நினைவெனும் பாற்கடலை தோண்டியபோது...- பாற்கடல் - லா.ச.ராமாமிர்தம்

 

 

 

 

 

தளவாய் சுந்தரம்: நேர்காணல்

 

பாற்கடல்

லா.ச.ராமாமிர்தம்

மதுரை புராஜெக்ட்

ப. 284

இந்த நூல் இலக்கியம் சார்ந்த தன்மை கொண்டதல்ல என பலரும் விவாதிக்க வாய்ப்பிருக்கிறது. படிக்கும்போது கூட வாசகருக்கு அப்படி தோன்றலாம். ராமாமிர்தத்தின் சுயசரிதை என்று தாராளமாக சொல்லலாம். 

நூலில் ராமாமிர்தத்தின் குடும்ப உறுப்பினர்களின் வினோதமான குணங்கள் பற்றி பகடியாக எழுதப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த குடும்பத்திற்கு இந்தளவு கஷ்டமாக எனும்படி நெகிழ்ச்சியாக உள்ளது. 

இதில் நினைத்துப் பார்க்கவே ஆச்சரியம் தரும்படி லா.ச.ராவின் அம்மா பற்றி விரிவாகவே பேசப்பட்டுள்ளது. நூலைப் படித்து முடிந்தாலும் கூட அம்மா பற்றி குணம், காட்சி வர்ணனைகள் மனதை விட்டு நீங்கவில்லை. எழுத்துகளில் அதிக விவரிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒருவரின் குணத்தை தராசில் இட்டு நிறுப்பது போல கூறும் இடம். உணவு பற்றி எழுதும் இடங்களில் எழுத்து வசீகரம் கொள்கிறது. இது வாசிப்பவரகளுக்கு நேரும் மாயமா, எழுத்தாளருக்கு பிடித்த விஷயம் என்பதால் தனித்துவமாக அந்த பத்தி தெரிகிறதா என்று அறியமுடியவில்லை. எதுவானாலும் வாசிக்க நன்றாக இருக்கிறது.

அம்மன் கோவிலிலுள்ள ஈட்டியில் செருகி வைக்கப்பட்ட எலுமிச்சைப்பழம் போல நிறைய இடங்களில் பொருத்தமாக பழமொழிகள் உள்ளன. அவற்றைப் பிரித்துப் பார்ப்பது கூட கடினம். வாசிப்பை சுவாரசியப்படுத்தும் பணியை அவை செய்கின்றன. 

வறுமை, அவமானம், சந்தோஷம், விரக்தி, வேதனை என அனைத்துமே எழுத்தில் நறுக்கென எழுதப்பட்டுள்ளது. இந்த நூலை வாசிப்பவர்கள் யாராயினும் இதன் நடையைப் பற்றி பேசாமல் இருக்கமுடியாது. அந்தளவு சீராக செல்கிறது. 


கோமாளிமேடை டீம்





கருத்துகள்