கற்பழித்தபின்னர் பெண்களை சுட்டுத்தின்பேன் - லூகாஸ், ஓட்டிஸ் டூல்







ஒருவரைக் கொல்வது என்பது வாசல் கதவு வரை இயல்பாக நடப்பது போன்றதுதான். கொல்லவேண்டும் என்று எனக்கு தோன்றினால், உடனே வெளியே போவேன். ஒருவரைப் பிடித்துக்கொல்வேன் - லூகாஸ்.





அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களுக்கிடையே பயணித்து நூற்றுக்கணக்கானவர்களை வல்லுறவு செய்து, கொன்று எரித்து அதோடு விடாமல் அவர்களின் இறைச்சியை கம்பியில் சுட்டு தின்ற இரட்டையர்களை அறிந்திருக்கிறீர்களா? அவர்கள்தான்  லூகாஸ், ஓட்டிஸ் டூல்.

இருவருக்குமான கடந்தகாலத்தை அவர்களது பெற்றோர்தான் நாசமாக்கினார்கள். லூகாஸின் தாய் ஓர் விலைமாது. அதிலும் சைக்கோ என்றால் உங்களுக்கு புரியுமா? தான் ஆண்களுடன் காசுக்காக செக்ஸ் வைத்துக்கொள்வதை லூகாஸைப் பார்க்க வற்புறுத்துவது அந்த தாய்க்கு மிகவும் பிடிக்கும். இந்த சித்திரவதை பொறுக்கமுடியாமல் தாயின் கழுத்தை அறுத்துக் கொன்றார் லூகாஸ்.

லூகாஸின் அம்மாவுக்கு அவர் ஒரு சுமையாகவே தெரிந்தார். அதனால்தான் அம்மாவை 23 வயதில் கழுத்தை அறுத்து கொன்றார். நிம்மதி பெருமூச்சு விட்டார். பின்னே அம்மா அவரைக் கண்டுகொள்ளாத தால்தானே அவரது ஒரு கண், நோய்த்தொற்று ஏற்பட்டு பறிபோனது. அப்போதே சிறு விலங்குகளைப் பிடித்து அதனை சித்திரவதை செய்துகொல்வது லூகாசுக்கு பிடித்த விளையாட்டு.

இளமைக்காலம்


1936 ஆம் ஆண்டு வர்ஜீனியாவில் பிளாக்ஸ்பர்க் எனும் இடத்தில் லூகாஸ் பிறந்தார். அவருக்கு எட்டு சகோதர ர்கள் உண்டு. இதனால் குடும்பத்தில் பெரிய மரியாதை கிடையாது. நன்றாக போன அவரது வாழ்க்கை தடம் மாறியது அவரது பெற்றோர்களால்தான். அவரது தந்தை ஆண்டர்சன், வேலை செய்யுமிடத்தில் கால்களை இழந்தார். இதனால் வயிற்றுப்பாட்டுக்கு ஆல்கஹால் தயாரித்து விற்கத் தொடங்கினார். கூடவே அதனையே குடிக்கத்தொடங்கினார். லூகாஸூக்கும் கொஞ்சம் ஊற்றிவிட்டார். இவரது மனைவியான லூகாசின் தாய் டிக்சன், ஓர் விலைமாது. சிறிய வீடு அது. அதில் வரும் வாடிக்கையாளர்களிடம் சரசமாடுவதை லூகாசை பார்க்க வைத்து சிறிய நெஞ்சில் விஷம் விதைத்தார். அவரது மாமா பெர்னி என்பவரிடம் செக்ஸ் வைத்துக்கொண்டு அதனை தனது மகன் லூகாஸ் பார்க்க வற்புறுத்தினார். இச்சமயத்தில் அவர் குடிபோதையில் மரக்கட்டை ஒன்றை எடுத்து அடித்த தில் லூகாஸ் மூன்றுநாட்கள் கோமாவில் விழுந்தார். அடுத்து தாயிடம் உறவுகொண்டு குடும்பத்திற்கு நெருக்கமான மாமா பெர்னி என்ன செய்தார் தெரியுமா? லூகாஸ் விலங்குகளிடம் செக்ஸ் வைத்துக்கொள்வது எப்படி என வகுப்பு எடுத்தார்.

1949 ஆம் ஆண்டு மதுபோதையில் விஷம் கலக்கப்பட்டதால் லூகாசின் தந்தை ஆண்டர்சன் வைகுண்ட பிராப்தி பெற்றார். அப்போது லூகாசுக்கு பதினைந்து வயது. தான் பார்த்த கற்ற விஷயங்களை பரிசோதிக்க பஸ் ஸ்டாண்டில் நின்ற பதினேழு வயது லாராவை தேர்வு செய்து கடத்தினார். அடித்த அடியில் அவர் சுயநினைவை இழக்க, அதைப்பற்றி கவலைப்படாமல் வல்லுறவு செய்தார். பின்னர் அவரைக் கொன்று வீசினார். இதற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் கைதிகளின் கூட்டம் அதிகமானாதால் லூகாஸ் பின்னொரு நாளில் விடுவிக்கப்பட்டார்.



ஓட்டிஸ் டூல் வாழ்க்கை இன்னும் கொடுமையானது. அவரின் குடும்பத்தினரே அவரை ஐந்துவயதில் செக்ஸ் சமாச்சாரத்திற்கு பக்கத்து வீட்டு ஆட்களுக்கு வாடகைக்கு விட்டனர். பத்து வயதில் ஒட்டிஸின் மூத்த சகோதரி அவருக்கு பெண் டிரஸ்ஸை அணிவித்து அவரைக் கற்பழித்தார். பின்னர் அவரது தந்தை அவரை வல்லுறவு செய்தார். இப்படி ஒட்டுமொத்த குடும்பமே அவரின் மீது பாலியல் சுரண்டல் நடத்தியது. அப்புறம் என்ன அவரது மனதில் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா பாடலா ஓடும்? செக்சும் ரத்தக்களறியும்தான் அவரது வாழ்க்கை என்றாயிற்று.

லூகாசும், ஒட்டிஸூம் சூப் கிளப் ஒன்றில் சந்தித்தார்கள். பேசினார்கள். பிடித்திருந்தது. பழக நினைத்தார்கள். அன்றிரவே ஒட்டிஸின் அறைக்கு லூகாஸ் வர செக்ஸ் பழகினர். பின்னர்தான் இருவரின் கொலைத்தாண்டவம் தொடங்கியது. இச்சமயத்தில் லூகாஸ் தாயைக் கொன்றதற்காக சிறைவாசம் அனுபவித்து மீண்டிருந்தார். ஒட்டிஸ் அப்போது நான்கு கொலைகளுக்காக தேடப்பட்டு வந்தார்.

ஒட்டிஸ் கொன்ற முதல் கொலை செக்சுக்கானதுதான். விற்பனை பிரதிநிதி ஒருவர்ஒட்டிஸை செக்சுக்காக அணுகினார். ஒட்டிஸ் ஆள் தெரியாமல் விற்பனைப் பிரதிநிதி மாட்டிக்கொண்டார். விற்பனை பிரதிநிதியின் காரை வைத்தே அவர்மீது ஏற்றிக்கொன்றார்.

காரை ஓட்டிக்கொண்டு மாகாணங்களுக்கு இடையில் செல்வது,  கிடைக்கும் ஆட்களை பிடித்து வல்லுறவு செய்வது, பின்னர் கைகால்களை அறுத்து பிரித்து தின்பது, இல்லை தூக்கியெறிந்துவிட்டு செல்வது என்பது இருவரின் வேலை. இதில் மனிதர்களை தின்பது ஒட்டிஸூக்கு பிடித்தமானது. ரத்தம் எனக்கு பிடிக்காது என்று சொல்லுவார் அவர். ஒட்டிஸ் கணக்குப்படி 108 பேர்களை கொன்றேன் என வாக்குமூலம் கொடுத்தார். அதுகூட லூகாஸ் தான் கொலை செய்தவர்களை போலீசைக் கூட்டிச்சென்று இடம் சுட்டி பொருள் விளக்கிய பிறகுதான்.

இருவருக்குள்ளும் முதலிலேயே ஒப்பந்தம் ஒன்று இருந்தது. இருவரும் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்க கூடாது என்பதுதான் அது. ஒட்டிஸ் அதற்கு ஏற்பட நடந்துகொண்டார். ஆனால் லூகாசுக்கு தனது சாதனைகள் மீது பெருமிதம் ஏற்பட அவராகவே கொலைகளை ஒப்புக்கொண்டார். இம்முறையில் 213 வழக்குகள் போலீசாரால் முடித்து வைக்கப்பட்டன. ஆனால் உண்மையில் மூன்றே மூன்று வழக்கில்தான் இருவரின் பங்களிப்பு அடையாளம் காணப்பட்டது. இருவரின் கொலைப்பயணங்களை இரண்டு படங்கள், மூன்றுக்கும் மேற்பட்ட ஆவணப்படங்கள் விளக்கி வெளியாகி உள்ளன.

நன்றி - கிரிமினல் மைண்ட்ஸ் வலைத்தளம்

கில்லர் ஃபைல்ஸ் நூல்