மண்ணிலுள்ள அமிலங்கள், பாதுகாக்கப்பட்ட உயிரியல் பகுதி! - தெரியுமா?

 












மண்ணிலுள்ள அமிலங்கள்!

இந்தியாவில் உள்ள அனைத்து நிலங்களும் ஒரேமாதிரியான சத்துக்களை கொண்டிருப்பவை அல்ல. சில இடங்களிலுள்ள நிலங்களில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். மண்ணிலுள்ள அமிலத்திற்கு எதிரிடையான வேதிப்பொருளை மண்ணில் பயன்படுத்தும்போது மண், பயிர்களை விளைவிப்பதற்கு ஏதுவான நிலையைப் பெறும். பெரும்பாலான பயிர்கள் அமிலம், காரம் என அதிகம் மிகாத மண்ணில்தான் சிறப்பாக விளைகிறது. 

மண்ணில் தாவரங்கள் வளர்வதற்கும் அதிலுள்ள அமில, கார அளவுகள் முக்கியமானவை. ஆசியா மற்றும் அமெரிக்காவில் அதிகம் விளையும் பூ தாவரம், ஹைட்ரேஞ்சியா (Hydrangea). இந்த தாவரம் அமிலம் நிரம்பிய மண்ணில் விளைந்தால், நீலநிற பூக்களும், காரம் நிரம்பிய மண்ணில் விளைந்தால் ரோஸ் நிற பூக்களையும் பூக்கின்றன. மண்ணிலுள்ள அமில, கார அளவை பிஹெச் அளவுகோல் மூலம் எளிதாக கணக்கிடலாம். 

மேற்குலகில் நிலத்திலுள்ள அமிலத்தன்மையை சீர்படுத்த சுண்ணாம்பை பயன்படுத்துகின்றன. இதன் விளைவாக, நிலத்தின் அமிலத்தன்மை நடுநிலையாக பிஹெச் 7 என்ற அளவுக்கு மாறுகிறது. 








பாதுகாக்கப்பட்ட உயிரியல் பகுதி (Biome Domes

உலகில் பாலைவனங்கள், காடுகள் என பல்வேறு நிலப்பரப்புகள்  உண்டு. குறிப்பிட்ட தாவரங்கள், விலங்குகளை மட்டுமே கொண்டு அமைக்கப்படும் சிறப்புபகுதிக்கு, பயோம்ஸ் என்று பெயர். தாவரங்கள், விலங்குகள் பற்றி ஆய்வுகளை நடத்த ஆய்வாளர்கள் இத்தகையை பகுதிகளை செயற்கையாக உருவாக்குகின்றனர். இங்கிலாந்தின் கார்ன்வெல்லில் தி ஈடன் புராஜெக்ட் இப்படி உருவாக்கப்பட்டதே. இப்படி செயற்கையாக உருவாக்கி அழிவின் விளிம்பில் உள்ள தாவரங்களை காக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 

அரிசோனா மாகாணத்தில் பயோஸ்பியர் 2 எனும் செயற்கை உயிரியல் பகுதி உருவாக்கப்பட்டது. மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள்  இங்கு இருந்தன. விண்வெளியில், இதைப்போல சூழலை உருவாக்க முடியுமா என்ற சோதனையும் செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகள் நடந்த சோதனையில், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. 
 
pinterest

கருத்துகள்