இந்திய சமூகத்தில் செக்ஸ் அனுபவிப்பதில் ஆர்வம் காட்டும் பெண்கள்!












1


 இந்தியா டுடே இந்தியா முழுக்க ஒரே வாரம் மட்டும் பரபரப்பாக விற்கும். அந்த வாரம் அப்படி என்ன கவர் ஸ்டோரி என மனதிற்குள் கேள்வி ஓடுகிறதா? அது மக்களின் முக்கியமான வாழ்வாதார பிரச்னை என்னவென்று தெரியுமா? செக்ஸ். 

செக்ஸ் வாழ்க்கை இந்தியா முழுக்க எப்படியிருக்கிறது என சர்வே ரெடி செய்வார்கள். ஆணுறை பிராண்டுகளில் சர்வதேச பிராண்டுகள் வரை விளம்பரம் கொடுத்து அமர்க்களப்படுத்துவார்கள். இந்தியாடுடே, செக்ஸ் சர்வே என்பதற்காகவே தனியாக போட்டோஷூட் வேறு நடத்துவார்கள். 

பின்னே வாழ்க்கை பிரச்னை அல்லவா?

செக்ஸ் சம்பந்தமான விஷயங்களின் ஆதாரமே பெண்கள்தான். அவர்கள்தான் இதில் முக்கியமான இயற்கை வளம். அதனை வெற்றிகொள்ளத்தான் ஆண்கள் அரும்பாடு படுகிறார்கள். இதற்காக டைம்ஸ் ஆப் இந்தியா முதல் இந்துஸ்தான் டைம்ஸ் வரை பல்வேறு டிப்ஸ்களை வாரம்தோறும் வெளியிட்டு மனித சமூகத்திற்கு அருந்தொண்டு ஆற்றுகிறார்கள். 

பழங்குடிகளைப் பொறுத்தவரை குறிப்பிட்ட வயதில் விருப்பமானவர்களை தேர்ந்தெடுத்து தனியாக தங்க வைக்கிறார்கள். இதில் பெண், ஆணோடு உறவு கொள்வது தொடங்கி வாழ்வது வரையிலான பல்வேறு பயிற்சிகள் முயன்று பார்க்கிறார்கள். இதனால் அவர்களது வாழ்க்கை சற்று பிரச்னைகள் குறைந்து நிதானமாகிறது. 

பொதுவாக இந்தியாவில் ஆன்மிக தன்மை உயரத்தில் இருப்பதால், மற்ற சமாச்சாரங்களை நாமே இருட்டில் தேடி கண்டுபிடித்துக்கொள்ள வேண்டியதுதான். செக்ஸ்,பாலியல் கல்வி என்றால் பலரும் பதற்றம் ஆகி இதயம் ஹார்ட் அட்டாக் வரும் அளவுக்கு சென்றுவிடுகிறார்கள். முகம் சிவந்து உதடு அஷ்டகோணலாக துடிக்கத் தொடங்கி விடுகிறது. ஆனால் அப்படி சரியாக செக்ஸைப் புரிந்துகொள்ள முடியாத காரணத்தால் திருமண வாழ்க்கை கூட வேலிடிட்டி குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் அறிவதோடு பிறரையும் புரிந்துகொண்டிருப்பது குறைந்துவிட்டதுதான் காரணம். 

இந்தியாவில் பெண்கள் பதினைந்து வயதிலேயே செக்ஸ் அனுபவத்தை அனுபவித்து விடுகிறார்கள் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. குடும்பநலத்துறை ஆய்வு 5இல், பெண்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டபோது,  15 வயதில் செக்ஸை அனுபவித்ததாக கூறியவர்கள் அளவு 10.3%. 25 வயது முதல் 49 வயது வரையில் உள்ள பெண்களை ஆய்வு செய்ததில் மேற்கண்ட உண்மை தெரிய வந்துள்ளது. 





2

பதினெட்டு வயதுதான் வயது வந்தோருக்கான உரிமையைத் தருகிறது. ஆனால் பெண்களில் 6 சதவீதம் பேர் அதற்கு முன்னரே செக்ஸை ருசி பார்த்து விடுகின்றனர். இந்த வகையில் பரீட்சையைப் போலவே ஆண்கள் பின்தங்கி 4.3 சதவீதமாக இருக்கின்றனர். எப்படி பெண்கள் வேகமாக பாலுறவுக்கு தயாராகின்றனர்? இதற்கு கல்வி, செல்வம் ஆகியவை முக்கியமான காரணங்கள். 

திருமணத்திற்கு முன்பான உறவு என்பது பலருக்கும் புதிதாக இருக்கலாம். ஆனால் இதில் ஜோக்குகளில் மட்டும் முட்டாளாக சித்திரிக்கப்படும் சிங்குகள் முன்னிலை வகிக்கின்றனர். சீக்கியர்களில் ஆண்களில் 12 சதவீதம் பேர் திருமணத்திற்கு முன்னரே செக்ஸை அறிந்தவர்களாக அனுபவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். சரி இதே சமூகத்தில் பெண்கள் எப்படி? செக்ஸ் அனுபவம் அவர்களுக்கு இதே வேகத்தில் கிடைப்பதில்லை. ஆனால் வசதியான ஆண்களும், கல்வியறிவில்லாத பெண்களும் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக்கொண்டு சீரும் சிறப்புமாக வாழ்க்கையைக் கொண்டாடுகின்றனர். 

1971ஆம் ஆண்டு வெளியான விவாக் செக்ஸ் ஆர் பிரேம் நூலில், பெண்கள், ஆண்கள் திருமணத்திற்கு முன்பு பிறரிடம் செக்ஸ் வைத்துக்கொள்வது சந்தோஷமான அனுபவத்தை அனுபவிக்கத்தான் என்று கூறியிருக்கிறார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியானபிறகு நிறைய மாற்றங்கள் நடந்துவிட்டன. தொண்ணூறுகளில் உலகமயமாக்கம் வந்தபிறகு, பெண், ஆண்களின் வாழ்க்கை நிறைய ஆட்களோடு கலந்துகொள்வதாக மாறிவிட்டது. திருமணத்திற்கு முந்தைய உறவு, திருமணம் செய்துகொண்டபிறகும் பிறருடன் உறவு என்ற நிலைக்குள் தான் நிறைய பேரின் வாழ்க்கை அமைந்துள்ளது. 

திருமணமானபிறகு செக்ஸ் பெண்களுக்கும், ஆண்களுக்கும் நிறைய கிடைத்துவிடுகிறதா என்றால் கிடையாது. ஆண்கள் மறுப்பதாக பெண்கள் 87 சதவீதமும், பெண்கள் மறுப்பதாக ஆண்கள் 83 சதவீதமும் குறை கூறியுள்ளனர். மேகாலயா மாநிலத்தில் தாய்வழி சமூக உறவுகள் உறுதியாக உள்ளன. இங்கு திருமணமான ஆண்கள், தங்களுடனான பாலுறவுக்கு பெண்கள் மறுக்கும் அளவு 50 சதவீதம் என்று கூறியுள்ளனர். இது இந்தியாவிலேயே குறைந்த அளவு. அருணாசலப்பிரதேசத்தில் 30 சதவீத மனைவிகள், கணவர்கள் பாலுறவுக்கு அழைத்தால் மறுப்பதாக தெரிய வந்துள்ளது. 


3





வாரத்திற்கு எத்தனை நாட்கள் பாலுறவு வைத்துக்கொள்வது என்பது உறவில் முக்கியமானது. இந்த வகையில் பாலும், பாஸ்மதி அரிசியையும் சாப்பிடும் சீக்கியர்கள் மறுபடியும் முன்னிலைக்கு வருகிறார்கள். வாரம் ஏழு நாட்களும் உறவு என்ற தோராய கணக்கு வைத்தால், அதைக்கூட டி20 போல குறைத்து வாரத்திற்கு ஐந்து நாட்கள் மனைவியோடு உறவு வைத்துக்கொண்டு குஷியாக இருக்கிறார்கள். 

கல்வியறிவும் செல்வமும் பாலுறவை தீர்மானிப்பதில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. வீட்டுக்குள் பாலுறவு வைத்துக்கொள்வதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. எனவே, வீட்டுக்கு வெளியில் பலரும் சென்று இன்பத்தை தேடுகிறார்கள். இந்த வகையில் பெண்கள்தான் ஆவேசமாக இருக்கிறார்கள். சரி, பூரணத்தை அடைவதுதானே வாழ்க்கை லட்சியம். இந்த வகையில் 56 சதவீத பெண்கள் வீட்டுக்கு வெளியில் பல்வேறு பாலுறவு கூட்டாளிகளை வைத்திருக்கிறார்கள். இந்த வகையில் ஆண்களின் சதவீதம் 32. 

பாலுறவு வைத்துக்கொள்வது சரி, இதில் சோதனை முயற்சி உண்டா என்றால் அதிலும் டிஸ்டிங்க்ஷன் அடிப்பது பெண்கள்தான். அவர்கள் வீட்டுக்கு வெளியில் சென்றால் நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்ய நினைக்கிறார்கள். இரண்டு அல்லது மூன்று பேர்களை பாலுறவுக்கு பயன்படுத்துகிறார்கள். விலைமாதுக்களுக்கு பணம் கொடுத்து சந்தோஷப்படுவது என்ற வகையில் முன்னிலை வகிப்பது ஆண்கள் தான். அவர்களின் அளவு 53 சதவீதம் . பெண்களின் அளவு இந்த வகையில் 3 சதவீதம். 

சந்திரிமா பானர்ஜி

டைம்ஸ் ஆஃப் இந்தியா 

 ---------------------------

pixabay

கருத்துகள்