ஒலியின் பயணம்!- அன்றிலிருந்து இன்றுவரை



hiphop GIF



3400 ஆண்டுகள் ஆகின்றன. நாம் தகவல் தொடர்பு விஷயங்களை கண்டறியத் தொடங்கி. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என புகைப்படங்களை விட ஒலி மக்களை கவனிக்க வைக்கிற ஒன்றாகவே இருக்கிறது. ஒளி பாதிவேலையை செய்தால், ஒலி மீதி வேலையைச் செய்கிறது. மெசபடோமியர்கள் செய்திகளை எழுதி அதனை சத்தமாக பேசி பிறருக்கு செய்தியை கடத்தினர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூட மிகத்தரமான ஒலியை நம்மால் கேட்கமுடியவில்லை என்றே சொல்லவேண்டும். இன்று நாம் ஸ்மார்ட்போன் அல்லது யூடிபில் 8டி ஒலியை கேட்டு மகிழ்ந்து வருகிறோம். அந்த ஒலியின் பயணத்தை நாம் பார்ப்போம்.


1860
போன் ஆட்டோகிராப்

1853 ஆம் ஆண்டு எட்வர்ட் மரியன்வில்லே என்ற கண்டுபிடிப்பாளர் மனிதர்களின் குரலை பதிவு செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இதில் பல்வேறு விஷயங்களை மேம்பாடு செய்ய முடியவில்லை. குறிப்பாக திரும்ப போட்டு பார்த்தால்தானே அதில் என்ன நடந்திருக்கிறது என்று தெரியும்.

1886

வேக்ஸ் சிலிண்டர் - போனோகிராப்

இதனை தாமஸ் ஆல்வா எடிசன் உருவாக்கினார். பின்னர், அலெக்சாண்டர் கிரகாம் பெல், மேம்படுத்தி கிராம போன் கருவியைக் கண்டுபிடித்தார். இதில்தான் பதிவு செய்த குரல்களை திரும்ப நம்மால் கேட்க முடிந்தது.

1928

காந்த டேப்புகள்

ஜெர்மனியைச் சேர்ந்த ஃபிரிட்ஸ் ஃபிளம்மர் இந்த காந்த வகை டேப்புகளை கண்டுபிடித்தார். இரும்பு ஆக்சைடு பூசப்பட்ட காந்த டேப்புகள் மிகச்சிறப்பாக மின் சிக்னல்களை ஒலி அலைகளாக மாற்றி பாடல்களை கேட்க வைத்தன.


1982

சிடி


பிலிப்ஸ் மற்றும் சோனி ஆகிய இரு நிறுவனங்களும் சிடி தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தன. ஏராளமான பாடல்களை சிடியில் பதிவு செய்ய முடிந்தது. லேசர் ஒளி மூலம் பாடல்களை சிடியில் அச்சிட்டு நல்ல ஒலியில் கேட்க முடிந்தது. தொண்ணூறுகளில் அனைத்து கணினிகளிலும் சிடி ட்ரைவ் இணைக்கப்பட்டு விற்கப்பட்டன. இதன் விளைவாக, நாமே நமக்கு பிடித்த பாடல்களை சிடியில் பதிவுசெய்துகொள்ள முடிந்தது.

1993

எம்பி3

90 சதவீதம் ஒலியை சேதமின்றி செய்யும் தொழில்நுட்பம் ஜெர்மனி உலகிற்கு தந்த மகத்தான பரிசு.

அந்நாட்டைச்சேர்ந்த ஃபிரான்கோஃபர் இன்ஸ்டிடியூட் இந்த புதிய கோப்பு வடிவத்தை ச்ந்தையில் அறிமுகப்படுத்தியது. இதனால்தான் நாம் மாஸ்தமிழன் வலைத்தளத்தில் எளிதாக காப்புரிமையை புறந்தள்ளி ஆக்சன் பாடல்களை ஆட்டையைப் போட்டு கேட்க முடிகிறது.

நன்றி - பாப்புலர் சயின்ஸ்