அஞ்சலி- பத்திரிகையாளர் குளோரியா ஸ்டைனம் பெண் உரிமைகளின் எதிரொலி
கல்வியாளர், எழுத்தாளர், பெண்ணிய இயக்க முன்னோடி, சமூக சீர்திருத்தவாதி என்று பன்முகங்கள் கொண்ட குளோரியா ஸ்டைனம் அவர்களின் வாழ்க்கைப் பயணமும், அவரது அரிய பணிகளும் உலகெங்கிலும் உள்ள பெண்களின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவரது 90-ஆவது வயதிலும், அவரது குரல் மாற்றத்திற்கான கருவியாகவும், அடக்குமுறைக்கு எதிரான கேடயமாகவும் தொடர்வது உண்மையிலேயே வியத்தகு. 1934-ஆம் ஆண்டு மார்ச் 25-இல் பிறந்த குளோரியா, தனது இளமைக்காலத்தில் தந்தையின் வேலை காரணமாக அடிக்கடி இடம்பெயரும் வாழ்க்கையை மேற்கொண்டார். இந்த அலைபாயும் வாழ்க்கை, பின்னாளில் அவரது பயணங்கள் நிறைந்த வாழ்க்கைக்கும், மனிதர்களின் பல்வேறு நிலைகளைப் புரிந்துகொள்வதற்கும் அடித்தளமாக அமைந்தது. 1956-இல் ஸ்மித் கல்லூரியில் சிறப்புப் பட்டம் பெற்ற பின், செஸ்டர் போல்ஸ் உதவித்தொகையின் கீழ் இந்தியாவில் இரண்டு ஆண்டுகள் கழித்தார். அங்கு காந்தியத்தின் தாக்கமும், இந்தியப் பத்திரிகைகளுக்கு எழுதிய அனுபவமும் அவரது எழுத்து மற்றும் செயற்பாட்டு வாழ்க்கையை வடிவமைத்தன. 1960-களில் பத்திரிகையாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய குளோரியா, 1968-இல் 'நியூயார்க்...