கவிதைக்காரன் சந்து

கவிதைக்காரன் சந்து







தீ


காணும் காட்சிகளிலெல்லாம்
வியாபிக்கும் பெண்களின் மென்
பிம்பங்களில் வழியும்
முலைகளும் இடைகளும்
நெளிவு சுழிவுகளில்
கண்கள் மூடி விழ
எத்தனித்து பின்
சுதாத்து சுற்றும்
பார்க்கையில் பாயில்
ஈரம் பரவி உடையில்
வெள்ளை நீர்த்தாரையாய்
எஞ்சி பெருகிப்பரவி
இருந்தது விந்து.

விறைத்த குறி


அவளைப் பார்க்கும் போதே
மனதில் ஒரு சிறு சலனம்
குமிழிட்டு கிளம்பியது.
இறுக்கமான உடைகள்
விறைக்கும் குறிகளுக்கு
ஒரு தடவலாய் இருந்தது.
தன்னைப் பகிர குறிகளுக்கு
வழி காட்டி விலைபேசிக்கொண்டு
இருந்தாள் பாதி கண்களால் மீதி
பேச்சினால்.
சுற்றிப்படரும் கண்களில்
காமத்தின் வெளித்தொpயாத
இளிப்பும் கெட்டவாh;த்தைகளின்
சீண்டலும் ஊற்றாக பெருகத்துவங்கி
இருந்தது.
பேரம் படிந்து அவள் சென்ற
பின்னும் சுற்றியிருந்தவா;களின்
பார்வைத்தவிப்பில்
சமூகத்தின் குறி சிறிது சிறிதாக
விறைத்துக்கொண்டிருந்தது.


உருமாறும் குதிரை


மெல்லிய ஸ்பரிசங்கள்
குறும்புப்பார்வைகள்
தள்ளிவிட்டுக்கொண்டு
எதிரெதிரே உட்காh;ந்து
காய்கள் நகர்த்த
தயாராக இருக்கிறோம்

குதிரையை ஒரு கட்டம்
நகா;த்தி சிறு புன்னகை
பரிசளிக்கிறாய்.

பெரும்வெளியை கடக்கும்
வேட்கையுடன் குதிரையாகி
போனோம்.
மாறி மாறி குதிரைகள்
சென்றுகொண்டேயிருந்தன.


















வேடனைத்துரத்தும் இலக்கு


கண்களில் கரிப்பினால் சுவையேறி
பிறப்பு கொள்கிறது புதிய ஆழி
ஈய குண்டுகளால்
துளையிடப்பட்ட உடல்களே
மீன்களாய் மிதக்கின்றன.

வானத்தின் நிறத்தை தன்
நிறமாக வரிக்கவில்லை
நிறத்தை செந்நிறமாகவும்
இருப்பை குருதிக்கவுச்சியாகவும்
கொண்டிருக்க பழகியிருந்தது
ஆழி.

தாகம் அடங்காத அதன்
கண்கள் குருதியை கண்ணீரை
தேகத்தை உண்டு செரித்தும்
திருப்தியின்மையில்
சுற்றிலும் அலைந்து
மெல்ல வேகம்
கொள்ளத்துவங்கியிருந்தது.












வெம்மை

அவளை இன்றாவது
முத்தமிட்டுவிடு என்று
மனம் உள் ஆழ
உழற்றியது.

அருகே வந்ததும்
எண்ணத்தை உணா;ந்தவள்
விலகி ஓட எத்தனித்து
பின் கரம் பற்றி மெய் பற்றவும்
வேண்டாம் வேண்டாம்
ஏன மறுதலித்தாள்.

இதழ்களினுhடான என்
முத்தம் புறங்கையில்
மெல்ல இறங்கியதில்
கணங்கள் மிகு கனம்
கொண்டு உயிh;ச்சாறு
மென்சூட்டோடு
தலையில்
வழிந்திறங்கிக்கொண்டு
இருந்தது.









சங்கமம்

மெல்ல உடற்கூச்சம்
நீக்கும் வைத்தியம்
தொடங்கும் நேரம்
மலர்ந்ததும் உடையும்
குமிழ்களாய் தாமரைகள்
பூத்துமடிகின்றன.
மெல்ல யோனியில் வழியும்
ரத்தம் லிங்கத்தை அர்ச்சித்து
ஓடும் நீராகியிருந்தது.
பிரபஞ்சம் கடக்கும் புரவிகளாய்
மாறியிருந்தன இரு தேகங்களும்.

                      ப்ராட்லி ஜேம்ஸ்


                   



கருத்துகள்