ஜனவரி 3 ஆம் தேதி ஏன் முக்கியமானதாகிறது?

நேரத்தைப் பொறுத்தவரை ஜனவரி 3 முக்கியமாகிறது. காரணம், இதே நாளில் 1957ஆம் ஆண்டுதான் முதன்முதலில் எலக்ட்ரானிக் வாட்ச் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆண்டோடு எலக்ட்ரானிக் கைக்கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டு 65 ஆண்டுகள் ஆகிறது. ஹாமில்டன் என்ற வாட்ச் கம்பெனிதான் இதனை உருவாக்கியது. அதற்கு முன்பு வரை வாட்ச் என்பது சாவி கொடுத்தால் ஓடும். இல்லையென்றால் உடலின் வெப்பம் காரணமாக ஓடும். அதுவரை வாட்ச் நின்றிருக்கும். இதனையெல்லாம் ஹாமில்டனின் எலக்ட்ரானிக் வாட்ச் மாற்றியது. நவீன குவார்ட்ஸ் புரட்சியின் தொடக்கமாக ஹாமில்டன் நிறுவனம் உருவாக்கிய கைக்கடிகாரத்தை கூறலாம். 1946ஆம் ஆண்டு ஹாமில்டன் டைம்பீஸ் ஒன்றை உருவாக்கியது. இதனை சாதாரணமாக உருவாக்கிவிடவில்லை. இதனை தயாரிக்க இந்த நிறுவனத்திற்கு 11 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஹாமில்டன் எலக்ட்ரிக் 500 என்ற வாட்ச் அனைவரையும் ஈர்த்தது. பாடகர் எல்விஸ் ப்ரெஸ்ட்லி இதனை அணிந்து ப்ளூ ஹவாய் என்ற படத்தில் தோன்றினார். அப்போது உருவாகிய வாட்சுகளில் வென்சுரா முக்கியமானது. இதனை ரிச்சர்ட் அர்பிப் என்பவர் வடிவமைத்தார். எப்போதும் பார்க்கும் வடிவமைப்பில் இல்லாத வாட்ச் இது. டிரையாங்குலர் வடிவமைப்பில் பலரையும் கவர்ந்தது. பிறகு இந்த வாட்சின் பெயர் எல்விஸ் வாட்ச் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. டைம்பீசை ஆராய்ச்சி செய்து வெளியிட்டாலும் அதிக நாட்களில் போட்டிக்களத்தில் ஹாமில்டன் நிற்க முடியவில்லை. ஜப்பானியர்கள்தான் இதற்கு காரணம். அங்கிருந்து வந்த சீகோ நிறுவனத்தின் வாட்சுகள் தனித்துவமான தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்தன. இதனால் ஹாமில்டன் 1969ஆம் ஆண்டே தனது வருமானத்தை மெல்ல இழக்கத் தொடங்கியது. அப்போதுதான் சீகோ தனது முதல் குவார்ட்ஸ் வாட்சை வெளியிடத் தொடங்கியது. டெல் மீ வொய் இதழ்

கருத்துகள்