மக்கள்தொகை கட்டுப்பாடு அமலுக்கு வருகிறதா?




girl child







மக்கள்தொகை கட்டுப்பாடு!

பிரதமர் மக்கள்தொகை கட்டுப்பாடு பற்றிய தன் கவலையை சுதந்திர தினத்தன்று வெளியிட்டார். இதைப்பற்றி நாளிதழில் படிக்கும்போது, அருகிலிருந்தவர்கள் நாடோடி மனிதர்கள் எப்படி இத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள் என விவாதித்துக்கொண்டிருந்தனர். உண்மையில் அவர்களது பேச்சில் இருந்தது பேராசையா, பொறாமையா என்று தெரியவில்லை. எதுவாக இருந்துவிட்டுப் போகட்டும். உண்மையில் பேட்டி பச்சாவோ திட்டத்தை இந்தியர்கள் கைவிட்டு ஆண் குழந்தைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளைத் தேடி வருகின்றனர்.

மக்கள் தொகை வளர்ச்சி என்பது 2001-2011 வரையில் 1.64 சதவீதமாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2011 சென்சஸ் படி குறிப்பிடப்பட்ட அறிக்கை. உலகவங்கியின் அறிக்கைப்படி 2001 முதல் 2018 வரை 1.04 என மக்கள் தொகை குறைந்தே வந்திருக்கிறது.

பொருளாதார அறிக்கை 2018-19 படி, பனிரெண்டு மாநிலங்களில் மக்கள்தொகை சதவீதம் 1 எனவே உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உ.பி, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் மக்கள் தொகை வளர்ச்சி சதவீதம் குறைந்து காணப்படுகிறது. தகவல்கள் வட இந்தியாவில்தான் மக்கள்தொகை சதவீதம் அதிகம் என காட்டுகிறது. இந்திய அரசு இதுதொடர்பாக சட்டம் கொண்டு வந்தாலும், பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தை அது பாதிக்கும்படியாகவே இருக்கும்.

 தேசிய சுகாதார திட்டம் 2016-17 படி, குடும்பக்கட்டுப்பாடு திட்டத்திற்காக 577 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. இதில் குடும்பங்களில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் எனில், இனி இந்த எண்ணிக்கை ஒன்றாகும். அந்த ஒரு குழந்தை ஆண் குழந்தையாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை இந்திய அரசு மீண்டும் தொடங்கும்போது, இதுபோன்ற பிரச்னைகளையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா