உடலைக் கிழித்து, எலும்பை உடைத்து இன்பம் அனுபவித்தால் சுகம்! - ரத்தசாட்சி - அசுரகுலம் 3

 







வாழ்க்கையை சுவாரசியப்படுத்துவது எது? மிக்சிங்கிற்காக பயன்படுத்தும் பொடாரன் கம்பெனியின் பச்சை டிலோ என்று பதில் சொல்லக்கூடாது. அப்படி கலந்து குடித்தால் மகிழ்ச்சி. அதுதான் மகிழ்ச்சி என மனம் கற்பனை செய்கிறதே அதுதான். அந்த கற்பனைதான் வாழ்க்கை, வறட்டென காய்ந்த தேங்காய் நார் போல இழுத்தாலும் இசைவாக நம்மை வாழ வைக்கிறது.

நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்திலும் இறந்தகாலத்தின் சுவடுகள் உண்டு. அந்த அனுபவங்களை வைத்துத்தான் நிகழ்காலத்தை அணுகுகிறோம். இதை ஓஷோ, ஜேகே என அனைவருமே தவறு என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் அப்படி எளிதாக நினைவுகளை, கற்பனைகளை கழற்றி எறிவது சாத்தியமானதாக என்ன? சில விஷயங்களை கற்பனை செய்துகொண்டு அதிலிருந்து மீண்டு வருகிறோம். ஒரு கட்டத்தில் கற்பனை மகிழ்ச்சி குறைந்துபோய் லைவாக செய்யலாமே என நினைக்கும்போதுதான் பிரச்னை தொடங்குகிறது. ஆசை என்பது படங்கள், காட்சிப்படம், மனிதர்கள் என தூண்டப்பட்டு கொண்டே இருக்கிறது. காம வேட்கையுடன் ஒருவர் குற்றங்களை செய்யத் தொடங்கினால் காம கொலைகாரர்கள் வேட்டை ஆரம்பம் என தீர்மானித்துக்கொள்ளலாம்.

ராபர்ட் பாபி லாங். வயது 31. காகாசிய நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு மனதில் பெண்கள் மீது பெரும் வேட்கை. உடலுறவு கொள்வதுதான் வாழ்நாள் லட்சியம். ஆனால் அதை சைவமாக செய்யவெல்லாம் விருப்பம் இல்லை. காட்டுத்தனமாக குறியை இயக்கி மாண்வரி அல்குலை குலைநடுங்க வைப்பதே நோக்கம். அதற்காக என்ன செய்தார்? எளிமையாக ஒரு நாளிதழை வாங்கினார். அதில் வரும் கிளாசிபீல்ட் பகுதியைப் பார்த்தார். வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை தேர்ந்தெடுத்தார். வார நாட்கள் ஏழுதானே அதற்கேற்ற பட்டியலிட்டு பெண்களை வல்லுறவு செய்யத் தொடங்கினார். 50க்கும் மேற்பட்ட பெண்களுடன் தந்தியில் சொல்லுவது போல உல்லாசம் அனுபவித்தார். ஆனால் அந்த பெண்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. முழுக்க வலிதான் அவர்களுக்குப் பரிசு.

பாபியின் குறி, பார்கள், கிளப்புகள் ஆகியவற்றில் நடனமாடும் பெண்கள், விலைமாதுக்கள். இவர்களை கொன்றால் பெரும்பாலும் ஏன் என்று கேட்க ஆட்களே இருக்கமாட்டார்கள். போலீசிலும் புகார் செய்யமாட்டார்கள். அதற்குள் இன்னும் நான்கு பேரை ருசி பார்க்கலாமே?

பெண்களை பிடித்து கயிற்றால் கைகளை பின்புறமாக அமெரிக்க போலீசார் வளைப்பார்களே அப்படி வளைத்து கட்டுவார் பாபி. பிறகு, பெண்ணின் உடைகளை கிழித்தெறிந்துவிட்டு சமாச்சாரத்தை தொடங்குவார். அவருக்கு உடலுறவு உற்சாகமாக மாற மாற பெண் வலியால் அலறத் தொடங்குவார். பின்னே கத்தியால் உடலை கீறி குத்தியபடியே முகத்தில் அறைந்தபடியே உறவு கொண்டால் எப்படியிருக்கும்? இதனால் இறந்துபோன பெண்களுக்கு பெரும்பாலும் தாடை எலும்பு, மார்பெலும்பு உடைந்து இறந்துபோய் இருப்பார். கழுத்தில் கயிற்றைக் கட்டி தனக்கு இசைவாக உடலை வைத்துக்கொண்டு உறவு கொள்வார் பாபி. பெரும்பாலும் இறந்துபோன உடல்தான் வல்லுறவு இசைவாக இருக்கும் என்பது அவரது நம்பிக்கை. இப்படி மூன்று கொலைகளை செய்தார். ஆனால் ஒரு பெண்ணை வல்லுறவு செய்துவிட்டு என்ன நினைத்தாரோ உயிரோடு விட்டுவிட்டார். அந்த தவறு காரணமாக அந்த பெண் நேராக போலீசுக்கு வந்து இப்படி இப்படி ஆச்சுங்க என தந்தி காப்பி ரைட்டர் போல பிரமாதமாக எழுதிக்கொடுத்துவிட, காவல்துறை நம்மையே மிஞ்சும் கிராதகனா என வலைவீசி தேடி பாபியை பக்குவமாக பிடித்துவிட்டது.

பாபிக்கு ஆண் என்ற எண்ணம் தீவிரமாக இருந்தது. எனவே, பெண்களை பெரிதாக மதிக்கவில்லை. அவர்களை அடக்கியாள வேண்டும் என்று நினைத்தார். அவரின் செயல்பாடுகளில் இருந்து உளவியலாளர்கள் உருவியெடுத்து நமக்கு தரும் கோட்பாடு இதுதான். பாபி பெரிதாக காவல்துறையுடன் மல்லுக்கட்டவெல்லாம் இல்லை. காவல்துறையிடம் பத்து கொலைகளுக்கான ஆதாரங்கள் இருந்தன. எனவே, பிகு செய்யாமல் நான்தான் செஞ்சேன் என ஒப்புக்கொண்டார்.  நீதிமன்றம் அவரது குற்றங்களை பரிசீலித்து இரட்டை மரண தண்டனை, 34 ஆயுள் தண்டனை, 693 ஆண்டுகள் கூடுதல் தண்டனை வேறு கொடுத்தது. எதற்காக பாபியை விட ஃபேன்டசியாக நீதிபதிகள் யோசித்தார்கள் என்று தெரியவில்லை. 

 

 படம் 

பெக்ஸல்ஸ்

 

 

 

 

 


கருத்துகள்