சீனாவில் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்! - சீனாவின் நடவடிக்கை என்ன?



Animated GIF
giphy.com





நவ.11 ஆம் தேதி உலக அளவில் சிங்கிள்ஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. தினம் என்று வந்தால் யாருக்கு கொண்டாட்டம்? ஆம். அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுக்குத்தானே? 2009ஆம் ஆண்டிலிருந்து அலிபாபா நிறுவனம், இதனை மிகப்பெரிய விற்பனைக்கான நாளாக பார்க்கிறது. அப்படித்தான் தனது வலைத்தளத்தில் விளம்பரம் செய்கிறது.


2015 ஆம் ஆண்டு 140 மில்லியன் பார்சல்களாக இருந்த விற்பனை, 2017ஆம் ஆண்டு 331  மில்லியன் பார்சல்களாக உயர்ந்துள்ளது. நான்கில் ஒருவர் என ஆர்டர் செய்து பொருட்களை வாங்கி வருகின்றனர். இங்கு கூறியது சீனாவில் மட்டும் என நினைவில் கொள்ளுங்கள்.

இதனை எப்படி கற்பனை செய்யலாம் தெரியுமா? அமெரிக்க நாட்டிலுள்ள ஒட்டுமொத்த குடிமகன்களும் ஆளுக்கொரு பார்சல் வாங்கியுள்ளதாக கருதலாம்.


விற்பனை, சாதனை என மார்தட்டிக்கொள்வது சரிதான். ஆனால், இதனால் ஆண்டுதோறும் 9.4 மில்லியன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருகின்றன என்று க்ரீன்பீஸ் அமைப்பு மற்றும் ஃப்ரீ டு பிளாஸ்டிக் அமைப்புகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு சிங்கிள்ஸ் தினத்தில் அலிபாபா நிறுவனம் 22 பில்லியன் டாலர்களுக்கு வணிகம் செய்துள்ளது. சீனாவில் இந்த தினத்தில் விற்பனை தள்ளுபடிகளை அலிபாபா, ஜே.டி டாட் காம், பின்டுவாடுவா ஆகிய நிறுவனங்கள் அறிவித்து கல்லா கட்ட வருகின்றன.

சீனாவில் பார்சல் செய்யப்படும் பெட்டிகள் 99 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. இதனால் இவை கழிவுகளாக சேரும் ஆபத்து உள்ளது.


சீன அரசு கழிவுகளை நான்கு வகையாக பிரித்து அதனை மறுசுழற்சி செய்வதற்கான முயற்சிகளை செய்துவருகிறது. மேற்சொன்ன அலிபாபா, ஜேடி.காம் ஆகிய நிறுவனங்களும் மறுசுழற்சி செய்வதற்கான முயற்சிகளை செய்துவருகின்றன.

நன்றி - அபாகஸ் வலைத்தளம்.













பிரபலமான இடுகைகள்