விருது வெற்றிக்கு எழுத்துலகில் இடம் இல்லை! - இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ

 












கீதாஞ்சலி ஸ்ரீ

இந்தி மொழி எழுத்தாளர் 





ரெட் சமாதி என்ற பெயரில் கீதா எழுதிய நூல் டாம்ப் ஆஃப் சாண்ட் என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. டெய்ஸி ராக்வெல் என்பவர் இதனை மொழிபெயர்த்தார். இந்த நூலுக்கு தற்போது சர்வதேச புக்கர் பரிசு கிடைத்துள்ளது. 64 வயதான கீதாஞ்சலியை சந்தித்துப் பேசினோம். 

நீங்களே உங்கள் நூலை ஆங்கிலம், இந்தி மொழியில் எழுதியுள்ளீர்கள். தற்போது விருதுபெற்ற நாவல் கூட ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உங்களுடைய படைப்புகளை நீங்களே மொழிபெயர்க்க ஆசைப்பட்டுள்ளீர்களா?

என்னுடைய கிரியேட்டிவிட்டியான எழுத்து என்பது இந்தி மொழியில்தான். பிரேம்சந்தின் சுயசரிதை நூலை ஆங்கிலத்தில் எழுதினேன். ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்பதைவிட நான் இந்தியில் புதிதாகவே நூலை எழுதிவிட முடியும். 

டாம் ஆஃப் சாண்ட் நாவல், எப்படி ஒருவரின் இறந்தகாலம் தினசரி வாழ்க்கையை மாற்றுகிறது, வடிவமைக்கிறது என விவரிக்கிறது. 60 ஆண்டுகள் கழித்தாலும் கூட இந்த விளைவுகள் நடைபெறுகின்றன. வரலாற்றோடு ஒருவர் சரியான உறவை எப்படி பேணுவது?

நாவலில் வரும் இறந்தகாலம் என்பது 50-60 ஆண்டுகள் ஆகும். இறந்த காலத்தின் பாதிப்புகள் நம்மை அறியாமல் நம்மை பாதிக்க கூடியவை. இறந்த காலத்துடன் இருக்கும் உறவு என்பதை நல்லது, கெட்டது, எது சரி, தவறு என உணர்ந்து புரிந்துகொள்வது முக்கியம். அப்போதுதான் இறந்தகாலத்துடன் இருக்கும் உறவு ஆரோக்கியமானதாக இருக்கும். 

ஐரோப்பியர், அமெரிக்கர் ஏன் இந்திய வாசகர்களுக்கு கூட இந்தி இலக்கியம் என்பது அந்நியமானதுதான். அவர்கள் உங்கள் நூலை வாசிக்கவேண்டுமெனில் எந்த நூலில் இருந்து வாசிக்கவேண்டும்?

கோதான், தமஸ், ராக் தர்பாரி அதா காவோன், மைலா ஆஞ்சல், டில் ஓ டேனிஸ் ஜிண்டாஜினாமா ஆகிய நூல்களை வாசிக்கலாம். 

தற்போது என்ன வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள். புக்கர் பரிசு மூலம் இலக்கிய வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.  உங்களுடைய சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஏதேனும் திட்டமிருக்கிறதா?

நீங்கள் கூறும் இலக்கிய வெற்றி என்பதற்கு இங்கு இடமில்லை. நான் நாவல் ஒன்றை எழுதி  முடித்துள்ளேன். அதை வெளியிட உள்ளேன். எதிர்காலத்தில் செய்யும் மொழிபெயர்ப்புகள் பற்றி ஏதும் திட்டமிடவில்லை. 

ஆதித்யா மணி ஜா

இந்தியா டுடே 


கருத்துகள்