இந்தியாவுக்கு மாபெரும் களங்கம் ஏற்படுத்திய ஆர்எஸ்எஸ் தொண்டன்!

 











இந்தியாவுக்கு மாபெரும் களங்கம் ஏற்படுத்திய ஆர்எஸ்எஸ் தொண்டன்! 


அனைவரும் ஒற்றுமையாக இருங்கள், கூட்டாக சேர்ந்து பெரிய விஷயங்களை சாதிக்கலாம் என்று கூறுபவர்களை விட இந்தியாவில் பிரிவினைவாதிகள் கிராக்கி அதிகம். ரிசர்வ் வங்கி, நீதிமன்றம், தேர்தல் ஆணையம், காவல்துறை, உளவு அமைப்புகள் என அனைத்திலும் பாகுபாடு பார்க்கும் ஆட்களே அதிகமாக உள்ளனர். 


அதிலும் ஆர்எஸ்எஸ் தொண்டரான மோடியே பிரிவினைவாதிகளுக்கு தலைவராக செயல்பட்டு வருகிறார். அவரது ஆட்சியின் நிர்வாக செயலின்மை பற்றி பேசினால் உடனே ரூ.500 கோடி ராமர்கோவில், காசியில் செய்த வழிபாடு, உண்ணாநோன்பு இருந்து செய்த கோவில் தரிசனம், முந்தைய பிரதமர்கள் செய்த தவறு என பேசுவாரே ஒழிய பத்து ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்து என்ன செய்தார். அவரது அமைச்சரவைக் குழு செய்த மக்களுக்கான நன்மை என எதையும் பேசமாட்டார். செய்த அனைத்துமே கலவரங்கள், படுகொலைகள், சிறுபான்மையினரின் சொத்துகளை அழித்ததுதான். பிறகு என்ன சொல்வது?



முஸ்லீம்களை ஜென்ம எதிரியாக கருதும் பயங்கரவாத அமைப்பு ஆர்எஸ்எஸ். வெளியில் தன்னை கலாசார அமைப்பாக காட்டிக்கொண்டு கலவரம், பிரிவினை, மசூதிகளை இடிப்பது, சிறுபான்மையினரை படுகொலை செய்வது, வெடிகுண்டுகளை தயாரித்து மக்கள் மீது வீசுவது ஆகியவற்றை செய்து வருகிறது. இந்த அமைப்பில் தொண்டராக சேர்ந்த பிரதமர் மோடி பல்லாண்டுகளாக பாடுபட்டு வந்தவர். எனவே, அவர் வெறுப்பு பேச்சு பேசுகிறார் என்பதில் ஆச்சரியமில்லை. பேசாவிட்டால்தால் ஆச்சரியம். முதல்வர், பிரதமர் என அரசு பதவிகளைப் பற்றி கவலைப்படாமல், பொறுப்பையும் ஏற்காமல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கலவரக்கார தொண்டனாகவே மோடி இருக்கிறார். 


அவரும் அவரது பக்தர்கள் கூட்டமும் இடையறாது பஜனை பாடுவது முஸ்லீம்கள் அதிக பிள்ளைகளை பெற்றுக்கொள்கிறார்கள் என்பது.... இதை பிரசாரம் செய்ய அமெரிக்காவின் மெட்டா நிறுவனத்திற்கும் காசு கொடுத்து வாட்ஸ்அப் செயலியை கையகப்படுத்தி போலிச்செய்திகளை அரசு பரப்பி வருகிறது. இதை படிப்பவர்கள் மெல்ல சிறுபான்மையினர் மீது வெறுப்பு கொள்ளத் தொடங்குகிறார்கள். அதிக பிள்ளைகள் பெறுகிறார்கள் என பேசும் பிரதமர் மோடிக்கு, அவரது கூடப்பிறந்த சகோதரர்கள்  ஆறுபேர் உள்ளனர். இப்போது தரவுகளைப் பார்ப்போம். 


ராஜஸ்தானில் ஏப்ரல் 21ஆம் தேதியன்று நடந்த தேர்தல் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி, இந்தியாவின் செல்வத்தை ஊடுருவல்காரர்களுக்கு அளிக்க முயல்கிறது. இந்தியாவில் ஊடுருவியுள்ள முஸ்லீம்கள் அதிக பிள்ளைகளைப் பெறுகிறார்கள் என வெறுப்பையும் வன்மத்தையும் கக்கியுள்ளார்.  இந்தியா மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி பதிமூன்று ஆண்டுகள் ஆகின்றன. தற்போது அதுபற்றிய நம்பகமான தகவல்கள் ஏதும் இல்லை. 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை 121 கோடியாக இருந்தது. அப்போது முஸ்லீம்களின் எண்ணிக்கை 14. 2 சதவீதமாக இருந்தது. 


2001ஆம் ஆண்டு எடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 13.81 கோடியாக இருந்தது. அன்றைய மக்கள்தொகை எண்ணிக்கை 102.8 கோடி. 2001 -2011 ஆம் காலகட்டத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 24.69 சதவீதமாக உள்ளது. இது, வரலாற்றிலேயே குறைவாக பதிவான மக்கள்தொகை சதவீதமாகும். 1991-2001 காலகட்டத்தி்ல் முஸ்லீம்களின் எண்ணிக்கை 29.49 சதவீதமாக அதிகரித்தது. 


வெறுப்பையும், வன்மத்தையும் உமிழ்ந்து அதன் வழியாக சிறுபான்மையினரின் உயிருக்கும், தொழிலுக்கும், வாழ்க்கைக்கும் ஊறு விளைவித்து தேர்தலில் வெல்லலாம். நாளை ஆட்சி அரியணையிலும் அமரலாம்.  பன்மைத்துவம் கொண்ட இந்திய மக்களுக்கான உண்மையான தலைவராக மோடி ஒருக்காலும் ஆக முடியாது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டில் இந்திய பிரதமராக மோடி இருந்தால், பாக்.கின் ஐஎஸ்ஐ செய்யமுடியாத விஷயங்களை, ஆர்எஸ்எஸ் செய்து முடித்துவிடும் என உறுதிகொள்ளலாம். 


இந்தியாவின் நவீன சிற்பிகள் உருவாக்கிய ஜனநாய அமைப்புகள் முதுகெலும்பு ஒடிந்து தெருவில் வீசப்பட்டுவிட்டன. ஊடகங்கள், உண்மையை விலைக்கு விற்று விபச்சாரத்தில் இறங்கிவிட்டன. இனி இந்தியாவில் என்னதான் பாக்கியிருக்கிறது? மக்களின் உயிர்கள் மிச்சமிருக்கிறதே... அதை குடிக்கவே கலவரக்காரர்களை  உசுப்பிவிடுகிறது ஆர்எஸ்எஸ் தலையாய தொண்டனின் குரல்..... இந்தியா இந்த இருட்டிலிருந்து வெளிச்சத்தைப் பார்க்க கற்றுக்கொள்ளவேண்டும். 

ஐஇ

மூலத்தை தழுவியது. 

cartoon stock

கருத்துகள்