இந்தியர்களின் உயரம் மெல்ல குறைந்து வருகிறது!

 









இந்தியர்களின் உயரம் குறைந்து வருவதாக இந்திய அரசின் தேசிய குடும்பநல ஆய்வு முடிவுகள் தகவல் தெரிவித்துள்ளன. 

இந்தியர்கள் பொதுவாக உயரத்தை விட நிறத்தைப் பற்றிய கவனத்தை அதிகம் கொண்டுள்ளனர். ஆனால் ஒருவரின் உயரம், எடை என்பது உடல்நலத்தைப் பொறுத்தவரை முக்கியமானது. தற்போது தேசிய குடும்பநல ஆய்வுகளில் தெரிய வந்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவை. 1992 முதல் 2020 வரையிலான ஆய்வுகளில் இந்தியர்களின் உயரம் குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. 

இரண்டாவது மற்றும் நான்காவது ஆய்வுகளில் உயர மாறுதல் தெரியவந்துள்ளது. இதில் பதினைந்து முதல் இருபத்துநான்கு வயது வரையில் உள்ள பெண்கள் 0.12 செ.மீ. உயரம் குறைவாகவும், இருபத்தாறு முதல் ஐம்பது வயது வரையிலான பெண்களின் உயரம் 0.13 செ.மீ. உயரமாக உள்ளனர். இந்த வகையில் ஆண்களின் உயரம் முதல் பிரிவில் 1.1 செ.மீ, இரண்டாவது பிரிவில் 0.86 செ.மீ. என குறைந்துள்ளது. இதில் நாம் கவலைப்படும் விஷயமாக உள்ளது, பட்டியலினப் பெண்களின் உயரம் 0.42 செ.மீ., ஏழைப்பெண்களின் உயரம் 0.57 செ.மீ. என குறைந்துள்ளதுதான். 

ஆண்களைப் பொறுத்தவரை ஏழையான ஆண்கள், வசதியான ஆண்கள் பிரிவு என இரண்டிலுமே அவர்களின் உயரக்குறைவு என்பது பரவலாகவே நடைபெற்றுள்ளது. இதில் சுவாரசியமாக பதினைந்து முதல் 25 வயது கொண்ட பிரிவினரின் உயரம், ஆய்வின் மூன்றாவது காலகட்டத்தைவிட குறைந்துள்ளது. இதற்கு மேற்சொன்ன பிரிவினர் தொண்ணூறுகளில் பொருளாதாரம் தாராளமயமானபிறகு பிறந்ததையும்  வல்லுநர்கள் காரணமாக சுட்டிக்காட்டுகின்றனர். 

 இருபத்தாறிலிருந்து ஐம்பது வயது பிரிவு பெண்களில் கூட ஏழைப்பெண்களில் உயரக்குறைவு பாதிப்பு உள்ளது. உலக நாடுகளில் தொடக்கத்தில் அமெரிக்கர்கள் உயரமானவர்களாக இருந்தனர். பிறகு அந்நாட்டை தாண்டி உயரமானவர்கள் வாழும் நாடுகளாக நெதர்லாந்து, ஜெர்மனியும் மாறின. உயரம் என்பது மரபணு சார்ந்தது என்பது அறிவியல் உண்மை. ஆனால், உயரத்தில் காணும் வேறுபாடுகளுக்கு ஒருவரின் வருமானம், ஊட்டச்சத்து, சுகாதாரம், சமூகநிலை ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனை எழுத்தாளர்கள் ஜேக்கப் எஸ் ஹேக்கர், பால் பியர்சன் ஆகியோர் தாங்கள் எழுதிய அமெரிக்கன் அம்னீசியா ஹவ் தி வார் ஆன் கவர்மென்ட் லெட் அஸ் டு ஃபார்கெட் வாட் மேட் அமெரிக்கா பிராஸ்பர் என்ற நூலில் கூறியுள்ளனர். 

 கடந்த முப்பது ஆண்டுகளாக வளர்ந்து வரும் நாடு என்று இந்தியா கூறப்படும் நிலையில், மக்களின் உயரம் குறைந்து வருவது வேதனையான செய்தி.  யுனிசெப் அமைப்பும், உலகளவில் உள்ள குழந்தைகளில் , இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான குழந்தைகள் உயரமும், எடையும் வயதுக்கேற்ப இல்லாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய அரசின் துறை செய்த ஆய்வில் உயரக்குறைவு பாதிப்பு வெளியாகியிருப்பது பிரச்னையின் வீரியம் பெரிதாகவும், மோசமாகவும் இருப்பதையே காட்டுகிறது. எனவே அரசு கொள்கைரீதியாக திட்டங்களை உருவாக்கி அடித்தட்டு மக்கள் அளவிலிருந்து செயல்படுவது அவசியம். 

தகவல்

open 18.10.2021

A Tall order for indians

madhavankutty pillai

https://openthemagazine.com/feature/a-tall-order-for-indians/

-----------------------

pinterest

 


கருத்துகள்