கார் தந்த முதலாளி!




Image result for savji dholakia


முதலாளிக்கு வைர மனசு! –

வைரவியாபாரியான சாவ்ஜி துலாகியா, தன் நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 600 கார்களை வாங்கி பரிசளித்து திகைக்க வைத்துள்ளார்.

குஜராத்தின் சூரத்திலுள்ள வார்ச்சாவில் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வரும் வைரவியாபாரி சாவ்ஜி துலாகியா, தன் நிறுவன ஊழியர்கள் 600 பேர்களுக்கு வீடியோ கான்பரன்ஸ் வழி பிரதமர் மோடியின் கரங்களால் கார்சாவிகளை வழங்க வைத்து கௌரவித்துள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டிலிருந்து தனது நிறுவன ஊழியர்களுக்கு பல்வேறு அதிரடி பரிசுகளை வழங்கி உழைப்பு மற்றும் திறமைக்கு மரியாதை செய்து வருகிறார்.
“ஆயிரத்து ஐந்நூறு பேர்களை பரிசளிக்க தேர்ந்தெடுத்தோம். இதில் 600 பேர்களுக்கு கார்களும், 900 பேர்களுக்கு நிரந்தர வைப்புத்தொகையை வங்கியில் செலுத்தி அதற்கான சான்றிதழ்களையும் வழங்கினோம்” என பெருமையாக பேசுகிறார் உதாரண முதலாளி சாவ்ஜி துலாகியா.

மாற்றுத்திறனாளி பெண்கள் நால்வரும் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்து தங்களுக்கான பரிசைப் பெற்றுள்ளது நெகிழவைக்கும் பண்டிகை நிகழ்வு. இவ்வாண்டு ரூ.50 கோடி மதிப்பிலாக பரிசுப்பொருட்களை வழங்கிய சாவ்ஜி இதற்கு முன்பு பிளாட், வைர நகைகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நம்ம முதலாளி தங்க முதலாளி!