இடுகைகள்

மாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒருவர் சாப்பிட்ட மாட்டிறைச்சியைக் கண்டுபிடித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பும் ஆப்!

படம்
24 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட்ட மாட்டிறைச்சி!- சஞ்சார் பாட்டி ஆப் பயங்கரம்! அண்மையில், ஒன்றிய அரசு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் உள்ள கண்காணிப்பு ஆப்களைப் போல ஒன்றை வடிவமைத்தது. தொடக்கத்தில் இந்த ஆப், சிம்களை தவறாக பயன்படுத்துபவர்களைக் கண்டுபிடிப்பது. அதை முடக்குவது என்றே வலைத்தளமாக இயங்கியது. பிறகு, திடீரென போன்களுக்கு ஆப்பை தரவிறக்கி பதியுங்கள் என மிரட்டும் தொனியில் குறுஞ்செய்திகள் வரத் தொடங்கின. இறுதியாக, தகவல்தொடர்புதுறை அமைச்சர் புதிதாக தயாரிக்கும் போன்களிலும், பழைய போன்களிலும் கண்காணிப்பு ஆப் இடம்பெற வேண்டும் என உத்தரவிட்டார். ஆப்பிள் நிறுவனம், முடியாது என்ற ஒற்றைப் பதிலை சொல்லிவிட்டது. மற்றவர்கள் அமைதி காத்தனர். அமலாக்கத்துறை பயமாக இருக்கலாம். இணையத்தில், சர்வாதிகார நாடாக மாறிவிட்டதா இந்தியா என கேள்வி எழும்ப அமைச்சர் எப்போதும் போல ஆர்எஸ்எஸ் பாரம்பரியத்தைப் பின்பற்றி மன்னிப்பு கோரி, உத்தரவை திரும்ப பெற்றுள்ளார். காலில் விழுவது, மன்னிப்பு கோருவது ஆர்எஸ்எஸ் ஆட்களுக்கு புதிதல்ல. ஆனால், அவர்களிடம் பொறுக்கித் தின்பவர்களுக்கு இன்னும் அந்த சடங்குகள் புரிபடவில்லை. சரி, இப்போது அந்த ஆப்...

நோபல் பரிசும் - இந்தியாவின் பெருமைமிக்க அறிவியல் கட்டமைப்பும்....!

படம்
            நோபல் பரிசும் - இந்தியாவின் பெருமைமிக்க அறிவியல் கட்டமைப்பும்....! நோபல் பரிசை இந்தியா ஐந்துமுறை பெற்றுள்ளது. மீதிமுறை எல்லாம் இந்திய வம்சாவளி என தலைப்பு எழுதி இந்திய கைக்கூலி ஊடகங்கள் பெருமைப்பட்டுக்கொண்டன. மற்றபடி கல்வி ஆராய்ச்சிகளுக்கே பெரிய அளவு வரிவிதிப்பு விதிக்கப்பட்டு வருகிற நிலையில் நோபல் பரிசு என்ன, ஆராய்ச்சி செய்பவனுக்கு மரியாதையே சமூகத்தில் இருக்காது. அறிவியலாளர்களுக்கு மதிப்பு கொடுக்கவேண்டிய இடத்தில் மத தலைவர்கள், சாதி தலைவர்கள், பார்ப்பன பூசாரி, பண்டாரங்கள் அமர வைக்கப்பட்டு வருகிறார்கள். இப்படியான மத அடிப்படைவாத சிக்கல்கள் இருந்தாலும் டாப் 10 நோபல் பரிசு பட்டியலில் இந்தியா வந்துவிடும் என சிலர் பகல் கனவு கண்டு வருகிறார்கள். இப்போதைக்கு நோபல் பரிசு பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், ரஷ்யா, ஜப்பான், கனடா, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. ஆதிவாசி, பழங்குடி மக்களுக்கான மேம்பாட்டு நிதியை பசுமாட்டு மடங்கள் கட்ட மாநில அரசுகள் செலவழித்து வருகின்றன. இந்த நிலையில், மனிதர்கள் அழிந்து மாடுகள் மட்டுமே வா...

விலங்குகளை கால்நடை பராமரிப்பாளர் நேசிக்கத்தொடங்கும் புள்ளி! - பால்து ஜன்வர் - பசில் ஜோசப், ஸ்ருதி

படம்
  பால்து ஜன்வர் பால்து ஜன்வர் பால்து ஜன்வர் ஷம்மி திலகன் - பால்து ஜன்வர் பால்து ஜான்வர் மலையாளம் இயக்குநர் - சங்கீத் பி ராஜன் பசில் ஜோசப், திலீஷ் போத்தன், ஷம்மி திலகன்   அனிமேஷன் நிறுவனம் தொடங்கி அதில் தோல்வி கண்ட இளைஞன், பிரசூன் கிருஷ்ணகுமார். அவருக்கு அரசு வேலையாக கிராமம் ஒன்றில் கால்நடைகளை சோதித்து நோய் தீர்க்கும் வேலை கிடைக்கிறது. வேறுவழியின்றி வேண்டா வெறுப்பாக அந்த வேலைக்கு செல்பவனின் வாழ்க்கையே படத்தின் கதை. பிரசூன், நகரத்து நாகரிக ஆள். அவருக்கு கிராமம், அங்குள்ள மனிதர்கள், விலங்குகளை நேசிக்கும் பாங்கு என அனைத்துமே புதிது. கூடுதலாக அவரின் தலைவராக இருப்பவர், எம்எல்எம் நிறுவனங்களின் மீது ஆர்வம் கொண்டவர். இவருக்கும் பிரசூனுக்கும் விரைவில் முட்டிக்கொள்கிறது. அதேநேரம் பணி சார்ந்து அவருக்கு பெரிய அறிவு கிடையாது. அவரின் பெண்தோழிதான் பிரசூனுக்கு நிறைய உதவிகளை செய்கிறாள். பிரசூன் கால்நடை கண்காணிப்பு ஆய்வாளராக வேலையை தீவிரமாக செய்ய நினைக்கிறார். ஆனாலும் மருத்துவ நிலைய தலைவர், உள்ளூர் வார்டு உறுப்பினர் ஆகியோரின் அரசியல், சுயநலம் சார்ந்த காரணங்களால் நிறைய  பேரிடம் பிரசூன் அவமான...

புரதச்சத்தை உடலுக்கு பெறும் ஒரே வழி - கறி சாப்பிடுவதுதான்!

படம்
                        finger licking good -Meat இப்படி நிறையப் பேர் சொல்லுவார்கள். புரத தேவைக்கு ஒரே எளிதான வழி இறைச்சி என பலரும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.  ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை. காய்கறிகள், பிற தானியங்கள் என பல்வேறு உணவுப்பொருட்களிலும் புரதம் உள்ளது. இறைச்சியை பட்டினி கிடந்தவர்கள் சாப்பிடுவது போல சாப்பிட்டால், உடல் கெட்டுவிடும். இதயம்., நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் உறுதியாக ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆதிக்காலத்தில் நாம் இறைச்சியைத்தான் சாப்பிட்டோம் என ஐந்துவீட்டு சாமி துணை பக்தர்கள் கொந்தளிக்கலாம். ஆனால் அன்று உணவுக்கு வேட்டையாடி சாப்பிடும் தேவை இருந்தது. பயிர் விளைவித்து சாப்பிடும் புத்தி உருவாகவில்லை. அப்படி ஒரு ஒப்பீட்டை எடுத்தாலும் கூட இன்று ஆண்டுக்கு ஒருவர் சாப்பிடும் இறைச்சி அளவு அதிகம். புரதம். விலை குறைவு என நிறைய காரணங்களை லாஜிக்காக சொல்லலாம். இதனை நாம் மறுக்கவில்லை. இறைச்சியில் எளிதாக நுண்ணுயிரிகள் தொற்றிக்கொள்வதால், அதனை சாப்பிடுபவர்களுக்கு எளிதாக வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். இறை...

மாடுகளை வதைக்கின்றனவா பால் பண்ணைகள்? - வலுப்படும் எதிர்ப்புகள்

படம்
  உலகம் முழுவதும் உள்ள பால் பண்ணைகளுக்கு எதிராக பல்வேறு விலங்கு நல அமைப்புகள் போராடி வருகின்றன.  உலகநாடுகளில் இயங்கி வரும் பால் பண்ணைகள் மூலம்தான் பதப்படுத்தப்பட்ட பால், ஐஸ்க்ரீம், யோகர்ட், வெண்ணெய், நெய், சீஸ், பனீர் ஆகிய பால் பொருட்கள் கிடைக்கின்றன. மிதமிஞ்சிய பாலை பால் பௌடராக மாற்றி உலகச்சந்தையில் பல்வேறு நாடுகளும் விற்பனை செய்து வருகின்றன.  பால் பண்ணைகளில் உற்பத்தி குறையாமலிருக்க பசுக்கள் செயற்கை முறையில் சினையூட்டம் பெற்று கன்றுகளை ஈனுகின்றன. பசுக்களின் பராமரிப்பு, இயற்கையான முறை அல்லாமல் செயற்கையான சினையூட்டப்படுவது, கிடாரிக்கன்றுகளை வைத்துக்கொண்டு கிடாய்களை இறைச்சிக்கு விற்றுவிடுவது ஆகியவற்றுக்கு எதிராக விலங்குநல ஆர்வலர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.  அமெரிக்காவில் பால்துறை சந்தை தோராயமாக 60 ஆயிரம் கோடிக்கும் அதிகம். அங்கு  மாட்டிறைச்சி உணவுகளுக்கான சந்தையும் பெரியது. இருபது ஆண்டுகாலம் வாழும் பசு, ஐந்து ஆண்டுகளிலேயே பால் வளத்தை இழந்து, இறைச்சிக்காக விற்கப்பட்டுவிடுகின்றன. பால் வளமின்றி வளர்ப்பது விவசாயிகளுக்கு சுமை என்று கூறப்படுகிறது. ’’இங்கு பெறப்படும...