இடுகைகள்

செல்வேந்திரன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உங்களது கிரியேட்டிவிட்டியை வளர்க்க உதவும் அற்புத நூல்!

படம்
        ஸ்டீல் லைக் என் ஆர்டிஸ்ட் ஆஸ்டின் கிளியோன் வொர்க்மேன் பதிப்பகம் இது ஒரு சுயமுன்னேற்ற நூல்தான். ஆனால், கார்ட்டூன் கலைஞர் எழுதியிருக்கிறார். அதனால் நூலை வாசிக்கும்போது, படங்கள் அதிகமாகவும் எழுத்து குறைவாகவும் உள்ளது. வாசிக்க அதுவே ஆர்வம் தருவதாகவும் அமைவது ஆச்சரியம்தான். பொதுவாக படம் வரைபவர்கள், அதாவது கார்ட்டூன் போடுபவர்களால் எழுதவும் முடியும். அதற்கு அவர்கள் சற்று நூல்களை படித்து பயிற்சி செய்யவேண்டும். அவ்வளவேதான். அந்தவகையில் ஆஸ்டின், தன்னுடைய அனுபவங்களை வாசகர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார். நூல் முழுக்க புகைப்படங்கள், எழுத்துகள் என அவரது கைவண்ணம் அழகாக உள்ளது. ஒருவர் தன்னுடைய திறமையை எப்படி வளர்த்துக்கொள்வது என எளிதாக கற்றுக்கொடுக்கிறார். அனைத்துமே எளிமையான சின்ன சின்ன விஷயங்கள்தான். குறிப்பாக, தினசரி நடக்கும் அனுபவங்களை நோட்டில் எழுதுவது, வேலை செய்யும் இடங்களை டிஜிட்டல் பொருட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது என சிலவற்றை செய்தாலே நிறைய வேறுபாடுகளை பார்க்கமுடியும் என விளக்கிக் கூறுகிறார். கூடுதலாக நிறைய எழுத்தாளர்கள். ஓவியர்கள், ஓவியக்கலைஞர்களின் மேற்கோள்களு...

எழுத்தாளர் செல்வேந்திரன் அவர்களுக்கு எழுதிய கடிதங்கள்!

    1 மதிப்பிற்குரிய எழுத்தாளர் கே செல்வேந்திரன் அவர்களுக்கு வணக்கம். நகுமோ லேய் பயலே என்ற உங்களது நூலை வாசித்தேன். கட்டுரைகளில் உள்ள நகைச்சுவை சிறப்பாக உள்ளது. நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், பார்த்தமுகம், தூஸ்ரா ஆகிய கட்டுரைகள் எனக்கு பிடித்திருந்தது.இலக்கியக் கட்டுரைகளில் மாசனமுத்து எழுதிய பொன்மொழிகள் கட்டுரை சிறப்பாக இருந்தது. நன்றி!    2   மதிப்பிற்குரிய எழுத்தாளர் செல்வேந்திரன் அவர்களுக்கு, வணக்கம். அண்மையில் தங்களுடைய உறைப்புளி என்ற கட்டுரை நூலைப் படித்தேன். ஸ்டார்ட்அப் தொழில் தோல்வி, பழந்தின்னி வௌவால், எழுத்தாளர் க.சீ சிவக்குமாருடனான எழுத்தாளருடனான உறவு, நூல் வாசிப்பு பயன் என பலதரப்பட்ட வாசிப்புக்கு ஊக்கமளிக்கும், உற்சாகத்தோடு வாசிக்கும்படியான அம்சங்கள் நூலில் இருந்தன. நாளிதழை விநியோகம் செய்பவர்கள் பற்றிய கட்டுரை, குறிப்பிட்ட சம்பவத்தை விவரித்தாலும், ஒரு சிறுகதை போன்ற வடிவத்தைக் கொண்டிருந்தது. அதில், ஆங்கில நூலொன்றையும் பரிந்துரை செய்திருந்தீர்கள். வாசிப்பை ஊக்குவிக்கும் முயற்சி. இறுதிக்கட்டுரை, கல்லூரியில் ஆற்றிய உரை. நூல்களை வாசிக்கும், விரும்புகி...

நூல் வாசிப்பை ஊக்குவிக்கும் பல்வேறு கருத்துகளை கூறுகிற கட்டுரை நூல்!

படம்
          உறைப்புளி செல்வேந்திரன் கட்டுரை நூல் இந்த நூல் கிண்டிலில் வெளியானது. மொத்தம் எழுபத்தாறு பக்கங்கள். மொத்தம் பத்து கட்டுரைகள் உள்ளன. இக்கட்டுரைகள் அனைத்துமே வாசகர்களுக்கு வாசிப்பு பற்றி, எழுத்தாளர்களைப் பற்றி நிறைய விஷயங்களைக்கூறுகிறது. நூலின் இறுதியாக இடம்பெற்றுள்ள கட்டுரை, நவீன கால இளைஞர்கள் தினசரி வாழ்க்கையைக் கூட அணுக முடியாமல் இருக்கிறார்கள். அதேசமயம் அவர்கள், சமூகத்தின் அனைத்தையும் மொக்கை என்ற ஒற்றைச் சொல் மூலம் எப்படி இழிவுபடுத்துகிறார்கள் என்பதைப் பற்றி விமர்சனமும் கண்டனமுமாக பேசியுள்ளது. அக்கட்டுரை இறுதியாக இடப்பெற்றது சிறப்பானதுதான். வாசிப்பு ஏன் முக்கியம் என்பதை மறக்கமுடியாதபடி காட்டமாக கூறுகிறது. கல்லூரியொன்றில் ஆற்றிய உரை, எழுத்தாக்கமாக மாற்றப்பட்டு இந்து தமிழ் திசையில் வெளியாகியுள்ளது. நடப்பு விஷயங்களோடு நூலின் தொடர்பு பற்றி தேடினால், இயக்குநர் மிஷ்கின் அகப்பட்டுவிடுகிறார். நூலில் அறம் புத்தகம் வெளியிடப்பட்டபோது அந்த விழாவுக்கு அவர் வருகை தந்தபோது நடந்த விஷயங்களைப் பற்றி விவரிக்கிற கட்டுரை ஒன்றுள்ளது. அந்தக்கட்டுரை, மிஷ்கினின் எளிய மனிதர்கள...