டிஎன்ஏ சோதனைகள் ஆபத்தானவையா? -இங்கிலாந்தில் தொடரும் கண்காணிப்பு!




Image result for dna test
மெடிக்கல் நியூஸ் டுடே




அதிகரிக்கும் டி.என்.ஏ. சோதனைகள்!


செய்தி: அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் டி.என்.ஏ வை சோதனை செய்யும் சாதனங்கள் விற்கப்படுகின்றன. இச்சோதனைகளின் விளைவுகள் பற்றிய விவாதங்கள் மருத்துவ வட்டாரங்களில் தீவிரமாகியுள்ளன.

இங்கிலாந்தில் டி.என்.ஏ. சோதனைகளைச் செய்வதற்கான சாதனங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. அங்குள்ள தகவல் கமிஷனர் அலுவலக தகவல்படி, தோராயமாக 40 லட்சம் மக்கள் டி.என்.ஏ சாதனங்களை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வணிகத்தில் மூன்று தனியார் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.

 டி.என்.ஏ. சோதனை தவறல்ல; முறையான பாதுகாப்பு ஏற்பாட்டுடன் இதனைச் செய்வது அவசியம்.  தனியார் நிறுவனங்கள் மக்களின் தகவல்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் தந்து பராமரிக்கிறார்கள் என்ற பயம், புகார்களாக மாறியுள்ளன. இதன் விளைவாக,  தகவல் கமிஷனர் அலுவலகத்திற்கு பத்திற்கும் மேற்பட்ட புகார்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

இதில் என்ன பிரச்னை வர வாய்ப்புள்ளது? இரண்டாம் நிலை நீரிழிவு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் இந்தச் சோதனை செய்வது ஆபத்தை ஏற்படுத்தும் என அறிவியல் வட்டாரத்தினர் எச்சரிக்கின்றனர்.

 சோதனை முடிவுகளை நேரடியாக தொடர்புடையவரே படிப்பது தேவையற்ற பயம், பதற்றத்தை ஏற்படுத்தும். மேலும் சேகரிக்கப்படும் தகவல்கள், காப்பீட்டுநிறுவனங்களிடம் விற்கப்படுவது மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். தனியார் நிறுவனங்களில் இரண்டு அமெரிக்காவையும், ஒன்று இஸ்ரேலையும் சேர்ந்தவை. இவை தமது மருத்துவச் சோதனை மூலம் சேகரிக்கும் தகவல்களை அந்தந்த நாடுகளிலேயே சேமிப்பது போல பாதுகாப்புச்சட்டங்களை வல்லுநர்கள் கோருகிறார்கள்.

ஐரோப்பாவில் கடந்த ஆண்டு மே மாதம் தகவல் பாதுகாப்புச்சட்டம் (GDPR) அமலானது. இதைப்போன்று கடுமையான விதிகள் இல்லாத இந்தியாவில் டி.என்.ஏ. நிறுவனங்கள் சேவைகளைத்தொடங்கும்போது, பாதிப்புகள் கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது.

 ”டி.என்.ஏ சோதனைகளை மக்கள் எத்தனை பேர் செய்கிறார்கள் என்று அரசு உறுதியான தகவல் அறிக்கைகளை வெளியிடவில்லை. ஐரோப்பிய யூனியன் தகவல் பாதுகாப்புச்சட்டம் , டி.என்.ஏ சோதனைகள் பற்றி  விழிப்புணர்வைத் தரும்” என்கிறார் லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டெபி கென்னட்.

தகவல்: New Scientist