இடுகைகள்

பரவல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நூல்களை நாட்டுடமையாக்குதலும் அதன் பின்னணியும்

படம்
    நூல்களை நாட்டுடமையாக்குதலும் அதன் பின்னணியும் தமிழ்நாடு அரசு, பலநூறு எழுத்தாளர்களது நூல்களை நாட்டுடமையாக்கி, நூல்களுக்கு உரிய வாரிசுகளுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. இப்படி சட்டப்பூர்வமாக பெறப்பட்ட நூல்கள், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதை நூல் பதிப்பாளர்கள் பயன்படுத்தி நூல்களை அச்சிடலாம். விற்கலாம். வாரிசுகளுக்கு காப்புரிமை தொகையை தர அவசியமில்லை. இவ்வகையில் எழுத்தாளரது நூல்கள் மக்களுக்கு பரவலாக கிடைக்கும். நூல்களை நாட்டுடமையாக்கம் செய்வது நூலின் பரவலாக்கம் என்ற வகையில் சரி என்றாலும், காப்புரிமை தொகையை எழுத்தாளர்கள் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது என மாறுபட்ட விமர்சனக் கருத்துகளும் எழுந்து வருகிறது. அண்மையில் மறைந்த முன்னாள் முதல்வரான மு. கருணாநிதியின் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. அதற்கு உரிய தொகையை தமிழ்நாடு அரசு வழங்குவதற்கு முன்வந்தது. ஆனால், கருணாநிதியின் குடும்பத்தார் அதை மறுத்துவிட்டனர். ஏற்பது, மறுப்பது எழுத்தாளரது வாரிசுகளது சொந்த விருப்பம். உரிய தொகையை வழங்க முன்வருவது அரசின் கடமை. இந்த வகையில...

இறந்தவர்களின் உடல்களை என்ன செய்வது? மத்திய அரசு தடுமாற்றம்

படம்
டெம்போ மேகசின் விதிகள் இயற்றப்படாத அபாயம்! கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது மூன்று பேர் இதற்கு பலியாகியுள்ளனர். இறந்தவர்களின் உடல்களை எப்படி அப்புறப்படுத்துவது என்பதற்கு எந்த கொள்கைகளும் அரசிடம் இல்லை. தற்போது எய்ம்ஸ் இதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.  கொரோனாவில் இறந்தவர்களை பிளாஸ்டிக் பேக்கால் மூடிவிடவேண்டும். அவர்களின் உடலிலுள்ள நீர் வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். இறந்த உடல்களை எரிக்கவேண்டும். புதைக்க கூடாது. இச்செயல்களை செய்பவர்கள் அரசு அறிவுறுத்திய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருப்பது முக்கியம்.  உலகம் முழுக்க ஆறாயிரம் பேர் கொரோனாவால் இறந்துபோயுள்ளனர். இதில் இந்தியாவில் மூன்று பேர் என்று சந்தோஷப்பட முடியாது. காரணம், மக்கள்தொகை அதிகமுள்ள நாடான இந்தியாவில் சீனா அளவுக்கு விழிப்புணர்வு கிடையாது. முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல என்று அலட்சியமாக இருப்பவர்களே அதிகம். மத்திய அரசு இதனை தாமதமாக புரிந்துகொண்டாலும் இதற்கான விதிமுறைகளை அமைக்க குழுவை அமைத்துள்ளது.  டில்லி மேற்குப்பகுதியிலுள்ள ...