சூறையாடப்படும் மக்களின் பணம்!





Image result for loot money



ஏமாறுவது யார்?

கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 23 ஆயிரம் வங்கி மோசடி வழக்குகளில் ஒரு லட்சம் கோடி மக்கள் பணம் வங்கிகளில் சூறையாடப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. 2016-17 ஆண்டுகளில் 5 ஆயிரமாக இருந்த வங்கி மோசடிகளின் எண்ணிக்கை ஏப். 2017- மார்ச் ,18 வரையிலான காலத்தில் 5,152 ஆக அதிகரித்துள்ளது கவலைப்படவேண்டிய விஷயம்.

மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில்(2017-18) காலகட்டத்தில் 28 ஆயிரத்து 459 கோடி பணமானது சிக்கலில் உள்ளது என்கிறது சென்ட்ரல் வங்கி. மேலே சொன்ன ஆண்டுகள் மட்டுமல்ல 2014 ஆம் ஆண்டிலிருந்தே வங்கி மோசடிகளும் வாராக்கடன்களின் சுமையும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. 2014-15 ஆண்டுகளில் 19 ஆயிரத்து 455 கோடி ரூபாயும், 2015-16 ஆண்டுகளில் 8 ஆயிரத்து 698 கோடி ரூபாயும் கடன் லேபிளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நீரவ்மோடி, மெகுல் சோக்ஸி, சிவசங்கரன் மற்றும் கடனை அங்கீகரித்த வங்கி அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது