வருவதால், தடுப்பூசி மட்டுமே அதனை தடுத்துவிட முடியாது. அறிவியல்ரீதியாக பார்த்தால் தனிநபர்கள் அனைவருமே அவர்களுக்கான நேரத்தில் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது நல்லது.


நோய்த்தொற்று வேகமாக பரவுவது தடுப்பூசியை செலுத்துவதற்கு தடையாக இருக்குமா?


தடுப்பூசிகளை பெற்று மக்களுக்கு எப்படி விநியோகிக்க முடிகிறது என்பதைப் பொறுத்துத்தான் இதனைக் கூறமுடியும். சில இடங்களில் தடுப்பூசிகளை எளிதாக பயன்படுத்தலாம். சில இடங்களில் முடியாது. வைரசின் வடிவமும் திறனும் மாறிக்கொண்டே வரும் சூழலில் இம்முயற்சி கடினமாகவே இருக்கும். முதல் தடுப்பூசி கிடைத்தாலும் இதற்கான பூஸ்டர் ஷாட் கிடைக்க அதிக காலம் காத்திருக்குமாறு இருக்கும்.


இந்துஸ்தான் டைம்ஸ்


பினாயக் தாஸ் குப்தா


கருத்துகள்