தென் ஆப்பிரிக்காவில் இனவெறி ஒழிக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது!

 





சூயஸ் கால்வாய் கட்டப்பட்டபிறகு வணிகம் அதிகரித்ததை இங்கு முன்னமே எழுதியிருக்கிறோம். இதற்கு முன்னர், ஐரோப்பியர்கள் எப்படி வணிகம் செய்தார்கள்? தென் ஆப்பிரிக்கா வழியாக சென்று ஆசியாவை அடைந்து வணிகம் செய்தார்கள். வணிக உதவிகளுக்காக இங்கு பல்வேறு வணிக மையங்களை அமைத்து இருந்தனர். துறைமுகங்களையும் இந்த முறையில் அமைத்து வணிகம் கெடாதபடி பார்த்துக்கொண்டனர். 

தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க மக்களை இனவெறி கொண்டு பிரித்தனர். அவர்களை ஆப்பிரிக்கானர்ஸ் என்று அழைத்து வந்தனர். டேனியல் மாலன் என்பவர் அங்கு ஆட்சிக்கு வந்ததும் இனவெறிக் கொள்கையை உடனே நடைமுறைக்கு கொண்டு வந்தார். 

இதன் மூலம் அம்மக்களை எளிதாக சுரண்ட முடிந்தது கருப்பின மக்களை பொதுவெளியில் அரசு அனுமதிக்கவில்லை. பார்த்தால் அடி உதை அபராதம் என சென்றது. இவர்களால், நாடாளுமன்றத்திற்கு கூட வரமுடியாது. இதெல்லாம் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த பூர்விக மக்களுக்குத்தான் என்றதும் அதிர்ச்சியாக இருக்கும். 

இவர்கள் உள்ள பகுதிகளுக்கு பந்துஸ்தான் என்று பெயர். இந்த மக்களுக்கு அடிப்படையான உரிமைகள் கிடைக்காத காரணத்தால் அமெரிக்கா, ஐ.நா அமைப்பு என இரண்டுமே தென் ஆப்பிரிக்காவை புறக்கணிக்க முடிவு செய்தன. 

இதெல்லாம் தாண்டி தென் ஆப்பிரிக்காவில் இனவெறி தாக்குதல்கள் பெருகி வந்தன. வெள்ளையர்கள் கருப்பின மக்களை வேட்டையாடி கொன்று வந்தனர். இப்படித்தான் 1960ஆம் ஆண்டு தங்கள் உரிமைக்காக போராடிய கருப்பின மக்கள் அறுபது பேரை வெள்ளையர்களின் காவல்துறை படுகொலை செய்தது. 

1912ஆம் ஆண்டு ஆப்பிரிக்க காங்கிரஸ் கட்சி உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, கருப்பின மக்கள் மீது தாக்குதல் நடத்தும் வெள்ளையர்களை தாக்கவென ராணுவ அமைப்பு ஒன்றை வைத்திருந்தது. இவர்களுக்கு ஒரே வேலை வெள்ளையர்களின் வீடுகளை அடித்து நொறுக்கி அவர்களை கட்டுப்படுத்துவதுதான். இதனால் கோபமான வெள்ளையர் அரசு, ஆப்பிரிக்க காங்கிரஸ் அமைப்பின் பல்வேறு தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. இப்படித்தான் நெல்சன் மண்டேலாவை கைது செய்து 27 ஆண்டுகள் சிறையில் அடைத்தனர். 

நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு சிறுபான்மை வெள்ளையர்களே மனமுவந்து அதாவது பெருகிய நிர்பந்தத்தால் இனவெறியை சட்டப்பூர்வமாக நீக்க ஒப்பினர். 1992ஆம் ஆண்டு மார்ச் 17 அன்று இதற்கான சட்டம் நடைமுறைக்கு வந்தது. 1994ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, ஆப்பிரிக்க காங்கிரஸ் தலைவரான நெல்சன் மண்டேலா ஆட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

2022ஆம்ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இனவெறி நீக்கப்பட்டு 30 ஆண்டு ஆனதை நினைவுகூருகிறோம். 

tell me why

கருத்துகள்