உலகப்போரின் தொடக்கம்!

 













ஐரோப்பாவில் உலகப்போர் தொடங்கிய காலகட்டம் 1914 - 1918. இந்த வகையில் உலகப்போர் தொடங்கி 7 கோடிக்கும் அதிகமான படையினர் போரில் கலந்துகொண்டனர். இப்போர் நடைபெறுவதற்கான சூழல் படுகொலை ஒன்றால் உருவானது.  

1914ஆம் ஆண்டு ஜூன் 28 அன்று, ஆஸ்திரிய ஹங்கேரிய அரசர் ஃபிரான்ஸ் ஃபெர்டினாண்ட் படுகொலை செய்யப்பட்டார். காவ்ரிலோ பிரன்சிப் என்ற போஸ்னியா தேசியவாதி தான் கொலைக்கு காரணம். ஆஸ்திரிய ஆட்சியாளர்களிலிருந்து, போஸ்னியாவை மீட்பதுதான் காவ்ரிலோ பிரின்சிப் சார்ந்த  பிளாக் ஹேண்ட் அமைப்பின் நோக்கம். 

பிறகுதான் செர்பியா மீது ஆஸ்திரியா - ஹங்கேரி நாடுகள் போரை அறிவித்தன. 1914ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று போர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. போரில் இரு தரப்புகள் உருவாயின. ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் ஒரு தரப்பாகவும், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, இத்தாலி ஆகியோர் ஒரு தரப்பாகவும் மாறி போரிட்டனர். 

ஜெர்மனியைப் பொறுத்தவரை இது ஐரோப்பாவை கையகப்படுத்த சிறந்த வாய்ப்பாக நினைத்தது. எனவே, பிரான்சை தாக்க படைகளை அனுப்பியது. படைகளை பெல்ஜியம் வழியாக கொண்டு சென்றது. ஆனால் பெல்ஜியம், போரில் நடுநிலை வகிக்க நினைத்தது. எனவே, ஜெர்மனியின் படைகளை உள்ளே அனுமதிக்கவில்லை. ஜெர்மனி நாட்டுக்கு வேறுவழியில்லை. எனவே பலவந்தமாக தனது படைகளை உள்ளே அனுப்பியது. இந்த நேரத்தில் அடுத்து நாம்தான் பலியா என இங்கிலாந்துக்கு பீதியில் முகம் வெளுத்துப்போனது. எனவே இங்கிலாந்து நாடு ஆகஸ்ட் மாதம் போரில் நுழைந்தது. பிறகுதான் முதல் உலகப்போர் என உலகமே இதனைக் கூறத் தொடங்கியது. நாமும் இதைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறோம். 

Tell me why



கருத்துகள்