மூளையின் சூழ்ச்சி!



Related image


பொய்களை பரப்பும் மூளை!

இணையத்தில் பரப்பும் போலிச்செய்திகளுக்கு மனிதரின் மூளைதான் காரணம் என எம்ஐடி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நம்பிக்கையான நாளிதழ்கள், டிவி சேனல்களை விட செய்திகளை வேகமாக தருவதில் சமூகவலைதளங்கள் முன்னணியில் இருந்தாலும் அவை சரியாக இருப்பதில்லை.

2006-17 வரையிலான ட்விட்டர் தகவல்களை ஆராய்ந்த சோரோஸ் வோசோகி, டெப்ராய், சினன் அரல் உள்ளிட்ட எம்ஐடி குழுவினர், 30 லட்சம் பேர் அனுப்பிய ஒரு லட்சம் தகவல்களை ஆராய்ந்தபோது அவை 4.5 மில்லியன் முறைகள் பகிரப்பட்டிருந்ததை ஆராய்ச்சி வழியாக கண்டறிந்தனர். இத்தகவல்களை தகவல்சரிபார்ப்பு (snopes.compolitifact.com, factcheck.org) தளங்களின் வழியே ஆராய்ந்தபோது போலித்தகவல்கள் பரவும் வேகம் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

குறிப்பாக 2013, 2015, 2016  ஆகிய காலகட்டங்கல் வதந்தி தகவல்கள் 70 சதவிகிதம் வேகமாக பரவி மக்களை குழம்பியுள்ளன. இந்தியாவில் கும்பல் படுகொலைகள் நிகழ வாட்ஸ்அப் செய்திகளே காரணம் என கூறுவது ஞாபகம் வருகிறதா? “கடவுளின் அருள் செய்திகளையும் தாண்டி மக்களின் வாழ்வைக் குலைக்கும் அதிர்ச்சியூட்டும் போலிச்செய்திகள் பெருமளவு பதட்டத்தை ஏற்படுத்துவதில் முதலிடம் வகிக்கின்றன” என்கிறார் லெய்டன் பல்கலைக்கழக அரசியல் பேராசிரியரான ரெபெக்கா ட்ரோம்பிள்.