இடுகைகள்

சின்னம்மை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குரங்கம்மை தொற்று!

படம்
        எம்பாக்ஸ் - குரங்கம்மை ஆப்பிரிக்காவில் மக்களைத் தாக்கி கொன்று கொண்டிருந்த எம்பாக்ஸ் இப்போது வெளிநாடுகளுக்கும் பரவ தொடங்கிவிட்டது. ஸ்வீடன், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் எம்பாக்ஸ் நோயாளிகள் அறியப்பட்டுள்ளனர். கண்டறியப்பட்ட நோயாளிகள் இருவருமே ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகளிலிருந்து வந்தவர்கள் என மருத்துவர்கள் தகவல்களை அறியத் தருகிறார்கள். 1958ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்ட அம்மை நோய் இது. டென்மார்க் நாட்டில் நடந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது. குரங்கம்மை என்று கூறுவதில் இனம் சார்ந்த சிக்கல் எழ உலக சுகாதார அமைப்பு, மங்கி பாக்ஸ் என்பதை எம்பாக்ஸ் என அழைக்கலாம் என்று கூறியது. 1970ஆம் ஆண்டு, பத்து வயது சிறுவனுக்கு குரங்கம்மை தாக்கியது. அந்த சிறுவன் காங்கோ நாட்டை பூர்விகமாக கொண்டவன். முன்னெச்சரிக்கை குரங்கம்மை தாக்குதல் கொண்ட நாடுகளுக்கு செல்பவர்கள் தனிப்பட்ட சுகாதாரத்தில் கவனமாக இருக்கவேண்டும். இறைச்சி உணவுகளைத் தவிர்க்கவேண்டும். நோய் பாதிக்கப்பட்டவர்களையும் விலங்குகளையும் பார்த்த உடனே பதறி விலகி இருக்கவேண்டும். காய்ச்சல், தோலில் அழற்சி இருந்தால் உடனே மருத்துவரை ...

சின்னம்மை ஒழித்த 42ஆவது ஆண்டு! - எட்வர்ட் ஜென்னரின் மகத்தான தடுப்பூசி கண்டுபிடிப்பு

படம்
  இன்று இரண்டு விஷயங்கள் உலகில் நடக்கின்றன. ஒன்று, நோய்த்தொற்றை தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என ஒரு பிரிவும், அதைப் போடக்கூடாது அப்படி போடுவதும் போடாததும் மக்களின் விருப்பம் எனவும் ஒரு பிரிவு பேசிக்கொண்டிருக்கிறது. எலன் மஸ்க் என்ன சொல்கிறார் என்றால், அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்தான். அதை ஊக்கப்படுத்தலாம். ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்கிறார். இந்த வகையில் இந்த விவாதத்திற்கு முக்கியமான காரணம், எட்வர்ட் ஜென்னர்.  இவர்தான் தடுப்பூசியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர், கண்டுபிடிப்பாளர். 1749ஆம் ஆண்டு மே 17 அன்று இங்கிலாந்தில் உள்ள பெர்க்கிலியில் பிறந்தார்.  இவரின் காலத்தில் சின்னம்மை பலருக்கும் அதிகரித்து அதற்கான சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் நிறையப் பேர் இறந்துகொண்டிருந்தனர். சுருக்கமாக சொல்வதென்றால், மக்கள் தொகையில் இருபது சதவீதம் பேர்.  ஜென்னர் தனது ஆராய்ச்சியில் ஒரு த த்துவத்தை உருவாக்கினார். ஒருவருக்கு சின்னம்மை வந்தும் கூட உயிர்பிழைத்து விட்டாரா? உடனே அவரைத் தேடிப் பிடித்து சோதித்தால் அவரது உடலில் நோய்க்கு எதிரான பொருட்கள் இருக்கும் என்று கூறி...