ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை சாத்தியமா?-

 

 

 

 

 

 

 

இவற்றின் முக்கியமான பணி. எதிர்ப்பாலினத்தைக் கண்டுபிடித்து உறவு கொள்வதுதான். அதற்கு ஏற்ப தன்னை தயாராக வைத்திருக்கிறது. பெண்ணின் உடல் மாத த்திற்கு ஒரு கருமுட்டையை தயாரிக்கிறது என்றால், ஆணின் உடலில் இதற்கு ஏற்ப நொடிக்கு 1500 விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன. இதில் உடலுறவின்போது எது வெல்கிறதோ அது கருமுட்டையை அடைகிறது. பிற விந்தணுக்கள் கருமுட்டையில் உள்ள அமிலத்தில் அழிகின்றன.


கருத்தடைக்கு ஆணுறைகளைப் பயன்படுத்தினால் கூட அவற்றில் 15 சதவீதம் சரியாக வேலை செய்வது இல்லை. இதன் அர்த்தம், கரு உண்டாகிவிடுகிறது என்பதுதான்.


கருத்தடை என்று வரும்போது அதில் பெண்களுக்கான பொருட்களே அதிகம், மாத்திரை, கருவிகள், க்ரீம்கள் என ஏராளம் உ்ண்டு. பெண்களால் கருவை தடுக்க முடியும் என்ற சொன்னால் ஆண்களால் முடியாதா? அவர்களுக்கும் கருவை தடுக்கும் மாத்திரைகளை தயாரிப்பதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. 1960இல் பெண்களின் ஹார்மோன் கருத்தடை மாத்திரை உருவாக்கப்பட்டது. அதன் பெயர் ஈனோவிட். இந்த மாத்திரை உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அமெரிக்கா, இந்த மாத்திரையை அங்கீகரித்த பிறகு, ஓராண்டு கழித்து இங்கிலாந்தும் இதனை ஏற்றது.


மாத்திரை அறிமுகமாகி ஐந்து ஆ்ண்டுகளில் பெண்கள் தங்களது தேவையில்லாத கருக்களை கலைக்கவும், உடல்நலனை பாதுகாக்கவும் ஈனோவிட்டை ஏராளமாக பயன்படுத்த தொடங்கினர். இப்போது அந்த நிலைமை கிடையாது. பெண்களுக்கென ஏராளமான வசதிகள் உள்ளன. ஐயூடி, பேட்ச், ஊசி, சாதனங்களைப் பொறுத்துதல் என இந்த வரிசை நீள்கிறது. இதில் ஆண்களுக்கென பெரிய கண்டுபிடிப்புகள் ஏதுமில்லை. ஆணுறை, குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மட்டுமே ஆண்களுக்கான வழிகள்.


ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகளுக்கான ஆராய்ச்சிகள் இப்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. ஆனால் இன்றல்ல. இதற்கான ஆராய்ச்சிகள் 1950ஆம் ஆண்டே தொடங்கிவிட்டன. அமெரிக்க உயிரியலாளர் மருத்துவர் கிரிகோரி பின்கஸ், பெண்களுக்கான கருத்தடை ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். இவர், ஆண்களின் டெஸ்டோஸ்ட்ரோனை செயற்கையாக தயாரித்து ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை்யை தயாரிக்க நினைத்தார். பெண்களுக்கான மாத்திரை எப்படி பெண்களின் கருமுட்டை உற்பத்தியை தடுக்கிறதோ, அந்தவகையில் ஆண்களின் விந்தணு உற்பத்தியை மாத்திரை தடுக்கிறது என கண்டுபிடித்தார்.


மின்னசோட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வேதியியல் பேராசிரியர் மருத்தவர் குண்டா ஜார்ஜ், தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் நச்சு ஒன்றைப் பயன்படுத்தி கருத்தடை செய்யமுடியும் என நிரூபித்துள்ளார். இவர், ஆப்பிரிக்க பழங்குடிகள் தங்களின் அம்புகளின் முனையில் பூசும் தாவர விஷமான உவாபெய்ன் என்பதை கருத்தடைக்கு பயன்படுத்தலாம் என கண்டுபிடித்திருக்கிறார்.


இந்த விஷம், செல்களிலுள்ள சோடியம் பொட்டாசியம் அயனி பொருட்களை தடுக்கும் திறன் கொண்டது. செல்களிலுள்ள ஆல்பா 4 எனும் பகுதி, ஆண்களின் விந்தணுவில் முக்கியமான பகுதி. இதுவே நீந்திச்செல்லும் விந்தணுக்கள் கருமுடையை அடைந்து அதனை கருவுறச்செய்கிறது. இதனை மரபணு என்கோடிங் முறையில் கண்டுபிடித்து, உவாபெய்ன் விஷத்தின் மூலம் தடுத்தால் கருவுறுதலை தடுக்க முடியும்.


உவாபெய்ன் விஷ மூலக்கூறை ஆல்பா 4 யை தடுக்குமாறு மாற்றியமைக்க ஜார்ஜ் தலைமையிலான குழு முயன்று வருகிறது. எலிகளை வைத்து சோதித்து தங்களது சோதனையில் வென்றுள்ளனர். எலிகளிடம் செய்த சோதனையில் விந்தணுக்கள் கொண்டு செல்லப்படுவதை 60 சதவீதம் தடுக்க முடிந்துள்ளது முக்கியமான சாதனை. அதுவும் முதல் முயற்சியில் சாத்தியமாகியுள்ளது என ஆராய்ச்சிக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த மருந்து உடலில் குறைந்தளவு பயன்படுத்தப்பட்டாலும் கூட சிறப்பாக செயல்படும்படி மாற்றியமைக்க குழுவினர் மெனக்கெட்டு வருகின்றனர். இந்த மருந்து உடலில் செயல்படும்போது, ஒருவருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சார்ந்த குறைபாடுகள் வரக்கூடாது என்பதில் கவனம் தேவைப்படுகிறது.,


ஈனோவிட் மாத்திரை மிகப்பெரும் வெற்றியடைந்து, வலிநிரம்பிய சீரற்ற மாதவிலக்கைக்கூடன சீர்ப்படுத்தியதால் பெண்கள் இதனை அதிகம் வாங்கினர். ஆனால் இதன் நேர்விளைவு சிறப்பாக இருந்தாலும் பக்கவிளைவுகளை எப்படி பார்க்காமல் விடுவது? 2010இல் ஆயிரத்திற்கும் மேலான வழக்குகள் கருத்தடை மாத்திரைகள் மீது போடப்பட்டன. வாதம், மாரடைப்பு, ரத்த உறைதல் ஆகியவை மாத்திரைகளை பயன்படுத்திய பெண்களுக்கு ஏற்பட்டதாக கூற்ப்பட்டது. இதுதொடர்பாக செய்யப்பட்ட ஆய்வில் கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய், உளவியல் குறைபாடுகள், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஆகியவற்றையும் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டது. இந்த மாத்திரைகள் ஹார்மோன் அடிப்படையில் உருவாக்கப்படுவதால்தான் சிறப்பாக பலன் கொடுக்கின்றன அதேசமயம் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. எனவே ஆராய்ச்சிகள் ஹார்மோன் சார்ந்ததாக அன்றி வேறுவிதமாக விந்தணுக்களை தடுக்கமுடியுமா என்று மாறத்தொடங்கியுள்ளன.


உடலுறவின்போது விந்து வெளியாவது முக்கியம். இது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தாலும் அதில் விந்தணுக்கள் இருக்ககூடாது என்ற வகையில் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. ஆண்களுக்கான கருத்தடை திட்டம் என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம், ஆஸ்திரேலியாவி்ன் மோனாஷ் பல்கலைக்கழக பேராசிரியர் சப் வென்சுரா குழுவினருக்கு, 150000 டாலர்களை நிதியாக வழங்கியுள்ளது.

ஆனால் இதனை ஆண்கள் வாங்குவார்களா என்று தெரியவில்லை. அதற்கான சந்தை உருவானால் மட்டுமே ஆராய்ச்சியும் மாத்திரைகள் தயாரிப்பும் முன்னேறும். 2011இல் இதுதொடர்பாக செய்யப்பட்ட ஆய்வில், ஆண்கள் கருத்தடை மாத்திரையை ஆதரித்தாலும் கூட அதனை பயன்படுத்துவதில் அதிகளவு கவனம் காட்டவில்லை. ஆண்கள் மாத்திரையை விட ஊசி மற்றும் பிறவழிமுறைகளை நாடுகின்றனர். கருத்தடை விஷயத்தில் பெண்களை ஆண்களை விட அதிக கவனம் கொண்டவர்களாக உள்ளனர்.


குழந்தை பிறப்பில் பெண்களே முக்கியமானவர்கள். ஆண்கள் இதில் சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆணுறை அளவுக்கு கருத்தடை மாத்திரை பிரபலமாகவில்லை. இதற்கு முக்கியமான காரணம், ஆணுறை பாலியல் நோய்களை தடுப்பது போல கருத்தடை மாத்திரை செயல்படுவதில்லை என்பதுதான்.


முக்கியமான கருத்தடை மாத்திரைகள்


ஜெண்டாருசா என்பது சீனாவில் உள்ள ஜஸ்டிசியா ஜெண்டுராசா என்ற தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. இந்த மருந்து, கருவுறுதலைத் தடுக்கிறது. இந்தோனேஷியாவில் ஜெண்டாருசா மருந்து சோதனையில் உள்ளது. பிரிஸ்டிமெரின் என்ற மருந்து, தண்டர் காட் வைன் என்ற தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது இதனையும் கருவுறுதலுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள்


விந்தணுவை உடலுக்குள் செலுத்துவதை நேரடியாக தடுக்கும் முறையை வாஸ் ஆக்குலேஷன் என்று கூறுகிறார்கள். வசல்ஜெல் எனும் கண்டுபிடிப்பை குரங்குகளிடம் சோதித்து பார்த்துள்ளனர். இதற்கான நிதியுதவிகள உறுதியானால், அடுத்தக்கட்ட சோதனைகள் நடத்தப்படும். குழாய் வழியாக விந்தணுவை தடுக்கும் வேதிப்பொருட்களை செலுத்துகிறார்கள்.


விந்தணுவை வெளியேற்றும் தசைகளை வலுவிழக்கச்செய்யும் மருந்துதான் க்ளீன் சீட்ஸ் மாத்திரை. இதன்மூலம் உடலுறவில் ஒருவருக்கு கிடைக்கும் உச்சம் கிடைக்காது. இதனை லண்டன் கல்லூரியில் உள்ள நாமேகா அமோமி என்ற ஆராய்ச்சியாளர் உருவாக்கியுள்ளார். நிதிப்பிரச்னையால் ஆராய்ச்சி கைவிடப்பட்டுவிட்டது.


ஜேக்யூ1


இந்த மருந்து புற்றுநோயை தடுப்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டது. பின்னர். விந்தணுக்களை முழுமையான வளர்ச்சி பெறாமல் தடுக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.


ரெட்டினாயிக் அமிலம்


விந்தணுக்களின் வளர்ச்சி சரியாக இருக்க ரெட்டினாயிக் அமிலம் சுரப்பது முக்கியம். வைட்டமின் ஏ உடைந்துதான் ரெட்டினாயிக் அமிலம் உருவாகிறது. இதனை கட்டுப்படுத்துவதன் மூலம் விந்தணுக்கள் உற்பத்தியை தடுக்க முடியும் என கண்டுபிடிவரர்கள், இதற்காக ஆராய்ச்சியை செய்து வருகிறார்கள்.


மருத்துவர் கேட் அர்னி


சயின்ஸ் போகஸ்



கருத்துகள்