நீரின் ஏற்படும் மின்னோட்டத்தை அளவிடும் மீட்டரை உருவாக்கியவர்! - சன்டாரியோ சன்டாரியோ

 













சன்டாரியோ சன்டாரியோ ( Santorio santorio 
1561-1636)

இத்தாலி நாட்டின் ஸ்லோவேனியாவில், 1561ஆம் ஆண்டு பிறந்த மருத்துவர், ஆராய்ச்சியாளர். அன்றைய புகழ்பெற்ற பாடுவா பல்கலைக்கழகத்தில் (University of Padua.) மருத்துவக்கல்வி கற்றார்.  1582ஆம் ஆண்டு பட்டம் பெற்றபிறகு, மருத்துவராக சில ஆண்டுகள் வேலை செய்தார். வெனிஸ் நகரில் கலீலியோவை சந்தித்து பேசியது முக்கியமான நிகழ்ச்சி. அதற்குப் பிறகுதான் சன்டாரியோ கண்டுபிடிப்பில் கவனம் செலுத்தினார். தெர்மாமீட்டருக்கு முன்னோடியான தெர்மாஸ்கோப் (Thermoscope) என்ற கருவியை  உருவாக்கினார். இக்கருவியில் எண்களை சேர்த்து அன்றே வியப்பூட்டியவர். நோயாளிகளின் நாடித்துடிப்பைக் கணிக்க பல்சிலோஜியம் (Pulsilogium) எனும் கடிகாரத்தை உருவாக்கினார். கணிதம், இயற்பியல் ஆகிய துறைகளின் கருத்துகளையும் மருத்துவத்திற்கு பயன்படுத்த முயன்றார். 

பின்னாளில் நீரில் ஏற்படும் மின்னோட்டத்தை கணிக்கும் மீட்டரையும் உருவாக்கினார். மருத்துவத்துறையில் சான்டாரியோ செய்த சோதனைகள் அனைத்துமே முக்கியமானவை. எடையிடுவதற்கான நாற்காலி ஒன்றை தானாகவே உருவாக்கி வந்தார். 1611ஆம் ஆண்டில் மருத்துவக்கொள்கைகள் சார்ந்த பாடத்தை பாடுவா பல்கலைக்கழத்தில் கற்றுத்தரும் பேராசிரியராக பணியாற்றினார். பாடத்தை விட ஆராய்ச்சிக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார் என மாணவர்கள் புகார் தர, பணியை விட்டு விலகினார். பிறகு, தனது மருத்துவர் பணியை வெனிஸ் நகருக்குச் சென்று தொடர்ந்தார். 1614ஆம் ஆண்டில் வெளியிட்ட வளர்சிதை மாற்றம் பற்றிய அறிக்கை (Medicina statica) பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.வெனிட்டியன் மருத்துவக்கல்லூரி தலைவராகப் பணியாற்றினார். 1639ஆம் ஆண்டு சன்டாரியோ காலமானார். 

 http://exhibits.hsl.virginia.edu/treasures/santorio-santorio-1561-1636/

கருத்துகள்