பாய்சன் ஐவி தாவரம் ஏற்படுத்தும் ஒவ்வாமை பாதிப்புகள்!

 

 





 

 


அறிவுப்பற்று
மிஸ்டர் ரோனி
சல்பைட்டுகளால் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்பு என்ன?

உலர் பழங்கள், புதிதாக பறிக்கப்பட்ட காய்கறிகள், ஒயின் வகைகள் ஆகியவற்றில் சல்பைட்டுகள் சேர்க்கப்படுகின்றன. சல்பைட்டுகள், பொருட்கள் கெட்டுப்போகாமல் காக்கின்றன. நுண்ணுயிரிகளை அழிக்கின்றன. ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சல்பைட்டுகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சல்பைட்டுகள், உடலுக்குள் செல்லும்போது மூச்சு திணறல் ஏற்படும். சுயநினைவை இழந்து கீழே வீழ்வார்கள். அனபைலாடிக் ஷாக் பாதிப்பு ஏற்படும். உடனே மருத்துவ உதவிகளை செய்யவேண்டும்.

மாரடைப்பை மருத்துவத்தில் எப்படி குறிப்பிடுகிறார்கள்?

மையோகார்டியல் இன்ஃபார்க்சன். இதய தசைகளுக்கு ரத்தம் செல்லாமல் தடுக்கப்படும்போது, அந்த செல்கள் இறந்துபோகின்றன. இதனால் உண்டாவதே மாரடைப்பு. அமெரிக்காவில், ஒருமுறை மாரடைப்பு வந்துவிட்டால் நோயாளிகளில் 33 சதவீதம் பேர் அடுத்த இருபது நாட்களில் மரணித்து விடுகிறார்கள். உடனே இறந்துபோகிறவர்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்து வருகிறது. உடலை குறிப்பிட்ட இடைவேளையில் சோதித்துக்கொள்வது நல்லது. மாரடைப்பு அபாயத்தை முன்னரே கண்டறிந்தால் சிகிச்சை செய்வது எளிது.

பாய்சன் ஐவி தாவரம், அனைவருக்குமே ஒவ்வாமை பாதிப்பை ஏற்படுத்துமா?

வயது, மரபணு சார்ந்து யோசிக்கவேண்டும். பொதுவாக மருத்துவ தகவல்கள்படி எண்பத்தைந்து சதவீதம் பேர் ஒவ்வாமை பிரச்னையில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். பாய்சன் ஐவி தாவரத்தின் இலையில் உள்ள விஷம், மனிதர்களின் தோலைப் பாதித்து எரிச்சலை ஏற்படுத்துகிறது. இப்பாதிப்பு ஒருவாரம் வரை நீடிக்கும். தலைவலி, உடல் களைப்பு, காய்ச்சல் ஆகியவை ஏற்படக்கூடும். இலை பட்ட இடத்தை சோப்பால் கழுவி லேக்டோ காலமைன் போன்ற கிரீமை தடவலாம். பாதிப்பு கடுமையாக இரு்ந்தால் மருத்துவமனையை அணுக வேண்டும். 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்