ஹோமியோபதிக்கும் அலோபதிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

 

 

 




 

 

அறிவுப்பற்று
மிஸ்டர் ரோனி

ஹோமியோபதிக்கும் அலோபதிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

அலோபதி, வேதியியலை அடிப்படையாக கொண்டது. இதில், நோயின் அறிகுறிகளை அழுத்த பல்வேறு வேதி சேர்மானங்கள் உதவுகின்றன. ஹோமியோபதி, இயற்பியலை அடிப்படையாக கொண்டது. ஆற்றல் கொண்ட மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். இந்த மருந்துகள் சித்த மருத்துவம் போலவே தாவரம், விலங்கு, கனிமங்களிலிருந்து பெறப்படுகிறது. அலோபதி நோய் அறிகுறிகளை உடலுக்குள் அழுத்துகிறது என்றால், ஹோமியோபதி அதை முற்றாக அழிக்க தீர்க்க முயல்கிறது.

ஹோமியோபதியில் உள்ள மருந்துகளின் பக்கவிளைவுகள் என்னென்ன?

ஆயுர்வேத மருந்துகளில் நேரடி விளைவு நோய் குணமாவது என்றால், அதை உண்ணும்போது வேறு பாதக விளைவுகளும் ஏற்படும் என மறைந்துவிட்ட மருத்துவர் எல் மகாதேவன் கூறியுள்ளார். அலோபதியில் கொடுக்கப்படும் மருந்துகள் கல்லீரலுக்கு செல்கின்றன. அங்கிருந்து பாதிக்கப்பட்ட உடல் பகுதிக்கு சென்று அறிகுறிகளை தீர்க்கிறது. ஹோமியோபதி நரம்பு மண்டலத்திற்கு சென்று சேர்கிறது. இப்படி நோய்க்கு குணம் வருகிறது. ஹோமியோபதியில், எந்த நோய்க்கு மருந்து சாப்பிடுகிறீர்களோ அந்த நோய் பலமடங்கு அதிகரித்து மெல்ல குறையும். இதில் எந்த நேரம், பாதிப்பு எப்படி என்பதை நோயாளி கவனித்து வைத்து மருத்துவரிடம் கூறவேண்டும்.

ஒருவருக்கு வலிப்பு இருக்கிறது என்று ஹோமியோபதி மருத்துவத்தை நாடினால், மருத்துவர் கொடுக்கும் மருந்துகள் வலிப்பை இன்னும் தீவிரமாக்கும். அதைத் தாங்கிக்கொண்டு நோயாளி உயிரோடு இருந்தால் வலிப்பு நோய் குணமாகலாம். எனவே, இந்நோய் உள்ளோர் பெரும்பாலானோர், ஹோமியோவிலிருந்து விலகி அலோபதிக்கு மாறிவிடுவார்கள். எக்சிமா, சொரியாசிஸ் போன்ற நோய்களுக்கு கொடுக்கும் மருந்துகள் கைகள், கால்களில் மரத்துப்போன தன்மையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக  சிசிஜியம் தாய் திராவகம், அர்டிகா உரேன்ஸ் தாய் திராவகம், சீனா தாய் திராவகம், பிளான்டகோ எம் தாய் திராவகம் ஆகிய மருந்துகள், நோயை தீவிரப்படுத்தி பிறகு அதை குறைக்கின்றன. இந்தமுயற்சியில் நோயாளிகளின் கை, கால்கள் வலுலிழந்து உணர்ச்சிகளை இழந்துவிடுகின்றன.

ஹோமியோபதி அனைவருக்கும் உகந்த மருத்துவமுறை கிடையாது. இதை கடைபிடிக்க கடுமையான மனவலிமை தேவை. சில நோய்கள் இதில் குணமாகும். சில குணமாகாது. அல்லாதபோது வேறு மருத்துவ முறைகளுக்கு மாறிக்கொள்ளலாம்.

 
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்