கோமாளிமேடை ஸ்பெஷல்ஸ் -ரோனி





Hotwater சேலஞ்ச்!

ப்ளூவேல் கேமில் இணைந்து பலரும் உயிரை விட்டுக்கொண்டிருக்க அடுத்ததாக புயலாக அமெரிக்காவில் ஹாட்டாக கிளம்பியிருக்கிறது Hotwater சேலஞ்ச்!


ஐஸ்பக்கெட் சேலஞ்ச் உள்ளிட்ட நோய்களுக்கான நிதிபிரசார விளையாட்டுகளைத் தாண்டி இணையத்தில் சுயவதையை தூண்டும் பிரசாரம் செய்யும் ட்ரெண்ட் திகுதிகுவென பரவி வருகிறது. ஹாட்வாட்டர் சேலஞ்சும் அப்படித்தான். வெந்நீரை நன்கு காய்ச்சி, நண்பர்கள் மீது ஊற்றுவதுதான் கேம் பிளான். அப்போது கைகால் வெந்துவிடுமே? யெஸ். அப்படி கதறி துடித்தால்தானே கேமில் அடுத்த லெவல். அடுத்த லெவலில் வெந்நீரை இன்னும் பல நூறு செல்சியசில் கொதிக்கவைக்கவேண்டும். அமெரிக்காவின் அர்கனாசில் வீட்டில் தூங்கிய சிறுவனின் முகத்தில் ஓவனில் கொதிக்க வைத்த வெந்நீரை கொட்டி ஊரையே பதறவைத்துள்ளான் அச்சிறுவனின் சக நண்பன். இரண்டாவது சம்பவத்தில் 11 வயதான ஜாமோனிஷா ஹாட்வாட்டர் சேலஞ்சால் பாதிக்கப்பட்டு முகம், தோள் எல்லாம் வெந்து ஆஸ்பிட்டலில் சேர்ந்துள்ளது உலகெங்கும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூசைட் டூ சுமங்கலி பவ!

சினிமாவில்தான் இது சாத்தியம். ஒருவரின் லைஃபில் சிறுவயதில் மின்னல்வேகத்தில் உள்ளே வந்த பெண்ணே சில பல ஆண்டுகளுக்கு பிறகு மனைவியாக ரீஎன்ட்ரியாவது தற்செயல் என்பீர்களா? கெவினுக்கும் இதற்கு பதில் தரமுடியாமல் டெராபைட் ஆனந்தத்தில் திளைக்கிறார். இதோ ஃப்ளாஷ்பேக்...

அமெரிக்காவின் இந்தியானாபோலீஸைச் சேர்ந்த கெவின் வால்ஸ், தன் பள்ளியின் சம்மர் கேம்பில்தான் முகம் பார்த்து உடனே கிராஸ் செய்துவிடமுடியாத அழகியை மீட் செய்து, உடனே போன்நம்பர்கள் பரிமாறி, சில பல மெசேஜ்கள் மூலம் அறிமுகமாகினர். அதன்பின் பள்ளியில் சிலமுறை சந்தித்தாலும், தன் படிப்பில் கவனம் செலுத்தியதால்,கெவின் சம்மர்கேம்ப் அழகியை சந்திக்கவில்லை. படிப்பு ஒருகட்டத்தில் கடும் மனச்சோர்வைத் தர, இனி சூசைட்தான் வழி என முடிவெடுத்த நொடியில், புதியஎண்ணிலிருந்து போன் அழைப்பு. யெஸ். சம்மர்கேம்ப் அழகியேதான். "திடீர்னு உனக்கு போன் பண்ணனும்னு தோணுச்சு" என்று சிணுங்கியவரின் குரலைக்கேட்டவர், சூசைட் எதற்கு செய்கிறார்? காதலிக்கு சில ஆண்டுகளிலேயே சுமங்கலி பாக்கியம் தந்தார். ஆக்கிவிட்டார். இப்போது சொல்லுங்கள் இது ரியலா ரீலா?

 நியாயத்திற்கான தூரம்

நியாயத்திற்காக எவ்வளவு தூரம் செல்லவேண்டும் என்பதை ஒடிஷா பழங்குடி மனிதர் தம் பெற்றோரோடு சேர்ந்து உலகிற்கே கூறியுள்ளார்.

ஒடிஷாவின் மொரோடா கிராமத்தைச்சேர்ந்த பழங்குடியான கார்த்திக்சிங் மீது 2009 ஆம் ஆண்டு  எப்ஐஆர் ஒன்று பதியப்பட்டு 18 நாட்கள் லாக்கப்பில் கிடந்திருக்கிறார். ஊர் என்ன சொல்லும்? அன்னம் தண்ணீர் புழக்கமின்றி ஊர்விலக்கே செய்யப்பட்டிருக்கிறார் கார்த்திக்சிங். ஊர் உதவாவிட்டால் என்ன, உலகமிருக்கே என வேலைதேடிப்போகவும் வயதான பெற்றோர் பெரும் தடை. ஆல் ப்ராப்ளத்துக்கும் ஒரே காரணம்,  போலி கேஸ் போட்ட போலீஸ்தான் என முடிவுக்கு வந்த, கார்த்திக், தன் பெற்றோரை மூங்கில் கம்பில் இருபுறமும் கட்டி, உட்கார வைத்து  நியாயம் கேட்க சாலையில் 40 கி.மீ நடக்க ஊரே உச்சு கொட்டியிருக்கிறது. பழங்குடிகள் பாவம் போலீஸ்கார்!

மகளை சங்கிலியில் கட்டிய தந்தை!

வங்காளதேசத்தின் செருப்பு தைக்கும் தொழிலாளியான கமல்ஹூசைனுக்கு தன் மகள்தான் பிரச்னை. அவர் வேலைக்கு சென்று திரும்பி வரும்போதேல்லாம் பத்து வயதேயான மகள் சனா, போதை போக்கிரிகள் மற்றும் பாலியல் தொழிலாளிகளுடன் இருந்திருக்கிறாள்.சில சமயம் வீட்டைவிட்டு சனா வெளியே போனால் வருவதற்கு 10 நாட்கள் ஆகுமாம். ஒருநாள்  செருப்பு தைக்க பயன்படும் பசையை போதைக்காக பயன்படுத்தியதை கண்டு ஷாக் ஆனவர், மனதை கல்லாக்கிக்கொண்டு மகளைக் காப்பாற்ற ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.

"நான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து என் மகளுக்கு சிகிச்சை அளிக்கு முடியாது. எனவே வேறுவழியில்லாமல் அவளை சங்கிலியால் வீட்டில் கட்டிவைத்துவிட்டேன். என் மனமும் நோகிறதுதான் ஆனால்் அவளைக் காப்பாற்ற வேறுவழி தெரியவில்லையே?" என சமூகவலைதளத்தில் அவரின் பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது கமல் ஹூசைனின் மகள் சனாவுக்கு பலரும் உதவ முன்வந்துள்ளது மகிழ்ச்சியான செய்தி.  


  பாதகமான பாலினமாற்றம்!

திருநங்கைகள் உலகின் பல்வேறு இடங்களில் அங்கீகாரம் பெற்றாலும், அவர்களை அங்கீகரிக்க மறுக்கும் குறுகிய அதிகார மனங்களால் படும் துயரம், கொஞ்சநஞ்சமல்லஅப்படியான முறையில் இந்திய கப்பல்படை,  ஷபி என்ற திருநங்கையை தற்காலிகமாக பணியை விட்டே நீக்கியுள்ளது.

இந்திய கப்பற்படையில் விசாகப்பட்டினத்தில் டீன் ஏஜிலேயே பணிக்கு சேர்ந்த எம்கே கிரி, தன் உடலில் பெண்மையை உணர, 2016 ஆம் ஆண்டு பாலின மாற்று ஆபரேஷன் செய்து ஷபி என்ற பெண்ணாக மாறினார். பணிக்கு திரும்பியவருக்கு திடீரென சிறுநீர்த்தொற்று ஏற்பட்டபோது, ஷபியின் ஆபரேஷன் விஷயம் அதிகாரிகளுக்கு தெரியவர, கோபமானவர்கள் இரக்கமின்றி பணியை விட்டே நீக்கியுள்ளனர். "மெரிட்டில் தேர்வாகி பணிக்கு வந்தவள் நான். எதிரிகளை சமாளிக்கும் திறனுள்ள ஒருவர் ஆணாக இருந்தால் என்ன, பெண்ணாக இருந்தால் என்ன? உளவியல் சிகிச்சைக்கு பரிந்துரைத்தவர்கள் தற்போது என்னை டிஸ்மிஸ் செய்ய முயற்சி செய்துவருகின்றனர்." என கண்கலங்கும் ஷபியின் விவகாரம் இந்திய கப்பல்படை சந்திக்கும் புத்தம் புதிய வழக்கு. நியாயம் சொல்வாரா மோடி?



பெண்கல்வி போற்றுவோம்

கர்நாடக அரசு அண்மையில் பெண்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் அறிவிப்பை அறிவித்துள்ளது. என்ன அது? பெண்கள் இனி 1 முதல் டிகிரி வரை அரசு, தனியார் என எதிலும் படிக்கலாம் அதுவும் இலவசமாக.

" ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்குள் வரும் 18 லட்சம் ஏழை மாணவர்கள் இந்த திட்டத்தினால் பயனடைவார்கள்" என்கிறார் உயர்கல்வி அமைச்சரான பசவராஜ் ராயரெட்டி. மத்திய அரசின் சட்டப்படி 8 ஆம் வகுப்புவரை இந்தியாவில் இலவச கட்டாயக்கல்வி உண்டு. கர்நாடகாவின் பிளான்படி ஒரு மாணவிக்கு ஓராண்டுக்கு ரூ. 611 அரசு செலவழிக்கவிருக்கிறது. ஆனால் இதே திட்டம் பஞ்சாப், தெலுங்கானாவில் முன்பே பிராக்டிகலாக செயல்பட்டு வருகிறது. அதிலும் பஞ்சாபில் முதல் வகுப்பு டூ பிஎச்டி வரை ப்ரீதான். "நாங்கள் பிற மாநிலத்திட்டங்களை காப்பி அடிக்கவில்லை. ஏழை மாணவிகளுக்கு தடையின்றி கல்வியளிப்பதே எங்கள் லட்சியம்" என வீராவேசமாக பேசுகிறார் அமைச்சர் பசவராஜ். நல்ல விஷயத்தை காப்பி அடிக்கலாம் அமைச்சரே!
 ஆல்கஹால் காளை!-ரோனி

ஷ்யூர். உலகிலேயே செமத்தியாக பைசா வசூல் செய்யும் காளை இதுதான். ஹரியானாவைச் சேர்ந்த பொலிகாளை பற்றிய வீடியோதான் தற்போது குளோபல் ஹிட். 6 அடி உயரத்தில் 1 டன் வெயிட்டில் மெகா பிரமாண்டமாக நம்மை பிரமிக்க வைக்கும் இந்த காளைக்கு டெய்லி மாலையில் தனித்துவ வழக்கம் ஒன்றுண்டு.

தன் விந்தணுக்களை விற்பதன் மூலமாகவே ஒரு ஆண்டுக்கு 10 மில்லியன் சம்பாதிக்கும் இந்த பேராண்மை காளை, தினசரி மாலையானால் தன் முதலாளிகளின் முகம் பார்த்தபடி ஆவலாக ரெடியாகிவிடுகிறது. எதற்கு? தொட்டியில்தான் கிடக்கும் புண்ணாக்கு சாப்பிடவா!  ஆர்டினரி காளைகளுக்கு அது ஓகே. காளைகளின் சூப்பர்ஸ்டார், கிளாஸில் வாங்கி குடிப்பது பரிசுத்தமான விஸ்கி. தினசரி ஹார்லிக்ஸ் போல விஸ்கி குடித்தால் காளை உடம்பு என்னாவது என வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பதறியுள்ளனர்.   
  
டபுள் மேரேஜ் கலாட்டா 

செட் பரோட்டா தொடங்கி குழிப்பணியாரம் வரை ரெண்டு என்பது தமிழனின் ஃபேவரிட். ஆனால் அது கல்யாணத்திலும் தலைநீட்டினால் என்னாகும்? களேபரம்தான்.

விருதுநகரைச்சேர்ந்த ராமமூர்த்திதான் அந்த டபுள்டக்கர் மணமகன். தன் அக்காவின் வீட்டில் தங்கியிருந்தவருக்கு,அவரின் அக்காபெண் ரேணுகாவையே மணமுடிக்க முடிவெடுத்தனர். ரிமோட்டுக்கே இரண்டு பேட்டரிசெல் தேவை என்றால் நமக்கு? என யோசித்தவர், உடனே இன்னொரு அக்காவிடம் பேசி, அவரின் பெண் காயத்ரியையும் தன் மேரேஜூக்கு இரண்டாவதாக புக் செய்தார். அதற்கும் இரு பெண்களின் பேரன்ஸ் ஓகே சொன்னது உலக மகா ஷாக். இன்விடேஷனில் இருபெண்களை சிங்கிள் ஆண் மணம் செய்வதைப் பார்த்து வயிறெரிந்தவர்கள், அரசின் சமூகநலத்துறைக்கு மிஸ்டு கால் கொடுக்க, அப்புறம் எப்படி கல்யாணம் நடக்கும்? தற்போது சந்தோஷமாக காயத்ரி ஜகா வாங்கிவிட ரேணுகாவுடன் ராமமூர்த்திக்கு கெட்டிமேளம் கொட்டவிருக்கிறது. அடேங்கப்பா ஐடியா!

ஆக்சிடெண்டில் பீர்வேட்டை- ரோனி

முன்பு விபத்தானால் அடிபட்டவரை தூக்குவார்கள். இன்று அடிபட்டவரை விட்டுவிட்டு அவரின் காஸ்ட்லி வண்டியை சிராய்ப்பின்றி தூக்கி நிறுத்துவது இன்றைய ஜெனரேஷன் காருண்யம். அப்படித்தான் தெலுங்கானாவில் ஒரு ஆக்சிடெண்ட். அங்கு சிச்சுவேஷன் என்ன தெரியுமா?

தெலுங்கானாவின் வேமுலப்பள்ளி ஷெட்டிப்பாலம் ஜங்ஷன். ரோட்டில் நல்ல வேகத்தில் வந்துகொண்டிருந்த டாஸ்க்மார்க சரக்கு லாரியின் குறுக்கே திடீரென நாய் வர, கருணையோடு ட்ரைவர் வலதுபுறம் ஸ்டீயரிங்கை திரும்ப, வண்டி குட்டிக்கரணம் போட்டது. ட்ரைவருக்கு டோண்ட் வொரி என பெருமூச்சு விட்ட மக்கள், சிதறிய சரக்கு பாட்டில்களைப் பார்த்ததும் ஜெய் ஆல்கஹாலாய! என உற்சாகமாகி பெட்டி பெட்டியாக அபேஸ் செய்யத்தொடங்கிவிட்டனர். பீதியான ட்ரைவர் போலீசுக்கு நம்பர் தட்ட, போலீஸ் வந்து லத்தி சுழற்றி, கால்குலேட்டர் தட்டியபோது  350 பெட்டிகள் காணோம். மதிப்பு ஜஸ்ட் 50 ஆயிரம் ரூபாய்.


சீனாதானா போலீஸ் 001

போலீஸ் எல்லாருமே அச்சடித்தது போல வால்டர் வெற்றிவேல், வல்லரசுவாக அஞ்சாநெஞ்சர்களாக இருப்பது முடிகிற காரியமா என்ன? அமெரிக்காவின் போலீஸ்காரர் ஒருவர் அப்படி ஒரு போன் அழைப்பை ஏற்று, டாஸ்க்கை முடிக்க தொப்பி மாட்டி விறைப்பாக சென்றார். க்ளைமேக்ஸ் என்னாச்சு? தெறி காமெடி.

முதலையை வளைத்து பிடித்து வாயைக் கட்டுவதுதான் அந்த இளம் போலீஸ்காரருக்கு டாஸ்க். முதலில் நன்றாக கிரிப்பாகத்தான் பிடித்தார். ஆனால் திமிறிய முதலை தலைதூக்கி வாயைத்திறந்தும் பயந்துபோன போலீஸ்காரர் பதறி எடுத்தார் பாருங்கள் ஓட்டம். ஆசம். போலீஸ் டீம் மட்டுமல்ல, அந்த வீடியோவைப் பார்த்த 8 லட்சம் பேரும் கலீர் என சிரித்துவிட்டனர். போலீஸை துரைசிங்கம் 123 என விறைப்பாக பார்த்தவர்கள், சீனாதானா 001 ஆக பார்த்ததன் எஃபக்ட் இது. சிரிப்பு போலீஸ் சீனாதானா!


 நிர்வாணப்பூங்காவுக்கு வாங்க!

ட்ரெஸ் எல்லாம் இப்ப வந்ததுதான். அதுக்கு முன்னாடி எவ்வளவு ஈஸியாக லைஃப் இருந்தது தெரியுமா? என இந்தியாவிலும் எக்ஸ்பயரியாகாத ஆதிவாசி மகாத்மாக்கள் தியரி பேசிக்கொண்டிருக்கின்றனர்.  ஃப்ரான்சில் பிராக்டிகலாக இறங்கி இதற்கென தனி பூங்காவையே ஓபன் செய்துவிட்டார்கள்.

பிரான்சின் பாரீசில் நிர்வாண மனிதர்கள் உலாவித் திரிய தனி பூங்காவையே அரசு அமைத்து தந்து கிராண்ட் ஓபனிங்கும் கொடுத்துள்ளது. The Bois de Vincennes என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பார்க்கில் காலை 8 மணியிலிருந்து இரவு 7.30 வரை உடையற்ற பறவைகளாக ஜாலியாக நீங்கள் திரியலாம். ஆனால் அடுத்தவர்களுக்கான பிரைவசியில் நுழையக்கூடாது டஜன் ரூல்ஸ்களும் உண்டு. "இயற்கைநேயர்களுக்கு இது மிகப்பெரிய சுதந்திரம், சந்தோஷமும் கூட" என ஆனந்த கூத்தாடுகிறார் பாரீசின் நேச்சுரிஸ்ட் சங்கத்தைச் சேர்ந்த ஜூலியன் கிளாட் பெனக்ரி. மாடர்ன் ஆதிவாசி! 
நன்றி: குங்குமம் வார இதழ்