ஓடிடி திரைப்படங்களை மக்கள் பார்ப்பது தியேட்டர்கள் இல்லாத காரணத்தால்தான்!

 

 

 

 

கௌதம் தத்தா இயக்குநர், பிவிஆர் சினிமாஸ்

 

 

 

கௌதம் தத்தா இயக்குநர், பிவிஆர் சினிமாஸ்

சினிமா துறை இப்போது எப்படி இருக்கிறது?

வருமானம் பூஜ்ஜியமாகிவிட்டது. 4500 பணியாளர்கள் வரை வேலையிலிருந்து நீக்கிவிடும் இக்கட்டு நேர்ந்துள்ளது. பாதுகாப்பு, சுத்தம் செய்வது ஆகிய பணிகளைச் செய்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது மால்கள் மெல்ல திறக்கப்பட்டு வருகின்றன. தியேட்டர்களை திறக்க அரசு உத்தரவிடும் என காத்திருக்கிறோம்.

தியேட்டர்களை திறக்க ஏன் இவ்வளவு தாமதமாகிறது?

அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கச்சொல்லி தியேட்டர்களை அனுமதிக்கலாம். நாங்கள் சிரமப்படுகிறோம் என்பதை அரசு உணர்ந்திருக்கும் என நினைக்கிறேன். கடந்த ஆறு மாதங்களில் இத்துறை சார்ந்தவர்கள் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

உங்கள் நிறுவனம் எப்படி நிலையை சமாளித்தது?

மிகவும் கடினமான சூழ்நிலைதான். எங்கள் நிர்வாக குழு முதலில் சம்பள வெட்டு நடவடிக்கையை தொடங்கி இருமாதங்களுக்கு அமல் படுத்தியது. பின்னாளில் சம்பளவெட்டு கடுமையாக இருந்தது.

தியேட்டர்கள் தொடங்கப்பட்டால என்ன மாதிரியான திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறீர்கள்

டிஜிட்டல் வழியில் டிக்கெட்டுகள், சானிடைசர்கள், மாஸ்குகள் ஆகியவற்றை ஊழியர்களுக்கு வழங்கவிருக்கிறோம். உணவு பாக்கெட்டுகள், கேபினட்டுகள் என அனைத்துக்கும் கிருமிநாசினி தெளித்தே கொடுக்கவிருக்கிறோம். சீட்டுகளை இடைவெளி விட்டு அமைத்திருக்கிறோம்.

ஓடிடி , தியேட்டர் என்ற ஒப்பீட்டை எப்படி பார்க்கிறீர்கள்

இந்தியா சினிமா தாகத்திற்கான நாடு. இங்கு ஒரே வாரத்தில் 15 படங்கள் வெளியாகும். இப்போது ஓடிடியில் மக்கள் படங்களை பார்க்கிறார்கள் என்றால் வேறு வழியில்லை. அதில் இப்போது 33 படங்கள் வெவ்வேறு நிறுவனங்கள் மூலமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நைனி தாக்கர்

போர்ப்ஸ்

தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுவிட்டன.


கருத்துகள்