இடுகைகள்

வீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குணச்சித்திரம் - இரு திருடர்கள்

படம்
  இரு திருடர்கள்.  எங்கள் தெருவில் இரு திருடர்கள் இருக்கிறார்கள். இந்த இரு திருடர்களும் ஒருவரையொருர் நன்றாக அறிவார்கள். இருவரும் பெண்கள். இவர்களின்  கணவன்மார்கள் சகோதர்கள். சொத்துக்களை தனியாக வைத்துக்கொண்டு குடித்தனம் செய்கிறார்கள். பெரிதாக இருவருக்கும் இடையே நட்பும் கிடையாது. விரோதமும் கிடையாது. பொதுவாக யாராவது ஒருவரிடம் திருட வேண்டுமென்றால் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள்.   முதல் திருடரைப் பார்ப்போம். இவரது கணவர் தென்னை மரம் ஏறி பிழைப்பவர். இப்போது வயதாகிவிட்டது. இவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் அப்படியே திருட்டு, கொள்ளை, மோசடி, வஞ்சகம், துரோகம் ஆகியவற்றை செய்வதில் கைதேர்ந்தவர்கள். ஐந்து பிள்ளைகள். மூன்று பெண் பிள்ளைகளில் ஒருவர் மட்டுமே அந்தளவு மோசமில்லை என்று சொல்லாம். கடைசியாக பிறந்தது ஆண் பிள்ளை. இருப்பதிலேயே ஈவு இரக்கம் இல்லாத ஈனப்பிறவி.  முதலில் மின் பொருட்கள் சார்ந்த தொழிலை கற்றவர், பிறகு காப்பீடு முகவராக மாறினார். ஏஜெண்டாக மக்களிடம் பெற்ற பணத்தை அரசு நிறுவனத்திற்கு செலுத்தவில்லை. தன்னுடைய சொந்த கணக்கில் போட்டுக்கொண்டார். பிறகு நல்ல நாள் பார்த்து ராகு எமகண்டம்...

பிழைத்திருப்போம்! மின்சாரம் என் மீது பாய்கின்றதே?

படம்
  பிழைத்திருப்போம்! மின்சாரம் என் மீது பாய்கின்றதே? மின்சாரம் இல்லாமல் மனிதர்கள் வாழ்ந்த காலம் ஒன்றுண்டு. இன்று அப்படியான காலம் சாத்தியமில்லை. அதை சாத்தியப்படுத்த இயற்கை பேரிடர்கள் முயல்கின்றன. மின்சாரம் இல்லையென்றாலும் எப்படி சமாளிப்பது என்று பார்ப்போம். ஜெனரேட்டர்களை வாங்கவில்லையா? வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். கூடவே அதற்கான பெட்ரோல், டீசலும் போதுமான அளவுக்கு தேவை. அடிப்படையில் உணவு, நீர், தங்கும் இடம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாகவே மின்சாரம் வரும். எனவே மின்சாரத்தையே நினைத்து அடிப்படை விஷயங்களை கோட்டை விட வேண்டாம். செல்போன், இபுக் ரீடர், ஷேவிங் கருவிகள், அடுப்பு என அனைத்துமே மின்சாரத்தில் இயங்குபவை என்றால் மின்சாரத்தை ஜெனரேட்டர் வழியாக பெறுவதற்கு முயலவேண்டும். வேறு வழியே இல்லை. வீட்டில் சோலார் முறையில் மின்சாரம் தயாரிக்க ஏற்பாடு செய்திருந்தாலும் நன்மையே. ஆபத்துகாலத்தில் ஜெனரேட்டர்களை அதிக விலைக்கு விற்பார்கள். எனவே, முன்னமே வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. பவர் பேங்குகளின் காலம் இது. எனவே, அவற்றை சார்ஜ் போட்டு வைத்தால் போன்களை உயிரோடு வைத்துக்கொள்ளலாம். மின்சாரம் இல்லாதபோது போனில் பணத...

பேரிடர் கால பாதுகாப்பு, கொள்ளையிலிருந்து விடுதலை

படம்
  பேரிடர் கால பாதுகாப்பு, கொள்ளையிலிருந்து விடுதலை பேரிடர் காலங்களில் வீடுகளில் புகுந்து பொருட்களை திருட பலரும் முயல்வார்கள். மனிதர்கள் இயல்பாகவே மோசமானவர்கள்தான். சட்டங்கள் இருப்பதால், அவர்கள் வேறு வழியின்றி தண்டனைக்கு பயந்து நல்லவர்களாக நடிக்கிறார்கள். நான் இப்போது சொல்வது குரூரமாக இருந்தாலும் ஆபத்தான காலங்களில் மனிதர்களின் மனம் மோசமானது என்பதை நிரூபிக்க நிறைய உதாரணங்கள் உண்டு பேரிடர் அல்லது மதக்கலவரம் உருவாக்கப்படும்போது பாதிக்கப்படுபவர்களின் வீடுகளை கொள்ளையிடுவது, பெண்களை வல்லுறவு செய்வது இயல்பானது. இதை தடுக்க வீடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும். இதை செய்து கொடுப்பு பாதுகாப்பு நிறுவனங்கள் இயங்குகின்றன. கதவுகளை பூட்டுவது, பாதுகாப்பு கேமரா, அலாரம் எழுப்புவது, கதவுகளை குறிப்பிட்ட நேரத்தில் முழுமையாக பூட்டுவது என நிறைய வசதிகள் வந்துவிட்டன. தற்காப்புக்காக ஒருவரை தாக்குவது என்றாலும் அந்தந்த நிலப்பரப்பிற்கு ஏற்றவகையில் சட்டங்கள் மாறுபட்டிருக்கும். அதை புரிந்துகொண்டு இருக்கவேண்டும். ஆயுதங்களை கையாளும் சூழலில்,  முறையாக பயிற்சி எடுப்பது நல்லது. இந்தியாவில் இந்துத்துவ மதவா...

புதுயுக தலைவர்கள் - எதிர்காலத்திற்கு ஏற்ற கட்டுமானங்கள்

படம்
            next generation leaders -time அரைன் ஆப்ராமியன் கட்டுமானக் கலைஞர் லெபனான் நாட்டின் பெய்ரூட்டில் உள்ள கட்டுமானக் கலைஞர். ஆர்மேனிய இனத்தைச் சேர்ந்தவரான இவர், பெய்ரூட்டின் கிழக்குப்பகுதியில் தங்கி வாழ்ந்தபோது வீடுகள் குறுகியதாக இருந்தன. வசிக்கவே இடமில்லாதபோது விளையாட இடம் எங்கு கிடைக்கப்போகிறது? அரைன் குடும்பமாக தங்கியிருந்த இடத்தில், பூங்காக்களோ, விளையாட்டு மைதானமோ ஏதுமில்லை. இதுவே அவர் பின்னாளில் உருவாக்கிய கட்டுமானங்களில் திறந்தவெளிகள் அதிகம் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம். அரைனின் அம்மாவுக்கு அறிவியல் திரைப்படங்கள் என்றால் அந்தளவு இஷ்டமாம். எனவே, அனிமேஷன், எழுத்துகள், ஓவியங்கள் என பலவற்றிலிருந்து கட்டுமான கலைக்கான ஐடியாக்களை பிடித்து வருகிறார். அரைனின் கட்டுமானங்களில் உள்ள சிறப்பம்சம், அவை எதிர்காலத்திற்கான சிக்கல்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்படுவை என்பதுதான். ஒருமுறை சகாரா பாலைவனத்தில் அருகில் உள்ள குளம் ஒன்றில் உள்ள உப்பு, களிமண், கனிமங்கள் கொண்டே கட்டுமானம் ஒன்றை உருவாக்கித் தர கூறியிருக்கிறார்கள். அதையும் செய்து சாதித்திருக்கிறார். ஏற்கெனவ...

கருப்பினத்தவருக்கு குடியிருக்க வீடுகளைப் பெற்றுத்தர உதவும் போராட்டக்காரர்!

படம்
  லிசா ரைஸ்  lisa rice வீடுகளை வாங்குவதில், வாடகைக்கு பிடிப்பதில் சாதி, மத, இன வெறி இயல்பாக வெளிப்பட்டுவருகிறது. இதற்கு மேற்குலக நாடுகளும் விதிவிலக்கு கிடையாது. இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, சிறுபான்மையினருக்கு சாதி, மத இழிவு நடக்கிறது என்றால் வெளிநாடுகளில் கருப்பினத்தவருக்கு நடக்கிறது. ஒருவர் வீடு வாங்குவதில் வாடகைக்கு பிடிப்பதில் நிறவெறி சார்ந்த சிக்கல்கள் எழுந்தால் அந்த விவகாரங்களை லிசா ரைஸ் கையாண்டு தீர்வுகளை எட்ட முயல்கிறார்.  அமெரிக்காவில் சொந்த வீடு வைத்துள்ள வெள்ளையர்களின் எண்ணிக்கை அதிகம். வாடகைக்கு வீடு கொடுப்பது, வீடுகளை வாங்குவது ஆகியவற்றில் கருப்பினர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அறுபதுகளில் சிறுபான்மையினர் நிறம் சார்ந்த புறக்கணிப்பை அனுமதித்தனர் என்றால் இப்போது வீடு, நிதி வசதி சார்ந்து உருவாக்கப்பட்ட அமைப்புகளின் மூலம் அதே விஷயம் ஒழுங்குமுறையாக நிகழ்த்தப்படுகிறது. தேசிய வீட்டுவசதி கூட்டமைபு என்ற நிறுவனத்தின் அதிபர், இயக்குநராக உள்ள லிசா ரைஸ், இன்று பாகுபாடு என்பது தானியங்கி முறையி்ல மாறியுள்ளது. எனவே இதை எதிர்கொள்வது கடினம் என்றார். பாகுபாட்டிற்கு எத...

கான்ட்ராக்ட் கல்யாணத்தால் களேபரமாகும் வினோத தம்பதியினரின் வாழ்க்கை!

படம்
  பிகஸ் திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் லைஃப் - கே டிராமா பிகஸ் திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் லைஃப் கே டிராமா   -16 எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்   எல்லாவற்றையும் பொருளியலாக, பணமாக, பரிவரத்தனையாக மாற்றும் ஒருவருக்கும், கல்யாணம் செய்யவேண்டுமென்றால் காதல் வேண்டும் என அடம்பிடிக்கும் பெண்ணுக்கும் நடக்கும் கான்ட்ராக்ட் கல்யாணத்தின் களேபர விளைவுகள்தான் கதை. இந்த கே டிராமா, பிற தொடர்களைப் போல காதலை மட்டும் உயர்வாக பேசவில்லை. காதல் அதைச்சார்ந்த இருவரின் பிரச்னைகள், காதலை சமூகம் எப்படி பார்க்கிறது, பெற்றோர் அதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள், காதல் இருவருக்கும் போதுமானது. ஆனால், திருமணம் என்பது எப்படிப்பட்ட பொறுப்புகளைக் கொண்டது என தொடர் நெடுக விவாதிக்கிறார்கள்.   இந்த கே டிராமா இயக்குநர், இறுதிப்பகுதியை மனப்பூர்வமாக எடுக்கவில்லை. அதைத்தவிர மற்ற எபிசோடுகள் பதினைந்தையும் நன்றாக எடுத்திருக்கிறார். டேட்டிங் ஆப் நிறுவனத்தில் திட்டத் தலைவராக உள்ள நாம் சே கி, டிவி தொடர்களுக்கு எழுத்தாளராக முயலும் ஜி ஹோ , தனி நிறுவனத்தைத் தொடங்கி நடத்த நினைக்கும் சூ ஜி, திருமணம் செய்து குழந்தை பெற்றாலே சாத...

காதலியை பேருந்து விபத்தில் பறிகொடுத்துவிட்டு, வினோதமான நபராக மாறும் காதலன்! - ஸ்டில் 17- தென்கொரிய தொடர்

படம்
  ஸ்டில் 17 கே டிராமா ஸ்டில் 17 கே டிராமா ஸ்டில் 17 தென்கொரிய டிவி தொடர் யூட்யூப் – எஸ்பிஎஸ் வேர்ல்ட் கொரியாவின் சியோல் நகரம். இங்கு, பதினேழு வயதான காங் வூ ஜின் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறான். அப்போது, இசையை அனுபவித்து வாசிக்கும் பள்ளிச்சிறுமி ஒருத்தியை பார்க்கிறான். அவள் வயலின் வாசிப்பவள். பள்ளியில் போட்டியில் வாசித்து வென்று ஜெர்மனிக்கு பயிற்சிக்கு போகும் சூழலில் இருக்கிறாள். காங்கிற்கு, அவள் பெயர் தெரியாது. ஒருநாள் சைக்கிளில் வரும்போது, பள்ளிச் சீருடையுடன் சிறுமி ஒருத்தி நடைமேடையில் நிற்கிறாள்.   கைவிரல்களை முயல்போலாக்கி நிலவைப் பார்த்தபடி இருக்கிறாள். அப்போதுதான் தான் விரும்பும் சிறுமியின் பெயரை நோ சுமி என அறிகிறான். அந்த போஸை அப்படியே படமாக வரையும் காங், அவளிடம் கொடுத்து நட்பாக நினைக்கிறான். ஆனால், திடீரென நடக்கும் பேருந்து விபத்தில் நோ சுமி என்ற பெயர் கொண்ட சிறுமி இறந்துபோகிறாள். இதனால், காங் மனம் உடைந்து போகிறான்.   விபத்தான பேருந்தில் அன்றைக்கு பயணித்த காங், தான் விரும்பிய சிறுமிக்கு கலை அரங்கம் செல்ல தவறான வழியை சொல்லிவிடுகிறான். அந்த சிறுமியும் அதேப...

வீடு என்பது நம் அனைவருக்கும் முக்கியமானது! - விஷால் பரத்வாஜ், இந்தி சினிமா இயக்குநர்

படம்
  விஷால் பரத்வாஜ்  இந்தி சினிமா இயக்குநர் மாரேங்கே டு வாஹின் ஜாகர் என்ற பாடலுக்காக விஷாலுக்கு, தேசிய விருது கிடைத்துள்ளது.  உங்களுக்கு முன்னரே தேசியவிருது கிடைத்துள்ளது. இப்போது கிடைத்த விருது எந்த வகையில் முக்கியமாகிறது? பெருந்தொற்று காலகட்ட அவலத்தைச் சொல்லும் ஆவணப்படத்திற்கான பாடல் இது. நமக்கு பெருந்தொற்று காலத்தில் பிழைப்புக்கான பிரச்னை எழவில்லை. ஆனால், தினசரி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தான் தங்கள் வீட்டை எட்ட பல கி.மீ. நடக்க நேரிட்டது.இவர்களைப் பார்க்கும்போது எனது பிள்ளைகள், மனைவியோடு வீட்டில் பாதுகாப்பாக இருந்தது கடும் குற்றவுணர்ச்சியை அளித்தது.  இதனால்தான் ஆவணப்படத்தை இயக்கி அதற்கென பாடலை உருவாக்கினேன்.  நெட்பிளிக்ஸிற்காக கூஃபியா என்ற திரில்லர் படத்தை உருவாக்கியுள்ளீர்கள். இது சவாலைக் கொடுத்ததா? இல்லை. இப்படி இயங்குவது எனக்கு விருந்து சாப்பிடுவது போலத்தான். இந்த வாய்ப்பு எனக்குள்ளிருந்து குழந்தையை வெளியே கொண்டு வருவது போல இருந்தது. நான் சாகச நாவல்கள், உளவு நாவல்களை விரும்பி படிப்பவன்.  குட்டே என்ற படத்தை உங்கள் மகன் இயக...

மக்களை புன்னகைக்க செய்ய நினைத்தேன்! பாலகிருஷ்ண தோஷி, கட்டுமானக் கலைஞர்

படம்
பி.வி. பாலகிருஷ்ணா தோஷி கட்டுமான கலைஞர்  பிரைட்ஸ்கர் பிரைஸ் என்ற கட்டுமான கலையின் நோபல் என்று அழைக்கப்படும் பரிசைப் பெற்றிருக்கிறீர்கள். இதோடு ராயல் கோல்டு மெடல் பரிசும் கிடைத்துள்ளது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ரிபா அமைப்புடன் எனது தொடர்பு பல்லாண்டுகளாக இருந்து வருகிறது. கட்டுமானக் கல்வியை படித்தபோதிலிருந்து எனக்கு அந்த அமைப்புடன் நல்ல உறவு உண்டு.  நான் ரிபா அமைப்பின் நூலகத்தை பயன்படுத்தி வந்தேன். அங்கு படித்த நூல்களைப் பற்றிய நினைவுகள் எனக்கு இன்றும் இருக்கிறது.  அவை சிறப்பானவை. லே கார்பசியர் ரிபா தங்கமெடல் விருதை வாங்கும்போது நான் அவருடன் தான் இருந்தேன்.  லே கார்பசியரை எப்படி உங்களது குரு என்று சொல்லுகிறீர்கள்? ஒரு இடத்தில் வெளிச்சம் எப்படி இருக்கவேண்டும், அமைப்பு, மேசைகளின் இடம் பற்றியெல்லாம் விளக்கியிருக்கிறார். இதைப்பற்றி எழுதிய தாள் எனது மேசை டிராயரில் இப்போதும் உள்ளது. பின்னாளில் தான் அவர் வரைந்து வைத்த இடம் உண்மையில் கிடையாது என்றும், தாளில் மட்டும் தான் உருவானது என தெரிந்தது. ஆனால் அவரது கிரியேட்டிவிட்டி என்னை ஆச்சரியப்படுத்தியது என்று தனியாக கூறவேண்ட...

கங்கை ஆற்றால் நிலமிழந்த மக்கள் - கண்டுகொள்ளாத மாநில, மத்திய அரசுகள்!

படம்
கங்கை ஆற்றால் அரிக்கப்படும் நிலம்!  கடல், ஆறு ஆகியவற்றால் நிலப்பரப்பு அரிக்கப்பட்டு வருவது காலம்தோறும்  நடந்துவருகிறது. மேற்கு வங்கத்தின், மால்டா, முர்ஷிதாபாத், நாடியா ஆகிய மாவட்டங்களில் 400 சதுர கி.மீ. நிலப்பரப்பு அரிக்கப்பட்டுள்ளது. இதை மாநில அரசின் ஆய்வே, வெளிப்படுத்தியுள்ளது. கங்கை ஆறு மூலமாக நிலப்பரப்பு அரிக்கப்படுவது புதிதாக நடக்கவில்லை. அறுபது ஆண்டுகளாக நடந்த  மண் அரிப்பு, பெருமளவு நிலப்பரப்பை சிதைத்துள்ளது. மண் அரிப்பின் பாதிப்பால், பல லட்சம் மக்களின் வீடுகள் அழிந்துவிட்டன. இதோடு அவர்களின் விளைநிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஃபராக்கா தடுப்பணை மேற்கு வங்கத்தில் கட்டப்பட்டு இருந்தாலும் கூட கங்கையின் சீற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மால்டாவிலிருந்த மசூதி, பள்ளிக்கட்டடம் உள்ளிட்டவை கங்கை ஆற்று நீரால் சிதைந்தன. இப்படி நடந்த சம்பவத்திற்கு மத்திய, மாநில அரசு என இரண்டுமே எந்த உதவியையும் செய்யவில்லை. ”ஆண்டுக்கு 73 கோடியே 60 லட்சம் டன்கள் வண்டல் மண் கங்கை ஆற்றில் படிகிறது. அதனை புனரமைத்தாலே பாதிப்புகள் குறையும். இதில் 32 கோடியே 80 ல...

பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு எதிராக மாணவர்களிடம் பிரசாரம்!

படம்
  பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் சூழல் அமைப்பு! பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் மூலமாக உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிடுவது அதிகரித்தது. இதன் விளைவாக உருவான பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றி பலரும் கவலைப்படவில்லை. இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டி, வீட்டில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முயல்கிறது வாக் ஃபார் பிளாஸ்டிக் (Walk for Plastic)என்ற சூழல் அமைப்பு. இது, 2019ஆம் ஆண்டு பி.கௌதம் என்பவரால் தொடங்கப்பட்ட அமைப்பு. சூழல் பற்றிய பல்வேறு தன்னார்வ செயல்பாடுகளை சமூக வலைத்தளத்தில் பிரசாரம் செய்கிறது.  “எங்களது வாக் ஃப்ரம் ஹோம் என்ற பிரசார திட்டம், வீட்டில் சேரும் நாமறியாத பிளாஸ்டிக் குப்பைகளை அடையாளம் கண்டு அதனைக் கட்டுப்படுத்த, மறுசுழற்சி செய்ய உதவுகிறது” என்றார் கௌதம்.  கடந்த மாதத்தில், நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் பற்றிய விழிப்புணர்வை வாக் ஃபார் பிளாஸ்டிக் அமைப்பு பிரசாரம் செய்தது. பிளாஸ்டிக் பாட்டில்களை கைவிட்டு ஸ்டீல் பாட்டில்களுக்கு மாறியவர்கள் தங்களது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர். வாக் ஃப்ரம் ஹோம் திட்டத்தில், 1500க்கும் மேற்பட்ட குடும்பங்க...

பெண்களால் ஓரம்கட்டப்பட்ட டேஞ்சர் டயாபாலிக்! கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியர் கே.என். சிவராமன் அவர்களுக்கு,  வணக்கம். வரும் வெள்ளி ஊருக்கு சென்று மருந்துகள் வாங்க வேண்டியிருக்கிறது. தாய்மாமன்களில் நடுமாமன் தார்ச்சு கட்டிடம் கட்டிவிட்டார். இது கூட தாமதமான முயற்சிதான். புதுமனை புகுவிழா நடத்த அழைப்பு விடுத்தார்கள். ஆனால் என்னால் போகமுடியவில்லை. எங்கள் குடும்பத்தினர் செல்வார்கள்.  துரோகம் ஒரு தொடர்கதை காமிக்ஸ் படித்தேன். டேஞ்சர் டயபாலிக் கௌரவ தோற்றத்தில் வரும் காமிக்ஸ் என்று சொல்லலாம். இதில் கோரா, ஈவா என்ற இருபெண்கள்தான் கதையை நகர்த்தி செல்கிறார்கள். இதனால் ஒரு கட்டத்தில் கதை சலிப்பாகிவிடுகிறது.  உறவுப்பாலம் என்று இலங்கை சிறுகதைத் தொகுப்பை படித்து வருகிறேன். எட்டு சிங்களச்சிறுகதைகளில் மூன்று நன்றாக இருக்கிறது. மறுபடியும், அக்கா,  இன்று என் மகன் வீடு வருகிறான் ஆகிய கதைகள் எனக்கு பிடித்திருந்தன. இன்று என் மகன் வீடு வருகிறான் கதை, காவல்துறையால் பிடிக்கப்பட்டு காவல்நிலையத்திற்கு சென்ற மகன் திரும்ப வருவான் என கல்லூரி வாசலில் காத்திருக்கும் தாய் பற்றிய கதை. இந்த மையம் வழியாக தாயின் மகன் என்ன செய்தான், அதற்கு அரசு எடுத்த நடவடிக்க...

ரூல்ஸ் பேசும் பையனும், விதிகளை காற்றில் பறக்கவிட்டு அன்பாக பழகும் பெண்ணும் ஒரே வீட்டில் வாழ்ந்தால்... எவரிவேர் ஐ கோ துருக்கி தொடர்

படம்
              எவரிவேர் ஐ கோ துருக்கி தொடர் 75 எபிசோடுகள் ரூல்ஸ் பார்த் தேதான் அனைத்தும் செய்யும் பொறியாளரும் , அன்பிற்கு எதற்கு ரூல்ஸ் என அனைவரிடமும் பிரியம் காட்டி வாழு்ம பெண்ணும் ஒரே வீட்டில் இருக்கும்படி இருந்தால்…… அதுதான் ப்ரோ கதை . டெமிர் எராண்டல் ஜப்பான் நாட்டிலிருந்து துருக்கியிலுள்ள இஸ்தான்புல்லுக்கு வருகிறார் . அவர் வருகைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது . ஜப்பானில் இருந்தபடியே இஸ்தான்புல்லில் ஒரு வீட்டை விலைக்கு வாங்குகிறார் . அந்த வீடு அவரின் கடந்த காலத்தோடு தொடர்புடையது . அதனை மனதிற்கு நெருக்கமாக நினைக்கிறார் . அதேநேரம் இஸ்தான்புல்லில் உள்ள ஆர்டிம் என்ற கட்டுமான நிறுவனத்தில் பங்குகளை வாங்கி அதன் மேனேஜராக பதவியேற்கவிருக்கிறான் .    தான் வாழும் வீட்டைப் பார்க்க வருபவனுக்கு அதிர்ச்சி . அவனுக்கு முன்னாலேயே அங்கு யாரோ குடியிருக்கிறார்க்ள . அது யார் என்று பார்க்கும்போதுதான் அவனை இளம்பெண் ஒருத்தி கட்டையாலே தலையில் அடித்து மயங்க வைக்கிறாள் . கண்விழித்துப் பார்த்தால் டெமிரை கைது செய்ய போலீஸ் ந...