உளவியல்ரீதியில் பாதிக்கும் கதைகள - ஆல்பிரட் எழுதிய மர்மக்கதைகள்!


Image result for ஆல்பிரட் ஹிட்ச்காக் மர்மக்கதைகள்



ஆல்பிரட் ஹிட்ச்சாக் மர்மக்கதைகள்

விகடன் பிரசுரம்


இவை எதுவும் ஆல்பிரட் எழுதிய கதைகள் கிடையாது. பிற எழுத்தாளர்களின் கதைகளை இயக்குநர் ஆல்பிரட் சிறிது மாற்றி அதனை தனக்கான கதைகளாக மாற்றியிருக்கிறார். எதற்கு சினிமாவாக எடுக்கத்தான். அனைத்து கதைகளுமே ஆல்பிரட்டின் கைவண்ணத்தில் கடும் திகிலை மனதில் ஊட்டுகின்றன. அதில் எந்த சந்தேகமும் வேண்டும்.

மொழிபெயர்ப்பு கதைகள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. அதை நினைவில் கொண்டு படிக்கவேண்டியதில்லை. நடைபெறும் சூழல்கள், இடம் ஆகியவற்றை புரிந்துகொண்டால் எளிதாக நீங்கள் கதையை உள்வாங்க முடியும். அதற்காக சொன்னேன்.

இதில் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து பரம்பரை பற்றி கேள்விகளை ஒருவர் நிரப்புவார். பின்னர் அந்த நிறுவனத்தில் உயர் பதவிகளை எட்ட சாம, பேத, தண்ட முறைகளை பின்பற்றுவார். இக்கதை திரைப்படத்திற்கான அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளது. கணவர் வர தாமதம் ஆகிறது. புயல் மழை, மனைவியின் மனதில் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது என்று செல்லும் கதை முழுக்க அக உணர்வுகளை முன்னிலைப்படுத்துகிறது.

இந்த வகையில் இதில் கைவிடப்பட்ட வீடு போன்ற தோற்றத்திலுள்ள வீட்டின் அருகில் மழைக்காக ஒதுங்கும் சிறுகதை வியக்க வைப்பது. அதில் வாழும் மனிதர் தன் கதையை சொல்வது போல தொடங்குவது, ஒருகட்டத்தில் இல்யூசன் பாதிப்பு கொண்ட மனிதராக அவர் மாறியிருப்பதை நமக்கு புரிய வைக்கிறது.

மற்றொரு கதை. இந்த வேலைக்கு இவன் லாயக்கு படமாட்டான் என காரணம் சொல்லாமல் வடிவேலை வம்புக்கு இழுப்பார்களே அதே கான்செஃப்ட். ஆனால் கதையின் வேகத்தால் எதையும் டக்கென நம்மால் உணரமுடியவில்லை. வெளிநாட்டுக்கு ஆபீஸ் விஷயமாக செல்பவருக்கு, எதிரிலுள்ள பெண் ஓர் சீட்டில் செய்தி ஒன்றை எழுதி சர்வர் மூலம் கொடுக்கிறாள். உடனே சர்வர் கோப ப்பட்டு அங்கிருந்து அவனை போகச்செல்கிறார். இப்படியே லாட்ஸ் உரிமையாளர், கம்பெனி மேலாளர் என அனைவரும் காகித த்தில் உள்ள செய்தியை சொல்ல மறுக்கிறார்கள். இப்படி மர்மமாக
சென்று முடியும் கதை, கதைக்குள் கதையாக நம்மை ஈர்க்கிறது.

மொத்தத்தில் தொகுப்பில் உள்ள கதைகள், நம்மை ஏமாற்றாதவை என உறுதியாக சொல்லலாம்.

கோமாளிமேடை டீம்