பழங்குடி மக்களை வேட்டையாடி ரத்தம் குடிக்கும் மர்மத் தாவரம் - மரணமுள் காமிக்ஸ்





Lion-Muthu Comics: கேள்விகள் இன்னும் ...
லயன் முத்து காமிக்ஸ்



டெக்ஸ் வில்லர் - கார்சன் துப்பறியும்

மரணமுள்

பழங்குடிகள் வாழும் இடத்தில் நடக்கும் விண்கல் மோதலும் அதன் பொருட்டாக அவர்களுக்கு நேரும் ஆபத்துகளும் தான் கதை. விண்கல் பழங்குடிகள் வாழும் இடத்தில் வந்து மோதுகிறது. அதில் ஒட்டிக்கொண்டு வரும் வேற்றுகிரகவாசி தாவரம், உருண்டையாக முட்களை கொண்டுள்ளது. இது பிற உயிர்களைக் கொன்று அதன் ரத்தத்தைக் குடித்து வாழும் பழக்கம் கொண்டது. முதலில் தாவரம்தானே பலரும் நினைத்துவிட, இரவுகளில் பழங்குடி மக்களை வேட்டையாடத் தொடங்குகிறது. இதன் காரணமாக பலரும் வெயிலில் காய வைக்கப்பட்ட கருவாடு போல ரத்தம் இழந்து பலியாகின்றனர். இதனை இரவுக்கழுகு டெக்ஸ் வில்லருக்கு பழங்குடி மக்களின் தலைவர் தெரிவிக்கிறார். டெக்ஸ் வில்லர் இந்த பிரச்னையை அவருக்கு தெரிந்த டாக்டர் ஒருவரிடம் கொண்டு சென்று தீர்வு தேடி மக்களைக் காப்பாற்றுவதுதான் கதை.

டெக்ஸ் வில்லருக்கு இதில் ஆக்சன் காட்சிகள் ஏதுமில்லை. வருகிறார். ஆராய்கிறார். முள் உருண்டைகளை எடுத்துக்கொண்டு டாக்டரிடம் செல்கிறார். அவர் கொடுக்கும் எச்சரிக்கை மட்டுமே காமிக்சில் ஆறுதலாக இருக்கிறது. மற்ற விஷயங்களை அவரோடு பணிபுரியும் பிறர் தானாகவே தெரிந்துகொண்டு அந்த தாவரங்களை எதிர்கொள்ள தயாராகி விடுகின்றனர்.

இதில் டெக்ஸ் வில்லரின் ஆஸ்தான டாக்டர், வேற்றுலக தாவரத்தை ஆராய்ந்து ஏதேனும் விஷயங்களைக் கண்டுபிடிக்கலாம் என்று நினைக்கிறார். ஆனால் அதற்குள் காவல்துறை முந்திவிடுகிறது. தாவரம் பற்றிய பகுதிகள், அதன் பழக்க வழக்கங்கள் வாசிக்க சுவாரசியமாக இருக்கின்றன. மற்றபடி டெக்ஸின் சாகசத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிச்சம்.

கோமாளிமேடை டீம்



கருத்துகள்