சித்திரவதைக் கருவிகள் -தொகுப்பு டைகர் ஜோகி





திகில் தரும் கொடூர சித்திரவதைக் கருவிகள்


   இன்று நியூக்ளியர் குண்டுகள் டூ கிளஸ்டர் குண்டுகள் வரை அரசுகளிடம் பல ஆயுதங்கள் உள்ளன. ஆனால் பண்டைய காலங்களில் தண்டனைகள் தர பயன்படுத்தப்பட்ட கருவிகளை அறிவீர்களா? கில்லெட் கத்தி மேலிருந்து கீழிறங்கும் வேகத்தில் பரபரவென சித்திரவதைக் கருவிகள் குறித்த அலசல் இதோ!
    
பேரிக்காய் ஆயுதம்

   1600 ல் புழக்கத்திலிருந்து சித்திரவதைக் கருவி இது. இதனை கேப்டன் பாலியலை(Palioly) என்ற கொள்ளைக்காரரே முதலில் தனது திருட்டில் வெற்றிகரமாக பயன்படுத்தினார். இன்று இதன் வடிவத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இக்கருவி பிரபலமான பின் ஜனநாயகமுறையில்  தனது கருவை கலைக்கும் பெண்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், பொய் பேசுபவர்கள், தேச துரோகமாக பேசுபவர்களுக்கு பேரிக்காய் ஆயுதத்தில் தண்டனை அளிக்கப்பட்டது.  எப்படி? நான்கு இலைகள் () ஸ்பூன்கள் போலுள்ள  இக்கருவியை பெண்ணுக்கு பாலுறுப்பிலும், பொய் பேசியவர்கள், அரசுக்கு எதிராக பேசியவர்களுக்கு வாயிலும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆசனவாயிலும் நுழைத்து மெல்ல ஒரு முனையில் சாவியை நுழைத்து திருக மெல்ல இரும்பு இலைகள் விரிவடையும். அதனை சுழலச்செய்யும்போது எதிராளியின் உயிர் போகாது என்றாலும் உடலினுள் வலி மின்னல்கள் வெட்டி மரணத்திற்கு நிகரான வேதனை தரும்.  

மரப்படுக்கை
   1420 ஆம் ஆண்டு எக்சிடர் பிரபு லண்டனில் அறிமுகப்படுத்திய கருவி இது. பல்வேறு புரட்சிக்காரர்கள், துரோகிகள், பயங்கரவாதிகளை உண்மைகளை கக்க வைத்த மரப்படுகை இன்று பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. அடிப்படையில் மரத்திலான கட்டில் போன்ற கருவியில் கைதியின் கை, கால்களை கயிற்றினால் பிணைத்து அவரின் உடலை ஜவ்வு போல சுண்டி இழுப்பார்கள். என்னாகும்? முதலில் கை, கால் மூட்டுகள் உடையும், பிறகு மார்பெலும்புகள் நொறுங்க, எக்ஸ்ட்ரீம் வலியோடு மரணம் நிச்சயம். 17 ஆம் நூற்றாண்டில் அயர்லாந்திலும், பின்னர் போர்ச்சுகலிலும் பலரையும் பீதியில் உறைய வைத்த கருவி இது.

  
சக்கரம்

   18 ஆம் நூற்றாண்டிலிருந்து புழக்கத்திலுள்ள பொதுமக்கள் முன்னிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை தண்டிக்கும் முறையான இதற்கு கேத்தரின் வீல் என்ற பெயரும் உண்டு. ராட்டையின் அமைப்பிலுள்ள பெரிய மரச்சக்கரத்தில் குற்றவாளிகளை நன்கு வளைத்து கட்டிவிட்டு சக்கரத்தை சுழற்றிவிட்டு  கீழே நெருப்பு வைத்து வாட்டுவது, இரும்புத் தடிகளால் எலும்புகளை உடைப்பது என கொடுமைகள் நீளும். குற்றுயிராக அப்படியே ரத்தம் வழிய கிடப்பவர்களை காகம், கழுகு என கொத்தி தின்ன மெல்ல இறப்பார்கள். இந்த ஈவுஈரக்கமற்ற தண்டனையை எழுதினாலே பீதி உச்சந்தலை ஏறுகிறது. லைவ்வாக பார்த்தால் என்னவாகும்? மூளையில் பூகம்பம்தான்.


வெண்கல காளை

   பழங்கால க்ரீசில், குற்றவாளிகளை வறுத்தெடுக்க பயன்பட்டு வந்த கொடூர எருது இது. பாலாரிஸ் என்ற சர்வாதிகார மன்னருக்காக பெரிலோஸ் என்பவர் கண்டறிந்த வெண்கல எருதின் உருவத்தில் மனிதர்களை உள்ளே அனுப்ப கதவு உண்டு. உள்ளே குற்றவாளியை அனுப்பி டாட்டா சொல்லிவிட்டு கீழே தீ வைத்துவிட்டால் வேலை முடிந்தது. வெப்பத்தில் வெண்கலம் சூடாகி மஞ்சளாகும். கைதி உலோகச்சூட்டினால் பேய் போல அலறி துடித்தாலும் உயிர் போகும்வரை வறுகடலைதான். வெண்கல காளையின் தலையிலுள்ள தனித்துவ வடிவமைப்பினால் தோல் சூட்டினால் தீய்க்கப்பட்ட கைதியின் உச்ச அலறல் காளையின் உக்கிர குர எழுப்புவது போலவே டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதை உருவாக்கியவரும் வெண்கல காளையினாலேயே  கொல்லப்பட்டார் என்பதை என்னவென்று சொல்ல?


 
ஆணிக்கதவு

   1800 ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட தண்டனைக் கருவி இது. ஒருவரை உள்ளே வைத்து மூடும்படியான மரக்கதவு அமைப்புதான் என லைட்டாக நினைக்கவேண்டாம். ஒரு கதவில் 8, மற்றொரு கதவில் 13 என கூர்மையான ஆணிகள் பதிக்கப்பட்டிருக்கும். குற்றவாளிகளை உள்ளே நிறுத்தி கதவை சாத்தினால் ப்ராசஸ் முடிந்தது. வாழ்நாளில் குரலை உயர்த்தி பேசாதவரும் கூட உச்சஸ்தாயில் அலறுவார். உடல் முழுக்க ஆணிகள் துளையிட்டு மெல்ல ரத்தம் துளித்துளியாய் சிந்திச் சிதற வேதனையில் உடல் துடித்து மரணம் கண்முன்னே தெரியும். கண்களை துளைத்து குருடாக்க மட்டும் ஸ்பெஷலாக 2 ஆணிகள் பதிக்கப்பட்டுள்ளன. ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த ஆயுதம் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளதை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

யூதாஸின் நாற்காலி

   நம் நாட்டின் கழுமரத்தின் ஆல்டர்னேட் வடிவம் இது. மரம் () இரும்பினால் ஆன பிரமிடை நிறுத்தி அதன் மேல் நிர்வாணமான குற்றவாளியை கொண்டுவந்து ஆசனவாயை கூர்மையான  முனையில் வைத்து, கையையும் காலையும் கட்டி பல்வேறு முனைகளில் இருந்து இழுத்தால் என்னவாகும்? கீழ்ப்புறம் மெல்ல கிழிய வேதனை உயிரைப் பிழியும். உண்மையை குற்றவாளி சொல்லிவிட்டால் ஓகே. மறுத்தால், கால்களில் எடை வைத்து, பிரமிடு முனையில் எண்ணெய் தடவினால் நரகம் மண்ணில் தெரியும். இது உயிர்கொல்வதல்ல, உடல்நலன் அழிப்பது. பின்னே பொருட்களை ஆயுத பூஜைக்கு மட்டும்தான் கழுவார்கள் என்பதால் ஆசனவாய் வழியே தோன்றும் நோய்த்தொற்றுக்கு லைப்பாய் சோப் தேடமுடியாமல் சாவு ஸ்லோமோஷனில் நிகழும்.

தலை நசுக்கி

   கை, கால் விரல் நகங்களை பிடுங்குவதை நரசிம்மா விஜயகாந்தே ஈஸியாக செய்துவிடுவதால், இது அதனினும் மேம்பட்ட தலை நசுக்கியாகும். 1530 ஆண்டு தண்டனைக்கருவியாக அறிமுகப்படுத்தப்பட்ட கருவியின் செயல்பாடுகள் எப்படி? தாடையை கீழேயுள்ள இரும்பில் வைத்து மேலேயுள்ள தலை கவச பகுதியில் தலையை பொசிஷனில் நிறுத்தினால் ஓகே. மேலேயிருந்து மெல்ல கருவியை டைட் செய்ய முதலில் பற்கள் உடையும், பின் தாடைகள், இறுதியாக கண்கள் சிதைந்து உயிர் பிரியும். இதில் பாதியிலேயே வதை நின்றாலும் சிதைந்த முகத்தசைகளை சீராக்குவது கடினம். பெரும்பாலும் அரசியல் தண்டனைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே கருவி இதுதான்.
 
சிமெண்ட் ஷூக்கள்

   அமெரிக்க மாஃபியா குழுக்கள் கண்டுபிடித்த அமேஸிங் டெக்னிக் இது. 2016 ஆம் ஆண்டுதான் இந்த முறையை உலகம் அறிந்துகொண்டது. தம்மிடம் பிடிபடும் எதிரிகளை உளவாளிகளை கொன்று () கர்ம சிரத்தையாக அவர்களின் கால்பாதங்களை சிமெண்டினால் நன்கு பூசி வைத்து வட்டவடிவமாக்கி  காய்ந்ததும் அப்படியே அலேக்காக  தூக்கி ஆற்றில் எறிந்துவிட்டு அடுத்த அசைன்மென்டுக்கு ரெடியாகிவிடுவார்கள். கல்லை தண்ணீரில் தூக்கிபோட்டால் மேலே வருமா? அதே கதிதான் எதிரிக்கும் நிகழும். டெரர் பாடம் அல்லவா?

மரக்குதிரை

   சிறிய பிளாக்போர்டு போல இருக்கும் மரச்சட்டம்தான் தண்டனைக்கருவி என்றால் நம்ப மாட்டீர்கள். 1646 ஆம் ஆண்டில் பெண்களை தண்டிக்க முதலில் பயன்படுத்தப்பட்ட இக்கருவி பின் ஆண்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.  யூஸ் செய்வது சிம்பிள். ஏறி உட்கார்ந்தால் போதும். ஆணிகள் உங்கள் பாலுறுப்பை பங்கமாக்கி பஞ்சராக்கும். மேலும் தண்டனையை கடுமையாக்க, கால்களின் மீது எடைகள் தொங்கவிடப்படும்போது தேளின் விஷமாய் உடலில் ஏறும் வேதனையை சிக்கனமாகவும்  கூறமுடியாது.

குளியல் தொட்டி

   பாரசீக முறையிலான மனநிலையை சிதைக்கும் குரூர தண்டனை இது. கைதியை சாம்பல் நிரம்பிய அறையில் சில நாட்கள் தங்க வைத்து நுரையீரலில் சாம்பலை படிய வைத்து பின்னர் கல்தொட்டிக்கு அழைத்துச் செல்வர். மரத்தொட்டியில் குற்றவாளியை உட்கார முகம் மட்டும் வெளியே தெரியும்படி செய்து, முகத்தில் பால், தேன் இரண்டையும் மிக்ஸ் செய்து கண்கள் காதுகள், ஆசனவாய் என பல்வேறு இடங்களில் குறிப்பாக பூசிவிடுவார்கள். நல்ல ஃபேஷியல் க்ரீம் போல தோன்றலாம். டெரர் அட்டாக் அடுத்ததுதான் தொடங்கும்.  தேன், பாலின் மணத்தை அறிந்த பூச்சிகள், எறும்புகள் தேன், பாலை சாப்பிடும்போது கைதியின் தோல் பல்வேறு இடங்களிலும் துளையிடப்படும். பூச்சிகள் அதில் தன் முட்டைகளை இடுவது அடுத்த லெவல். தண்டனைக்கு ஆளானவருக்கு வெயில், பட்டினி, பூச்சிகளின் தாக்குதல் என தாக்குதல் அதிகரிக்க சித்தப்பிரமை பிடித்து உடல் முழுக்க பூச்சிகளின் புழுக்கள் உருவாகி சதைகளைத் தின்னத்தொடங்கும். பிறகு என்ன? 17 நாட்களுக்கு பிறகு உடல் முழுக்க நோய்த்தொற்று ஏற்பட்டு கடும் வேதனையோடு மரணம்தான் பரிசு
நன்றி: 
.அன்பரசு