மறுசுழற்சிக்கு முட்டுக்கட்டை போடுவது யார்?








மறுசுழற்சி என்றவுடன் சூழலியலாளர்கள் மகிழ்ந்துபோவார்கள். ஆனால் அம்முயற்சி எளிதில் கைகூடாது என்பதுதான் சோகம். அதற்கு தடையாக நிற்பது சிறப்பங்காடி ஆட்கள்தான்.


பிளாஸ்டிக் பை தராவிட்டால் சூழல் பிரச்னைகள் குறைந்துவிடுமா இல்லை என்பதே நிஜம். லேஸ், குர்குரே உள்ளிட்ட பாலீதின் பைகள் லேமினேட் செய்யப்பட்ட பிளாஸ்டிக் ரக பைகள் இவைகள் எப்படி மண்ணில் செரிமானம் ஆகும் என்கிறார் மறுசுழற்சி சங்கத் தலைவர் கிரெய்க் கர்டிஸ்.


இங்கிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு இப்போது தலைவலி தொடங்கிவிட்டது. மறுசுழற்சி செய்யும்  பிளாஸ்டிக்குகளுக்கு பிரச்னை இல்லை. ஆனால் அதில் 30 சதவீதம்தான் மறுசுழற்சி செய்யமுடியும் என்ற கண்டுபிடித்தால் அதற்கு ஏராளமாக வரி போட முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை பிலிப் ஹாலந்து வெளியிட்டுள்ளார்.

ஐஸ்லாந்து,  இந்தப் பிரச்னையை சீரியசாக எடுத்துக்கொண்டு 2023 ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் இல்லாத தேசத்தை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. டெஸ்கோ, லிடில் ஆகிய சூப்பர்மார்க்கெட் நிறுவனங்களும் இதில் மறுசுழற்சிக்கான வேலைகளைத் தொடங்கியுள்ளன.

ஆண்டுதோறும் இங்கிலாந்தில் 7.3 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. இதில் 85 சதவீத கழிவுப்பொருட்கள் வீடுகளிலிருந்து பெறப்படுகின்றன. மறுசுழற்சி செய்யலாம் என்று கூறும் பொருட்களையும் எளிதாக மாற்ற முடியாது. அதனை எந்த வகை பிளாஸ்டிக் என அறிய சிறிது தீப்பற்றி வைத்தால் தெரிந்துவிடும் என்கிறார் கர்ட்டிஸ்.


ஒரு பிளாஸ்டிக்கை வேண்டாம் என்று கூறி மற்றொன்றை அனுமதிப்பது இதில் குழப்பம் ஏற்படுத்துகிறது. மேலும் ஒவ்வொன்றுக்கும் ஒரு கௌன்சில் என அனுமதி பெற்று அமல்படுத்துவதற்குள் கழிவகள் அதிகரித்து விடுகின்றன.


நன்றி: கர்ட்டிஸ்