டாய்லெட் தீக்குளிப்பு!



Image result for vennela kishore



டாய்லெட்டிற்காக தீக்குளிப்பு!

கடன்தொல்லை, காதல் நிறைவேறவில்லை என விரக்தியில் தீக்குளிப்பது சகஜமான செய்தி. ஆனால் டாய்லெட் இல்லை என்ற காரணத்திற்காக உ.பியைச் சேர்ந்த ஒருவர் தீக்குளித்திருக்கிறார் என்றால் நம்புவீர்களா?
உத்தரப்பிரதேசத்தின் நக்லாகுலுரியா பகுதியைச் சேர்ந்த ராபிக்கு அண்மையில் பூனம் என்ற பெண்ணுடன் திருமணமானது. ராபியின் வீட்டில் கழிவறை இல்லாதது பூதாகர பிரச்னையாக எழ, பூனம் கழிவறையை கட்டினால்தான் புகுந்தவீட்டிற்கு வருவேன் என்று கூறிவிட்டு தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவியை திரும்ப அழைத்துவர மாமியார் வீடு சென்றார் ராபி. ஆனால் மாமியார் வீட்டினரோடு விவாதம் சூடேற, உடனே சமையலறைக்கு ஓடி மண்ணெண்ணெய்யை தலையில் கவிழ்த்து தீக்குளித்துவிட்டார். தற்போது அரசு மருத்துவமனையில் 60 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார் ராபி. கழிவறைக்காக களப்பலியா?