இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவின் பன்மைத்தன்மை கொண்ட உணவு கலாசாரத்தை சுவாரசியமாக விளக்கும் நூல்!

படம்
  A History of Food Culture in China By Rongguang Zhao Translated by Gangliu Wang and Aimee Yiran Wang 2015 இந்த நூல், சீனாவில் உள்ள உணவு வகைகள், அதன் தெற்கு, வடக்கு கலாசார வேறுபாடுகள், தின்பண்டங்கள், அறுசுவை பதார்த்தங்கள், மதுபான வகைகள், வெளிநாட்டு உணவு வகைகள், கலாசாரம் ஏற்படுத்திய தாக்கம், பல்வேறு நாடுகளுக்கு மன்னர் அனுப்பி வைத்து பிரதிநிதிகள் சேகரித்து வந்த அறிவியல், சமையல் தொடர்பான அறிவு என ஏராளமான விஷயங்களைப் பற்றி விளக்குகிறது.  நூலில் பல்வேறு உணவு பதார்த்தங்களுக்கான பெயர்களை சீன மொழியில் வாசிக்க முடிவது மகிழ்ச்சி. ஒரு தின்பண்டத்தை குறிப்பிட்ட திருவிழாவுக்கென தயாரிக்கிறார்கள். அதன் பின்னாலுள்ள கதை. அதில் மையமாக உள்ளது ஆணா, பெண்ணா என ஏராளமான விஷயங்களை நூலாசிரியர் விளக்கி கூறுகிறார். அவற்றை வாசிக்கும்போதே ஆச்சரியமாகிறது. உண்மையில் சீனாவில் உணவு கலாசாரம் ஒற்றைத்தன்மையானது அல்ல. பன்மைத்தன்மை கொண்டது. அந்த கலாசாரம், மேற்கத்திய உணவு, மதுபானங்களைக் கூட உள்ளே ஏற்றுக்கொண்டு வளர்ந்து வருகிறது. நூலின் இறுதிப்பகுதியில் பிரெஞ்சு நாட்டினர் ஆண்ட பகுதிகளில் இருந்த உணவுப்பழக்கவழக்கம், மத...

போபால் விஷக்கசிவு சம்பவத்தில் அரசியலை மட்டுமே அதிகம் கூறும் நூல்!

படம்
 போபால் அழிவின் அரசியல் மருதன் கிழக்குப் பதிப்பகம் மத்தியப் பிரதேசத்திலுள்ள போபால் நகரில் யூனியன் கார்பைடு ஆலை இயங்கி வந்தது. இங்கு 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி நடந்த விஷவாயு கசிவில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த விஷ வாயு பாதிப்பு நிலம், நீர், காற்று என்ற பரவி இன்றுவரை மக்களை வதைத்து வருகிறது.  நூலில் அக்காலகட்ட காங்கிரஸ் கட்சி அரசியல், அதிலுள்ள தலைவர்களின் நிலைப்பாடு, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் வரையில் கறைபடிந்தவர்கள் என நிறுவ முயல்கிறார் நூலாசிரியர்.   ராகுல் என்ற பாத்திரம், இந்திராகாந்தியின் மரணத்திற்கு பழிவாங்கவேண்டும் என்று கூறுகிறது. யார் இந்த ராகுல்  என புரியவில்லை. நூலை வாசிக்கும்போது நிறைய இடங்களில் இது புனைவா, கட்டுரையா என்று குழப்பம் வந்துகொண்டே இருக்கிறது.  நூலாசிரியர், கட்டுரைகளை எழுதுவதில் திறமையானவர். ஆனால், புனைவில் எப்படியோ தெரியவில்லை. இந்த நூலில் புனைவை முயன்றிருக்கிறார். அது எதிர்பார்த்தபடி சிறப்பாக அமையவில்லை.  பழங்குடி இனத்தைச் சேர்ந்த ரத்ன நடார், அவரது பிள்ளை பத்மினி வழியாக கதை சொல்லப்படுகிறது. இரண்ட...

சோவியத் யூனியனை கட்டமைத்த லெனினின் வாழ்க்கை வரலாறு!

படம்
  லெனின் மருதன்  கிழக்கு பதிப்பகம் ஸ்டாலின் நூலுக்குப் பிறகு லெனின் நூலுக்கு வந்திருக்கிறோம். இந்த நூல் லெனின், எப்படி ரஷ்யா ஜார் அரசை புரிந்துகொள்கிறார் என்பதில் இருந்து தொடங்குகிறது. பள்ளியில் படிக்கும் அவருக்கு ஆசிரியர் வழியாக செய்தி வருகிறது. அவரது அண்ணன் அரசர் ஜாரைக் கொல்ல முயன்று பிடிபட்டுவிட்டான். கொல்லப்போகிறார்கள் என. அந்த நாள் தொடங்கி அவரும் சகோதரி ஆன்னா, தாயார் ஆகியோர் படாதபாடுபடுகிறார்கள். லெனின், தனது அண்ணன் வழியாக கற்ற வி்ஷயங்களை அசைபோட்டுப் பார்க்கிறார். இந்த வகையில் நூல் சுவாரசியமாகவே உள்ளது.  நூலில், லெனினின் நூல் வாசிப்பு ஆர்வம், பிரசாரம், நாளிதழ் வெளியீடு - இஸ்க்ரா, பிராவ்தா, போராட்டம் என பல்வேறு விஷயங்களைப் பற்றி தெளிவாக கூறப்படுகிறது. சில இடங்களில் ஸ்டாலின் நூலில் வந்துள்ள பகுதிகளை அப்படியே எடுத்து வைத்துள்ளார்களோ என்று கூட தோன்றுகிறது. சம்பவங்கள் ஒன்றாக இருந்தாலும் அதுபற்றிய தோற்றத்தை கோணத்தை சற்றே வேறுபடுத்தி எழுதியிருக்கலாம்.  லெனின் சட்டப்படிப்பு படித்தவர். தன் வாழ்க்கை முழுவதும் அரசின் உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டவர். ஸ்வ...

உங்களது படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நூல் - டெய்லி ரிச்சுவல்

படம்
 டெய்லி ரிச்சுவல்  மாசன் குரே சுயமுன்னேற்ற நூல் 171 பக்கம் தினசரி சடங்கு என கலைஞர்களுக்கு என்ன இருக்கும்? கட்டுரை, நாவல், ஓவியம், திரைப்படம் இதுதானே? அதை எப்படி உருவாக்குகிறார்கள், அதற்கு என்னென்ன விஷயங்களை செய்கிறார்கள் என்பதுதான் நூலின் மையப்பொருள்.  நூலில் ஏராளமான திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், கட்டுமான கலைஞர்கள், ஓவியர்கள், இசை அமைப்பாளர்கள் தங்களின் பழக்க வழக்கம் பற்றி பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களே தங்களைப் பற்றி கூறுகிறார்கள் அல்லது அவர்களைப் பற்றி சுயசரிதை எழுதும் பத்திரிகையாளர்கள் விளக்கமாக எழுதியிருக்கிறார்கள். நூலை வாசிப்பவர்களுக்கு தேவையான குறிப்புகளும் கூட நூலின் பின்பக்கத்தில் உள்ளது. நூல்களை தேடி எடுத்து பார்த்துக்கொள்ளலாம்.  சில எழுத்தாளர்கள் திருமணம் செய்தாலும் கூட எழுத்தாளராக சாதிக்கும் இயல்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதற்காகவே ஒருவர் வேலைக்கு செல்வது இன்னொருவர் எழுதுவது என திட்டமிடுகிறார்கள். அதில் ஒருவர் வெற்றி பெறுகிறார், இன்னொருவர் தோல்வியுறுகிறார். இந்தவகையில் எழுத்தாளர் கார்சன், ரீவ்ஸ் ஜோடியில் கார்சன் வெற்றிபெறுகிறார். அதாவத...

தனது அம்மாவை அடித்தவர்களை பழிவாங்கும் எவர்க்கும் கீழ்ப்படியாத குணம் கொண்ட நாயகனின் போராட்டம்!

படம்
 தி வேஸ்ட்ரல் டர்ன்டு டு லெஜண்ட் மினி டிராமா டிராமா ரஷ் யூட்யூப் ராணுவ தளபதி குடும்பம். தளபதி இறந்துவிடுகிறார். அவருக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே. அவன் அரசு வேலைக்கு கூட முயலாமல் தத்தாரியாக சுற்றிக் கொண்டிருக்கிறான். ரே டுன் என்ற அவனது உடலில் வேறொருவரின் ஆன்மா உள்ளே புகுகிறது. அவனது குடும்பத்தில் அம்மா மருத்துவர். அவரது வருமானத்தில் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. நாயகனுக்கு அம்மா, அவர்கள் வளர்ப்பு பிள்ளையாக வளரும் பெண் சூ என்ற பெண் பிள்ளை இருக்கிறாள். நாயகன் ரேவுக்கு சூ தங்கை போல.  ரே டுன்னின் குடும்பம் நொடித்துப்போனதால் அவனோடு நகரத்தின் அட்மிரல் வார்ட் செய்துகொண்ட திருமண ஒப்பந்தத்தை முறித்துக்கொள்கிறார். அதற்கு அவர் ஒரு நாடகம் ஆடுகிறார். அதாவது, நாயகன் ரே வாழும் வீட்டை வார்ட் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவன் வாங்கிக்கொண்டதாக, அவர்களை காலி செய்யுமாறு மிரட்டுகிறான். அப்போது வார்ட் காப்பாற்றுவது போல வந்து வீட்டைக் காப்பாற்றிக் கொடுத்துவிட்டேன். கல்யாண ஒப்பந்தம் வேண்டாம் என்று சொல்கிறார். அதை ரே ஏற்றுக்கொள்வதில்லை.  வீட்டை காலி செய்ய வந்தவன், நாயகன் மீது பெண்ணை மானபங்கம் செய்வ...

பேரிடர் காலத்தில் உயிர்பிழைக்க தங்குமிடத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்!- ஆலோசனைகள்

படம்
  இயற்கை பேரிடர்களால் அல்லது இனவெறி, நிறவெறி, மதவாதிகள் செய்யும் கொடூர தாக்குதலால் சொத்துக்கள் அழிந்துவிட்டதா? வீடு புல்டோசரால் இடித்து தள்ளப்பட்டுவிட்டதா, சிறுபான்மையினர் என்பதால் காவல்துறை அடித்து துன்புறுத்துகிறதா, தேசதுரோக வழக்கு போடப்படுகிறதா இவை அனைத்துமே பேரிடர்கள்தான். அரசு உருவாக்குகிற பேரிடர்கள். இயற்கை பேரிடர்களை விட அரசு உருவாக்கும் பேரிடர்களை சமாளிப்பது கடினம். ஆபத்து வரும் நேரத்தில் முன்னே உதவி பெற்றவர்கள் உங்களை மறந்துவிடுவார்கள். எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்காது. சுற்றியுள்ளவர்களும் சால்ஜாப்பு சொல்வார்கள். இப்படியான நிலையும் பேரிடர்தான். இந்த சூழ்நிலையில் நீங்களும் உங்கள் குடும்பமும் தெருவில் நிற்காதபடி செல்ல பாதுகாப்பான்ன இடம் அவசியம். அதை குடும்பத்தினர் தவிர வேறு யாரும் அறிந்திருக்காமல் இருந்தால் நன்று. அனைத்து நாடுகளிலும் அவசர கால எச்சரிக்கை முறைகள் உண்டு. மூடநம்பிக்கை கொண்ட மாட்டை வழிபடும் இந்தியா போன்ற மதவாத நாட்டை விட்டுவிடுவோம். எப்போதும் போல அமெரிக்காவை கையில் எடுத்துக்கொள்வோம். அங்கு அவசரநிலையை நூறு நிமிடங்களில் அறிந்து மக்களுக்கு அதிபர் அறிவித்துவிட முடிய...

விரைவில் .... மின்னூல் வெளியீடு

படம்
  ராக்குட்டன் கோபோ, ஸ்மாஷ்வேர்ட்ஸ் தளங்களில் நூல் கிடைக்கும்....    

கலவரம் போர் என இரண்டிலும் தப்பி பிழைப்பது எப்படி?

படம்
எப்போதுமே ஆபத்து நேரும் என விழிப்புணர்வோடு இருங்கள் என ஹூவாய் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிறுவனர் ரென் கூறியுள்ளார். அப்படியான விழிப்புணர்வு சாதி, மதத்தால் உடைந்து நொறுக்கிப்போயுள்ள பெயரளவு ஜனநாயகம் கொண்ட இந்தியாவுக்கும் பொருந்தும். இங்கு எப்போது எந்த மேல்சாதிக்காரன், பழங்குடிகளை, தாழ்த்தப்பட்டவர்களை, தலித்துகளை தீ வைத்து எரிப்பான், அந்த இன பெண்களை வல்லுறவு செய்து கொன்று மரத்தில் தூக்கிக்கட்டுவான் என்று தெரியாது. பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாக்கி தண்டனை வழங்குவது இந்திய காவல்துறையின் தனிச்சிறப்பு. இப்படியான பண்பட்ட தேசத்தில் நீங்கள் விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே உங்களைக் காத்துக்கொள்ள முடியும். கூடவே சொத்துகள், குடும்பம் ஆகியவையும் அழியாமல் காக்கலாம். வாட்ஸ்அப் வழியாக மதவாத அரசு சுயமாகவே தனித்தனி குழுக்களை வைத்து போலிச்செய்திகளை பரப்பி வருகிறது. எனவே, இதைக்குறித்து அறிந்து கொண்டு கலவரத்தில் சிக்காமல், வீடு, தொழிற்சாலை, கடை எரிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இந்தியாவில் இயற்கை பேரிடர்களை, மதவாதிகள் உருவாக்கும் பேரிடர்களே அதிகம். எனவே, விழிப்போடு மீதமுள்ள நேர்மையான ஊடகங...

சீனாவின் பட்டுச்சாலை திட்டம் எதனால் முக்கியத்துவம் பெறுகிறது?

  பட்டுச்சாலை திட்டத்தை அதிபர் ஷி ச்சின் பிங் முன்மொழிந்தார். இந்த திட்டம் நிலம் நீர் என இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மூலம் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் சீனா முதலீடு செய்து பல்வேறு துறைகளை மேம்படுத்தும். பரஸ்பர நலன்கள், பயன்கள் சீனாவுக்கும், நட்புறவு நாடுகளுக்கும் ஏற்படும். சீனாவிலுள்ள மேற்குபகுதி மாகாணங்கள், நகரங்கள் பட்டுச்சாலை திட்டம் வழியாக வளம் பெறுகின்றன.  எதற்கு இந்த திட்டம் என பலரும் சீன வெறுப்போடு பேசி வருகிறார்கள். இந்தியாவில் உள்ள தேசிய ஆங்கில தினசரிகள் நடுப்பக்கத்தில் ஏராளமாக கட்டுரைகளை எழுதி குவிக்கின்றன. அவற்றில் வெறுப்பை தவிர எள்ளளவுக்கும் உண்மை கிடையாது.  கிழக்கில் உற்பத்தி செய்து மேற்கில் பயன்படுத்துதல் என்ற வகையில் பொருள் உற்பத்தியும் விற்பனையும் நடைபெற்று வருகிறது ஆனால், உண்மையில் அமெரிக்கா ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் நுகர்வு குறைந்து வருகிறது. எனவே பட்டுச்சாலை திட்டம் மூலம் பல்வேறு நாடுகளில் பொருட்களை தயாரித்து அவற்றை ஏற்றுமதி செய்யலாம். புதிய சந்தைகளை கண்டுபிடித்தால் நாடுகளின் பொருளாதாரமும் வளரும். சீனா தொடக்கத்தில் பெருமளவு உற...

சீன மினி டிராமாக்களில் உள்ள கிளிஷேக்கள்!

  சீன மினி டிராமா சீனர்கள் ஏராளமான மினி டிராமாக்களை தயாரித்து தள்ளுகின்றனர். அவை பெரும்பாலும் டிடி1 இல் வரும் டெலிபிலிம் தரத்தில் உள்ளன. டிராமா தலைப்பை சீனமொழியில் எழுதிவிடுகிறார்கள். இதனால் நாடக தலைப்பை குறிப்பிட முடியவில்லை.  நிறைய வசனங்களை எழுதிவிடுகிறார்கள். அதை மானாவாரியாக பேசித் தள்ளுகிறார்கள்.  காமெடிக்கு நிகராக பல பெண்களை பெண்டாளும் ஆண் நாயகனாக இருக்கிறான்.  பெண் அரசியாக இருந்தாலும் அவளை நாயகன் காமக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறான். அவளை பெண் என்ற அடிப்படையில் பார்க்கிறான். மதிக்கிறான். அவளது அறிவுக்கு புத்திசாலித்தனத்திற்கு எந்த மதிப்பும் கொடுப்பதில்லை.  தொன்மை காலத்தில் நவீன அறிவியல் கருவிகள் வருவது போல ஏராளமான நாடகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இப்படியான கதையில் எந்த லாஜிக்கும் கிடையாது. நீங்கள் ரிலாக்சாக காலை நீட்டிவிட்டு பார்க்கலாம். நல்லதே நடக்கும். நாயகனே ஜெயிப்பான்.  பெண் அரசன் அதாவது ஆண் என சொல்லி அரசாளுவாள். அதை நாம் ஒரே பார்வையில் அறிந்துகொள்ளும்போது அன்றைய கால அமைச்சர்கள் கண்டுபிடிக்க ஒன்றரை மணிநேரம் தேவைப்படுகிறது. பெண் திறமையாக இருந்து ஆ...

டைம் செல்வாக்கு பெற்றவர்கள் 2025 - உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சாதித்த மருத்துவர்

  டைம் செல்வாக்கு பெற்றவர்கள் 2025 லியாங்க் வென்ஃபெங் டீப் சீக் ஏஐ நிறுவன இயக்குநர் எல்லோரும் சாட்ஜிபிடி, கூகுள் ஜெமினி, பர்பிளக்சிட்டி என பேசிக்கொண்டிருக்கும்போது இணையத்திற்கு வந்த ஏஐ நிறுவனம். டீப்சிக் அமெரிக்க செயற்கை நுண்ணறிவு மாடல்களை விட குறைவானசெலவில் உருவாக்கப்பட்டது. இன்று ஆப்பிளின் ஆப்களில் அதிகம் தரவிறக்கம் செய்யப்படும் ஆப்களில் ஒன்றாக முதலிடத்தில் உள்ளது. சாட்ஜிபிடி போல பயன்படுத்த கட்டணம் ஏதும் கிடையாது. இலவசம். லியாங்க்கிற்கு நாற்பது வயதாகிறது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலுள்ள சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த டெக் ஆளுமை. ஸெஜியாங்க் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்தவர். சீனாவின் நம்பிக்கைக்குரிய ஏஐயாக நம்பப்படுவது, டீப் சீக்தான். நாங்கள் இப்போதைக்கு லாபம் சம்பாதிக்க ஆசைப்படவில்லை என சொல்லி ஆட்டத்தை தொடங்கியுள்ளார். சீனா முன்னேறிவிடுமோ என்ற பயத்தில் அமெரிக்கா கணினி, செயற்கை நுண்ணறிவு சிப்களை வாங்குவதற்கான தடைகளை விதித்துள்ளது. இப்படியான பாதகமான சூழ்நிலையிலும் கூட டீப் சீக் போன்ற சிறந்த ஏஐ ஒன்றை சீனா உருவாக்கி சாதித்துள்ளது. டீப் சீக் வெளியாகி வரவேற்பு பெற்றவுடனே...

''மக்களோடு இணைந்து தொற்றுநோய்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்கிறோம்'’

படம்
''மக்களோடு இணைந்து தொற்றுநோய்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்கிறோம்'’ கிறிஸ்டியன் ஹேப்பி, ஆப்பிரிக்க தொற்றுநோய் மரபணுவியல் மையத்தின் நிறுவனர். இந்த மையம், ஆப்பிரிக்க மருத்துவர்களுக்கு வேகமாக பரவும் தொற்றுநோய் பற்றிய பயிற்சியை, எச்சரிக்கை செயல்பாடுகளை கருவிகளை வழங்குகிறது. 2025ஆம் ஆண்டு டைம் வார இதழின் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் பட்டியலில் கிறிஸ்டியன் ஹேப்பி இடம்பிடித்துள்ளார். நீங்கள் செய்துகொண்டிருக்கும் பணி, அதற்கான தீர்வு பற்றி சுருக்கமாக விளக்க முடியுமா? நான் மூலக்கூறு உயிரியல் மற்றும் மரபணுவியல் துறை சார்ந்த பேராசிரியர். ரெட்டீமர் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய்க்கான மரபணு மையத்தின் இயக்குநராக பணியாற்றிவருகிறேன். ஆப்பிரிக்காவில் பரவும் தொற்றுநோய்களை தடுக்க, 2013ஆம் ஆண்டு மரபணு மையத்தை தொடங்கினோம். ஆப்பிரிக்காவில் எபோலா தொற்று பரவத்தொடங்கிய காலம்தொட்டு தொற்றுநோய் பரவுதலை தடுக்க முயன்று வருகிறோம். கடந்த பத்தாண்டுகளாக இயங்கி வந்தாலும் இத்துறைக்கு நாங்கள் புதிய நிறுவனம்தான். துறையில் செய்து வரும் அடிப்படைக் கட்டமைப்பு, மேம்பாடு, தொற்றுநோயை எதிர்கொள்வதற்கான மருத்துவப...

''ஆராய்ச்சித் துறையில் பெண்கள் பற்றிய முன்முடிவுகளை மாற்றவேண்டும் என நினைக்கிறேன்'’

''ஆராய்ச்சித் துறையில் பெண்கள் பற்றிய முன்முடிவுகளை மாற்றவேண்டும் என நினைக்கிறேன்'’ சாண்ட்ரா டயஸ், அர்ஜென்டினாவைச் சேர்ந்த இயற்கை ஆராய்ச்சியாளர், கார்டோபா தேசிய பல்கலைக்கழக பேராசிரியர். சூழலியல் மற்றும் இயற்கை பன்மைத்தன்மை ஆராய்ச்சியில் தவிர்க்க முடியாத ஆளுமை. 2025ஆம் ஆண்டு க்கான சுற்றுச்சூழல் அறிவியல் சாதனைக்கு வழங்கப்படும் டைலர் விருதை மானுடவியலாளரான எடுவர்டோ பிரான்டிசியோவுடன் இணைந்து பெறவுள்ளார். தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த இருவர் டைலர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. டைம் வார இதழில் 2025 ஆம் ஆண்டில் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். பள்ளி, கல்லூரிகளில் உங்களது வாழ்க்கை எப்படி சென்றது, சூழல் ஆராய்ச்சியை உங்களது இலக்காக எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? பள்ளி, கல்லூரி காலம் இன்னும் மறக்காமல் நினைவிலிருக்கிறது. தொடக்க, உயர்கல்வியை சிறு நகரத்தில் படித்தேன். பிறகு, கார்டோபா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தேன். என்னுடைய பதினேழு வயதில் கல்விக்காக பெருநகரத்திற்கு வந்தது சாகசமாகவும், அதேசமயம் சுதந்திரத்தை அனுபவிப்பதாகவும்...

வேலைவாய்ப்பு பற்றி மாற்றி யோசிக்கவேண்டிய நேரமிது!

படம்
  எம்ப்ளாய்மென்ட் இஸ் டெட் ஜோஸ் டிரியன், டெபோரா பெர்ரி பிசியன் ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ பிரஸ் இன்றைய காலத்தில் வேலைவாய்ப்பு சந்தை எப்படி இணையம் சார்ந்ததாக மாறியுள்ளது. அதற்கேற்ப ஒருவர் தன்னை மாற்றிக்கொள்வது, மேம்படுத்திக்கொள்வது எப்படி என இந்நூல் விளக்குகிறது. செயற்கை நுண்ணறிவு காலத்தில் வாழ்கிறோம். ஏறத்தாழ அனைத்து டெக் நிறுவனங்களிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பணியாளர்கள் நீக்கப்பட்டுக்கொண்டு வருகிறார்கள். மைக்ரோசாப்டில் அண்மையில் ஆறாயிரம் பேர் பணிவிலக்கப்பட்டனர். ஏனெனில் அங்கு கோடிங்குகளில் முப்பது சதவீதத்தை செயற்கை நுண்ணறிவு எழுதுகிறது. பணியாளர்களுக்கான தேவை குறைந்து வருகிறது. ஒருவர் வேலையில் தாக்குப்பிடிக்க வேண்டுமென்றால் வாழ்நாள் முழுக்க கற்க வேண்டிய தேவை உள்ளது. படிப்பு என்பது பள்ளி, கல்லூரியோடு முடிவதில்லை. தொடர்ச்சியாக எந்த வேலை செய்தாலும் மென்மேலும் இணைய படிப்புகள், பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டய படிப்புகளை படித்து தன்னை மேம்படுத்தி்க்கொண்டே இருப்பவர் எப்படியும் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை நூல் விளக்கமாக எடுத்து கூறுகிறது. சாதாரண வாசகர் படிப்பதை விட இணையம் சார்ந்த க...

வாசனை திரவியம் தயாரித்து பாலுறவுக்கு உந்தி காதல் மோசடி செய்யும் பெண்களை தண்டிக்கும் நாயகன்!

படம்
  கம்மாத்து தெலுங்கு சுவாதி தீக்சித் ஆங்கிலத்தில் வெளியான பர்ஃப்யூம் படத்தை பார்த்திருக்கிறீர்களா? அதன் மலினமான தழுவல். இப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டு கதை திரைக்கதை வசனம் என இயக்குநர் பெயர் போட்டுக்கொள்கிறார். கூச்சமே இல்லை. ஒரு படத்தை தழுவி இன்னொரு படத்தை எடுப்பது முற்றாக தவறு இல்லை. ஆனால், மூலப்படத்தை கேவலப்படுத்தாத வகையில் எடுக்கலாம். அதைவிட மேம்படுத்தி எடுக்கலாம். இப்படி எந்த இரண்டு வகையில் வராத மாதிரி படத்தை கிண்டி வைத்திருக்கிறார் இயக்குநர். அறிவியல் ஆராய்ச்சி செய்பவன் என்றாலே மூக்கு கண்ணாடி போட்டிருக்கவேண்டும். முடியை வெட்டாமல் விடவேண்டும் என கிளிஷே அவதாரமாக நாயகன் பாத்திரம் உள்ளது. பள்ளியில், கல்லூரியில் நன்றாக நடிப்பவர். ஆபாச படத்தை நண்பர்களுடன் பார்த்து வாசனை திரவியம் ஒன்றை உருவாக்கி அதன் வழியாக காம உணர்வை தூண்டவேண்டும் என லட்சியம் கொள்கிறார். முதுகலை படித்துக்கொண்டே ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். அதில் கிடைக்கும் வருமானம்தான் அபார்ட்மென்ட் வாடகை, சாப்பாடு, அவரது அருகிலுள்ள திரைப்பட உதவி இயக்குநருக்கான உணவு, மதுபான செலவு எல்லாம்.... அந்த பக்கத்து வீட்டு அண்ணன் பாத்திர...

காப்புரிமையால் நீக்கப்பட்ட பதிவு மீண்டும் பதிவேற்றம் - மங்கா காமிக்ஸ் விமர்சனத்திற்கு வந்த சோதனை!

படம்
    அல்டிமேட் சோல்ஜர் என்ற மங்கா காமிக்ஸை படித்துவிட்டு அதைப்பற்றிய விமர்சனம் ஒன்றை கோமாளிமேடையில் பதிவிட்டிருந்தோம். விமர்சனம்தான். அதற்கே வி்ஷ் மீடியா நிறுவனத்தின் எரிக் க்ரீன் என்பவர் புகார் கொடுத்து காப்புரிமை விதி மீறல் என அறிவித்துவிட்டார். அவரது நிறுவனத்தின் காமிக்ஸை பலரும் பிரதி எடுத்து வெவ்வேறு தளங்களில் வெளியிடுகிறார்கள். அதை தடுப்பது அவர்களது நிறுவனத்தின் வேலை. இதில் காமிக்ஸை படித்துவிட்டு அது எங்கே கிடைக்கும் என இணைய லிங்கை பரிந்துரைத்தது காப்புரிமை புகாருக்கு உட்பட்டிருக்கிறது.   பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமை என்ற பெயரில் பலரையும் மிரட்டி வருகிறார்கள். அனி என்ற செய்தி நிறுவனம் கூட யூட்யூபர்களை மிரட்டி சேனல்களை மூட போலியான புகார்களை அனுப்பி வருவதை செய்திகளில் அறிந்திருப்பீர்கள்.   கோமாளிமேடையின் பதிவு, இணைய லிங்க் இல்லாமல் மீண்டும் பதிவிடப்படுகிறது. தனிநபர்கள் பங்களிப்புடன் வெற்றி பெற்ற பிளாக்கர் நிறுவனம், இப்போது உலகிலுள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் கையில் சிக்கிவிட்டது என்பதை அறியும்போது வேதனையாக உள்ளது. இனி வரும் நாட்களில் இதுபோன்ற நி...

தலித் - உயிர் வாழும் பிணம் மின்னூல் கிடைக்கும் வலைத்தளங்கள்!

      தலித் - உயிர் வாழும் பிணம் பத்திரிகையாளர் விடி ராஜசேகர் எழுதிய ஆங்கில நூலின் தழுவல்.  ஆர்ச்சீவ் தளத்தில் இருந்து நூலை வாசிக்கலாம். தரவிறக்கிக்கொள்ளலாம். https://archive.org/details/20250610_20250610_0146  வீ டிரான்ஸ்பர் தளம் - கோப்பு மூன்று நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். https://we.tl/t-ONNByEgTOx

தலித் - உயிர் வாழும் பிணம் இலவச மின்னூல் வெளியீடு

படம்
\    நூலை இலவசமாக வாசிக்கலாம். தரவிறக்கி கொள்ளலாம். நூலை தமிழ் வாசிப்பு வலைதளங்கள், குறுஞ்செய்தி தளங்கள் தரவிறக்கி பதிவிட்டு பயன்படுத்துவது அவர்களது முழுப்பொறுப்பு. இதுதொடர்பாக வரும் புகார்களுக்கு கோமாளிமேடை குழு பொறுப்பல்ல.     https://www.academia.edu/129854276/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE_

அமெரிக்கா, சீனா வர்த்தகப்போரில் மாட்டிக்கொண்ட ஹூவாய்!

படம்
  ஹவுஸ் ஆப் ஹூவாய் ஈவா டு பெங்குவின் 2025 சீனாவின் ஹூவாய் நிறுவனத்தை அறிந்திருக்கிறீர்களா? வதந்தி நாளிதழைபடிப்பவர்கள் கூட தடை செய்யப்பட்ட சீன நிறுவனம் என தகவல் அறிந்திருப்பார்கள்.அதை அறியாதவர்கள் கூட ஹூவாயின் பிராண்டான ஹானர் போனை பயன்படுத்தியிருக்க கூடும். சீனா மட்டுமல்ல வல்லரசு நாடுகளிலும் சிறப்பாக வளர்ந்து வந்த நிறுவனம் ட்ரம்ப் காலத்தில் வழக்கு போடப்பட்டு அதன் வளர்ச்சி பலவந்தமாக தடுக்கப்பட்டது. ஒரு நாடு மட்டுமல்ல, அமெரிக்காவின் நட்பு நாடுகள் பலவும் ஹூவாயின் தொலைத்தொடர்பு சேவையை, பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்தின. இந்த நூல், ஹூவாய் நிறுவனர் ரென்னின் முதல் மனைவி மகளான ரென் வாங்சூ கனடாவில் காவல்துறையால் கைது செய்யப்படுவதில் தொடங்கி அந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்னே என்ன நடந்தது, பின்னே என்ன நடந்தது என விளக்கி ஹூவாய் எப்படி எதிர்ப்பை சந்தித்து தன்னை காப்பாற்றிக்கொண்டது என்பதோடு நிறைவடைகிறது. நூல் முழுக்க ஹூவாய் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்கள், அதை செய்ய அந்த நிறுவனம் செய்த முயற்சி, திட்டமிடல் ஆகியவை நிறைந்திருக்கிறது. அதேசமயம். சீன நிறுவனம் என்ற ஒரே காரணத்திற்காக இரு நாடுகளுக்கு ...

இந்தியர்களுக்கு முதல் முன்னுரிமை சாதி, துணைச்சாதிகள்தான், பிறகுதான் நாடு!

படம்
பிரிட்டிஷார் இந்தியாவை ஆளும்போது, ஒரே அரசாக மக்களை ஒன்றாக வைத்திருந்தனர். அவர்கள் 1947ஆம் ஆண்டு வெளியேறியவுடன் நாடு இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாக பிரிந்துவிட்டது. நாகா பழங்குடிகளுக்கு தனி மாநிலம் வழங்கப்பட்டது. தனி மாநில கோரிக்கையை பலரும் கேட்டு வருகிறார்கள். சீக்கியர்கள், காலிஸ்தான் எனும் தனி நாட்டுக்காக போராடி வருகிறார்கள். இந்துமதம், இந்தியர்களுக்கு இடையே பிரிவினையை உருவாக்குகிறது. எனவே நாடு, பல்வேறு பிரிவு, துணைப்பிரிவுகளாக பிரிந்து வருகிறது. இந்தியாவில் இப்போது இந்தியர்கள் என யாருமே இல்லை. இந்தியர்களுக்கு முதல் முன்னுரிமை சாதி, துணைச்சாதிதான். இதற்கெல்லாம் பிறகுதான் நாடு வருகிறது. இந்தியாவுக்கும் வெளிநாட்டினர் இதை எளிதாக அறிந்துகொள்ள முடியும். அமெரிக்காவில் உள்ள இந்துகள் கூட தீண்டாமை, சாதி விதிகள், பிரிவினைகளை கடைபிடிக்கிறார்கள். இந்துகள் அவர்கள் போகும் இடங்களிலெல்லாம் அவர்களது சாதியை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள கருப்பினத்தவர்களுக்கு நடக்கும் அநீதி, ஆரியர்கள் தீண்டத்தகாதவர்களுக்கு செய்வதை ஒத்தது. 1947ஆம் ஆண்டுக்குப் பிறகு முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்க...