உணவுத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் அந்நியச்செடிகள்! - களைச்செடிகளின் ஆபத்து

 

 

 

 

பார்த்தீனியம் செடிகளால் விவசாயம் பாதிப்பு!...பரவுவதை தடுக்க நடவடிக்கை ...

 

 

 

இந்தியாவில் வெளிநாட்டு செடிகள் தீவிரமாக வளர்ந்து வரத் தொடங்கியுள்ளன. இவை எதிர்காலத்தில் நாட்டின் உணவுப்பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இச்சோர்னியா கிராசிபெஸ்

பிரேசிலிருந்து இந்தியாவுக்கு வந்த செடி

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் 1700களில் அறிமுகப்படுத்தினார்கள்.

ஏரிகளை ஆக்கிரமித்து இயற்கையான செடிகளை அழிக்கும். நீர்நிலைகளுக்கு வெயில் கிடைப்பதை தடுக்கும்.

எமெக்ஸ் ஆஸ்ரேலிஸ்

தென் ஆப்பிரிக்காதான் தாயகம்

இதனை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை.

எந்த சூழ்நிலையையும் தாங்கி வளரும். வேகமாக பல்வேறு இடங்களில் பரவும். இதன் காரணங்களால் பிற செடிகளால் போட்டியிட முடியாது.

லன்டனா கமரா

அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் வளர்ந்த வந்தசெடி

1807ஆம்ஆண்டு இந்தியாவுக்கு அலங்காரச்செடியாக வந்தது.

இதனை எளிதாக நீக்க முடியாது. இயற்கைச்சூழலை மாற்றிவிடும் ஆபத்து கொண்டது.

பிராஸோபிஸ் ஜூலிஃபுளோரா

மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்காவைச் சேர்ந்தது.

ஜமைக்காவில் இருந்து இதன் விதைகளைப் பெற்ற ஆங்கிலேயர்கள் 1877இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தினர்.


இயற்கையான பிற செடிகளை அழிக்கும். நிலத்திலுள்ள ஈரபதத்தை
முழுக்க அழித்துவிடும். ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

பார்த்தீனியம் ஹிஸ்டெரோபோரஸ்

மெக்சிகோ, தென் அமெரிக்காவில் உருவாகி வளர்ந்தது.

1950ஆம் ஆண்டு அமெரிக்கா அளித்த கோதுமையுடன் இணைந்து இந்தியாவுக்கு வந்தது

பயிர்களின் விளைச்சலைக் குறைக்கும். பல்வேறு ஆபத்து ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளின் கூடாரம் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

இந்தியா டுடே

ரேகா தீக்சிட்






 




 

கருத்துகள்