சுவையூட்டப்பட்ட தக்காளி ரெடி!

மரபணு மாற்றப்பட்ட தக்காளி!


தக்காளி முக்கியமான காய்கறி என்பதில் சந்தேகமில்லை. நாட்டுத்தக்காளி என்பது பழுப்பதும் தெரியாது, கெட்டுப்போவதும் தெரியாது. எனவே ஷெல்ஃபில் வைத்தால் காலகாலத்துக்கும் கண்ணுக்கு இனிமையாக அப்படியே இருக்கவேண்டும். அப்போதுதானே லாபம் பார்க்க முடியும். இதற்காகவும் நோய்த்தாக்குதல்களைக் குறைக்கவும் மரபணு மாற்றப்பட்ட தக்காளிகளை உருவாக்கினர்.


பாய்ஸ் தாம்சன் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் நாட்டுத்தக்காளியின் மணம், சுவையைக் கொண்ட 725 என்ற மரபணுக்களைக் கொண்ட தக்காளி இது. 4873 மரபணுக்களைக் கண்டறிந்து அதிலிருந்து இதனை உருவாக்கி உள்ளனர்.

விவசாயிகள் இதன்மூலம் சுவையான தக்காளிகளை உருவாக்கலாம்.  நாங்கள் உருவாக்கிய தக்காளிகளின் வரிசை 2012 இல் வெளியானது. 35 ஆயிரம் மரபணுக்களை ஆராய்ந்துள்ளோம். இவற்றை வரிசைப்படி பட்டியலிட்டுள்ளோம். இவ்வகையில் 166 வரிசைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

புதிய மரபணுக்கள் மூலம் உருவாக்கியுள்ள தக்காளிகளை நீங்கள் பயிரிட்டு எலைட் தக்காளிகளை உருவாக்கலாம். மேலும் இதில் நோய்த்தாக்குதலும் குறைவாக இருக்கும் என்கிறார் அறிவியலாளர் ஜேம்ஸ் ஜியோவன்னோனி.

நன்றி: பிசிக்ஸ்.ஆர்க்