கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் தங்க விழா! - ஜப்பானில் நடைபெற்ற விளையாட்டுத் திருவிழா!

 








பிப்ரவரி 3

1972ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்கா, ஐரோப்பா தாண்டி வெளியே நடைபெறத் தொடங்கின. முதல்முறையாக என்பதை கூடவே சேர்த்துக்கொள்ளுங்கள்.  இந்த விளையாட்டுகளில் பிப்.3 தொடங்கி பிப். 13 வரையில் நடைபெற்றன. 

ஜப்பானின் ஹொக்கடைவில் உள்ள இன்சாப்ரோவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த ஆண்டு, அதாவது 2022இல் விளையாட்டு போட்டிகள் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகின்றன. ஆங்கிலத்தில் கோல்டன் ஜூப்ளி என்கிறார்கள். 

ஜப்பான் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றது. 1940ஆம் ஆண்டுக்கான போட்டி நடத்தும் வாய்ப்பு. ஆனால் அதற்குள் சீனாவுக்குள் உள்ளே படையெடுத்து சென்றதால் 1937ஆம் ஆண்டு தன் வாய்ப்பை இழந்தது. எனவே விளையாட்டுப் போட்டிகளை நடத்த லண்டன், ஹெல்சின்கி என்ற நகரங்களைத் தேர்ந்தெடுக்கலாமா என்று நினைத்தது விழா கமிட்டி. போர் நடைபெற்றதால் இரு நகரங்களும் தேர்விலிருந்து விலகின. 

சப்போரோ நகரம் பான்ஃப் லக்டி என்ற நகரங்களோடு போட்டி நடத்துவதற்கான தேர்ந்தெடுப்பு பட்டியலில் இடம்பிடித்தது. 1972ஆம ஆண்டுக்கான போட்டியை ரோமில் நடைபெற்ற கமிட்டி கூட்டம் முடிவு செய்தது. இவர் கூடிப் பேசி முடிவு செய்த ஆண்டு 1966 ஏப்ரல் 26. 

ஜப்பான் அரசு, தனது விளையாட்டு வசதிகளை ஓராண்டுக்கும் மேலாக சோதித்துப் பார்த்து விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது. பல்வேறு மேம்பாட்டு செலவுகளுக்காகவே 500 மில்லியன் டாலர்களை ஜப்பான் செலவு செய்தது. பிறகு செலவுகளை ஈடுகட்ட ஒளிபரப்பு உரிமையை 8.47 மில்லியனுக்கு விற்றது. 

இந்த விளையாட்டுப் போட்டியில் 35 நாடுகளிலிருந்து 1,006 விளையாட்டு வீர ர்கள் பங்கேற்றனர். விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்று வெற்றி அடைந்தது. 

டெல் மீ வொய் இதழ் 


கருத்துகள்