கல்யாண வீடியோ தரத்தில் பழிக்குப்பழி கதை!

 

 


 




 


ஜெய்ஶ்ரீராம்
உதய்கிரண், ரேஷ்மா

நேர்மையான இன்ஸ்பெக்டர் ஒருவரை அரசியல்வாதிகள், ரவுடிகள், போலீஸ் கமிஷனர் என அனைவரும் கூட்டாக ரவுண்ட் கட்டி அடித்து ஒரு இடத்தில் சிறைப்படுத்துகிறார்கள். அங்கிருந்து தப்புபவர், எப்படி வில்லன்களை பழிவாங்குகிறார் என்பதே கதை.

படம் பரிதாபமான தரத்தில் உள்ளது. ஏறத்தாழ கல்யாண வீடியோ என்றே கூறலாம். இதில் வரும் எடிட்டிங்கை விட தரமாக இன்று கல்யாண வீடியோவை எடிட் செய்கிறார்கள். உண்மையில் இது படமா, அல்லது டெலி ஃபிலிமா, சீரியலா என்று கூட பார்வையாளர்களுக்கு சந்தேகம் வரும்.

சன்டிவி சீரியலில் மையப் பாத்திரத்திற்கு அதிர்ச்சி ஆனால், அந்தக் காட்சி அப்படியே ஒருவரின் சட்டையைப் பிடித்து உலுக்கியது போல குலுங்கும் அல்லவா, அதே டெக்னிக்கை இப்படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதுபோன்ற கண்றாவியைப் பார்த்து  என்ன சொல்வது என்று தெரியாமல், உதய் கிரணின் ரசிகர்கள், அவர் இறந்துபோனதற்கு யார் காரணம், அவர் எப்படிப்பட்ட மனிதர் என்றெல்லாம் பேசி கமெண்டில் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

படத்தில் ஹரிஷ் கல்யாண் வில்லன்களில் ஒருவராக வருகிறார். அவர்தான் நாயகனின் அப்பா, தங்கையைக் கொல்பவர். பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி காசு வாங்க நினைப்பவர். அவரின் காட்சிகள் சற்றும் பொருந்தாதவையாக தொடக்கத்திலேயே தோன்றின. குறிப்பாக, அவர் தனது தங்கையை நாயகியின் வீட்டில் சந்திக்கும் காட்சி.

நாயகியின் அறிமுகம், புத்திசாலித்தனம் எல்லாம் விவரிக்கவே முடியாது. அந்தளவு மீட்டருக்கு மேலே உள்ளது. கோவாவிற்கு காதலனை தேடி செல்கிறாள். போகும் வழியில் நாயகனைச் சந்தித்து காதல்வயப்படுகிறாள். படத்தில் நாயகி பாத்திரத்திற்கு அவ்வளவுதான் வேலை. பூங்காவில் அழும் அறிமுகமில்லாத பெண்ணை வீட்டுக்கு கூட்டி வந்து தங்க வைப்பதெல்லாம்... அப்பட்டமான செயற்கைக் காட்சி... இது கூட சாம்பிள்தான். படத்தில் இன்னும் இன்னும் உள்ளன.

நாயகனுக்கு போனில் ஒரு குரல் யாரை கொல்லவேண்டும் என கூறுகிறது. அதை அப்படியே அவன் செய்கிறான். இறுதியில் அப்படி கூறுபவர் யார் என தெரிய வருகிறது. பார்வையாளர்களாகிய நாம் அதற்குள்ளாகவே படத்தின் எடிட்டிங்கால் சோர்ந்துபோய் விடுகிறோம். அப்புறம் என்ன சொல்வது? படத்தின் இறுதிக்காட்சியில் வில்லன்களை ஒன்றாக காரில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரிக்கிறார் நாயகன். கூடவே, படத்தின் இயக்குநரையும் சேர்த்து எரித்திருந்தால் பார்வையாளர்கள் மகிழ்ந்திருப்போம். துன்னபோத்து யெதவா..

ச்சை....

கோமாளிமேடை டீம்











 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்