நோய் எதி்ர்ப்பு சக்தி செயல்படுவதை அறிந்துகொள்ளுங்கள்!

 

 

 

 

 

 Girl, Boxer, Fighter, Nude, Boxing Gloves, Shirtless

 

 

 

நோய் எதிர்ப்பு சக்தி செயல்படுவது எப்படி?


வைரஸ் பாக்டீரியா, பூஞ்சை என அனைத்து நுண்ணுயிரிகளையும் எதிர்ப்பது நோய் எதிர்ப்பு சக்திதான். தடுப்பூசி என்பது கூட நோய் எதிர்ப்பு சக்தி அமைப்புக்கு நோய் கிருமிகள் பற்றி அறிமுகப்படுத்தி வைப்பதுதான். இதனால் மறுமுறை நோய்க்கிருமிகள் உடலில் தட்டுப்பட்டால் எளிதாக எதிர்கொள்ள முடியும். உடலில் பரவி வரும் வியாதிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி செயல்படும் விதம் உள்ளது. இதனைப் புரிந்துகொண்டால் நோ்ய்களைப் பற்றி எளிதாக அறிந்துகொண்டு உடல்நலம் காக்கலா்.ம்.


உடலிலும் உடலுக்கு வெளியிலும் ஏராளமான நுண்ணுயிரிகள் உள்ளன. இவற்றை எதிர்த்து தாக்கி உடலைக் காப்பது என்பது எளிதான பணியல்ல. இந்த நோய் எதிர்ப்பு பணியில் உடலிலுள்ள பல்வேறு பாகங்களும் செயலாற்றுகின்றன. குறிப்பாக தோல் முதல் வயிற்றிலுள்ள நுண்ணுயிரிகள் வரை நோய்த்தடுப்பில் உதவுகின்றன. ஆனால் இது நிலையாக இப்படித்தான் செயல்படும் என்று கூற முடியாது. நோய் எதிர்ப்பு சக்திக்கு உள்ள நினைவுத்திறன்தான் நோயை எதிர்க்க பெரும்பாலும் பயன்படுகிறது.


தோல் பற்றி முன்னமே எழுதியது போல முதல்நிலை கவசம் தோல்தான். மூக்கில் உள்ள சளிபோன்ற திரவம், வாயில் உள்ள எச்சில் ஆகியவை நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் கொண்டவை. அப்படியும் இதையெல்லாம் தாண்டி வயிற்றுக்குள் சென்றாலு்ம் அங்குள்ள அமிலம் கிருமிகளை அழிக்கும். உணவிலுள்ள பல்வேறு கிருமிகளை அழித்து நம்மை நோய் அண்டாமல் காப்பது வயிற்றிலுள்ள அமிலம்தான்.


நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்குள் வந்த கிருமிகளை அடையாளம் கண்டால் உடனே காய்ச்சல் அறிகுறியை வைத்து கண்டுபிடிக்கலாம். உடலின் வெப்பம் அதிகரிக்கும்போது நம்மால் எப்போதும் போல உணவு எடுத்துக்கொள்ள முடியாது. இந்த சூழ்நிலையில்தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கிருமிகளை எதிர்த்து போரிட முடியும். ஆனால் காய்ச்சல் குறையாமல் நீடித்தால் உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். உடலில் கிருமிகள் உள்ளே புகுந்து தாக்கும்போது, அதன் புரத அமைப்பின் அடிப்படையில் தாக்குதல் நடத்தும் செல்களை வெள்ளை அணுக்கள் என்று கூறலாம். இதில் நிறைய வகைகள் உண்டு. ராணுவத்தில் உள்ள படைப்பிரிவுகளைப் போலத்தான். இவை அனைத்தின் ஒரே லட்சியம், நோய்க்கிருமிகளை அழிப்பதுதான்.


லிம்போசைட்ஸ் எனும் டி மற்றும் பி செல்கள் நோய்களை ஒழிப்பதற்கான முக்கியப் பங்களிப்புகளை வழங்குகின்றன. டி செல்கள்தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு உடலுக்குள் புகுந்த எதிரி செல்களை அடையாளம் காட்டுகிறது. இதில் தவறு நேரும்போது உடலின் செல்களை நோய் எதிர்ப்பு சக்தி தாக்கி அழிக்கும் சிக்கல்கள் நேருகின்றன. டி செல்கள் எதிரிகளை முதலில் சரியானவையா என்று அடையாளம் கண்டுகொள்ள சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறது. பிறகு செல்கள் பிரிந்து எதிரி செல்களை அழிப்பதற்கான வேதிப்பொருட்களை வெளியிடுகிறது.


பி செல்களைப் பொறுத்தவரை நேரடியாக சண்டைதான். பிறகுதான் யோசனை எல்லாம். நுண்ணுயிரிகளின் ஆன்டிஜென்களை அழிக்கும் வேலையை வேகமாக தொடங்குவது பி செல்கள்தான் இவை அனைத்து செல்களையும் இப்படி அழிப்பதில்லை. அப்போதுதான் திரும்ப அந்த நுண்ணுயிரிகள் தாக்கும்போது அதனை நினைவுகொண்டு தாக்கமுடியும். இவற்றை ஆய்வு செய்து அறிந்து இதன் அடிப்படையில்தான் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. உடல் நோயை எதிர்த்து போராடுவதற்கான நேரத்தை ஊசிகளும் மருந்துகளும் குறைக்கின்றன.


பல்வேறு புற்றுநோய்களுக்கு நீண்டகால நோய்களுக்கு சிகிச்சை எடுப்பவர்கள், உடலில் உறுப்பு மாற்ற சிகிச்சை செய்தவர்கள் ஆகியோருக்கு கொடுக்கப்படும் மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்கச் செய்யும். இதன் காரணமாக ஒருவருக்கு எளிதில் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு. இவர்கள் மருத்துவரின் சிகிச்சை மற்றும் வழிகாட்டலைப் பின்பற்ற வேண்டும்.


மக்கள் தொகை குறைந்த நாடுகள் எளிதாக தடுப்பூசிகளை போட்டு இறப்பு எண்ணிக்கையை குறைத்துவிட முடியும். ஆனால் மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் இது சாத்தியமில்லை. நாடு தழுவிய முறையில் தடுப்பூசிகளை அரசு மக்களுக்கு இலவசமாக வழங்குவது மக்களைக் காக்கும் நடவடிக்கை. அடிப்படையான மருத்துவக்க கட்டமைப்பு இல்லாத நாடுகளில் தடுப்பூசிகளை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளவும் அரசு வழிசெய்யலாம். இதன்மூலம் பெருமளவு மக்கள் தடுப்பூசிகளால் நோய்எதிர்ப்பு திறனைப் பெறுவார்கள். இப்படித்தான் அம்மை நோய் முதல் போலியோ வரையிலான பயணம் தொடர்கிறது. தடுப்பூசிகளுக்கு எதிராக பேசும் பிரசாரங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி அவர்களின் உயிரைப் பறிக்கிறது.


உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கிருமிகளுக்கும் தன்னுடைய உடல் செல்களுக்கும் வேறுபாடு தெரியாமல் தாக்கி அழிக்கத் தொடங்கினால் அதனை ஆட்டோஇம்யூன் டிஸார்டர் என்று கூறலாம். இந்த வகையில் எண்பது குறைபாடுகள் இதுவரை மருத்துவர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த குறைபாட்டைக் கட்டுப்டுத்த இபுபுரோபேன் போன்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை பயன்படுத்தினால் நோய் எதிர்ப்புசக்தியின் திறன் குன்றும். இந்தவகையில் ஆட்டோஇம்யூன் டிஸார்டை கட்டுப்பாட்டில் வைக்கலாம். தனது செல்களை தானே தாக்குவதால் உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உள்ளது. இந்த குறைபாடு மரபணு தொடர்ச்சி காரணமாகவே அதிகம் ஏற்படுகிறது.


சயின்ஸ் போகஸ்




கருத்துகள்