மனதில் உறுதி வேண்டும்! - ட்யுராங்கோ அதிரடிக்கிறார்!




Image result for comics durango





சத்தமின்றி யுத்தம் செய்!

ட்யுராங்கோ அதிரடிக்கும்

மனதில் உறுதி வேண்டும் - அத்தியாயம் 2


வ்யோமிங் பகுதியில் கொள்ளை கும்பலைப் புரட்டி எடுக்கும் நொண்டி நாயகன் ட்யுராங்கோவின் கதைதான் இது. முதல் அத்தியாயத்தில் துப்பாக்கித் தோட்டாக்களால் காயமுற்றவர், தானாக குதிரையில் ஏறி பயணிக்கிறார். அவரை கிழவர் ஒருவர் மனிதாபிமான முறையில் சிகிச்சை அளித்து உதவுகிறார். ஆனால் அதையும் அருகிலுள்ள ஃபீஸ்புல் சர்ச் ஊரிலுள்ள மக்கள் தவறு என்று கூறி தடுக்கின்றனர்.

அப்போது அங்கு கல்லஹன் எனும் குழு, வ்யோமிங் வங்கியைக் கொள்ளையடித்துவிட்டு தப்பி வந்து அடைக்கலமாகிறது. அந்தக்குழுவினரிலுள்ள ஸ்காட் என்பவன் பெண்ணிடம் தவறாக நடக்க கொலை செய்யப்படுகிறான். இந்த கொலை காரணமாக கொலைவெறி ஆகும் கல்லஹன் அந்த ஊர்க்காரர்களை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து பாதிரியாரை தூக்கிலிட்டு சுட்டுக்கொல்கிறார். அவரின் மற்றொரு கூட்டத்தை ட்யுராங்கோ கொன்று விட்டிருக்கிறார். அவருக்கு சிகிச்சையளித்த கிழவரைக் கொன்றதுதான் காரணம்.

இதற்குப்பிறகு அவர் ஃபீஸ்புல் சர்ச் ஊருக்குச் செல்கிறார்.  அந்த ஊர் மக்கள் அவருக்கு உதவினார்களா இல்லையா என்பதுதான் கதை. இறுதியில் ட்யுராங்கோ வென்றாரா, ஊர் மக்கள் காப்பாற்றப்பட்டார்களா என்பதுதான் கதை.

நன்றி: பாலமுருகன்