இடுகைகள்

இதயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரிய ரத்தவகை எது?

படம்
   அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஒருவரின் தலைமுடியை வைத்து என்னென்ன விஷயங்களைக் கண்டுபிடிக்க முடியும்? ஒருவரின் பாலினம், வயது. என்ன மருந்துகளை சாப்பிட்டார் என்பதை கண்டுபிடிக்கலாம். பிள்ளைகளை அறிய டிஎன்ஏ பரிசோதனையும் செய்யலாம். இதயத்தின் வேலை என்ன? ஒரு நிமிடத்திற்கு எழுபத்தைந்து முறை துடிக்கிறது. ஒரு துடிப்பிற்கு 71 கிராம் ரத்தத்தை பல்வேறு உறுப்புகளுக்கு அனுப்புகிறது. இந்த வகையில் நாளுக்கு 9,450 லிட்டர் ரத்தத்தை உடலெங்கும் அனுப்புகிறது. இதயம் சிறியதாக இருந்தால், அதன் துடிப்பு அதிகமாக இருக்கும். பெண்களுக்கு நிமிடத்திற்கு ஆறு முதல் எட்டு துடிப்புகளாக உள்ளது. இது ஆண்களின் இதயத்துடிப்பை விட அதிகம். பிறந்த குழந்தைக்கு ஒரு நிமிடத்திற்கு 130 முறை இதயம் துடிக்கிறது. தூங்கும்போது இதயம் நின்றுவிடுகிறதா? இதயம் துடிக்கும் வேகம் மட்டுப்படுகிறது. அதனால் இதயம் வேலை செய்யவில்லையா என வதந்திகளை சிலர் பரப்புகிறார்கள். அது உ்ணமையல்ல. இதயம் எப்போதும் துடிப்பதை நிறுத்துவதில்லை. ஒருவரின் ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு இருப்பது உண்மையா? ஒரு லிட்டரில் 19-50 மில்லிமீட்டர் அளவு கார்பன் டை ஆக்சைடு ...

திருமணமாகாத இளம் பெண்களின் ரத்தத்தைக் குடித்து இதயத்தைத் தின்னும் கொடூர பிசாசு!

படம்
      வா அருகில் வா கோட்டயம் புஷ்பநாத் திகில் நாவல் கோட்டயம் புஷ்பநாத் எழுதும் நாவலில் என்னென்ன எதிர்பார்ப்போம். இயக்குநர் சுந்தர்சி போல கிளுகிளுப்பாக திகில் கதைகளை எழுதுவார். இதிலும் பெண்களின் பெண்களின் நைட் கவுன் பட்டன்கள் தெறிக்கின்றன. அதைவிட முக்கியம், நாயகி லூசி இறுதியாக கர்த்தரை சரணடைந்து தனது பாவத்தை ஏற்று மடைமாறுகிறாள். அதனால் அவள் உயிர் பிழைக்கிறாள். ஜானி, லூஸி இருவருக்கும் பெற்றோர் பார்த்து வைத்து மணம் செய்கிறார்கள். முதலிரவிலேயே மணமகன் லூசியை தொடாமல் மதுபானத்தை தொட்டு ரசித்துக் குடிக்கிறான். சிகரெட் புகைக்கிறான். இதிலேயே அவனுக்கு உடலுறவில் பெரிய ஈடுபாடு இல்லையோ என்று தோன்றுகிறது. அங்கு வந்து பரிசில், ஒரு கடிதம் இருக்கிறது. அதில் அவர்கள் தேனிலவை தனது பங்களாவில் கொண்டாடலாம் என பெர்னார்ட் என்பவர் அழைப்பு விடுத்திருக்கிறார். அவர் யாரென்று கூட விசாரிக்காமல் இருவரும் தேனிலவுக்கு அந்த மர்ம பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு நேரும் திகில் அனுபவங்கள்தான் கதையின் முக்கியப் பகுதி. லூசிக்கு அந்த பங்களா, அதன் வினோதமான இயல்பு எல்லாமே பயம் தருகிறது. ஆனால் கணவன் மது...

பாய்சன் ஐவி தாவரம் ஏற்படுத்தும் ஒவ்வாமை பாதிப்புகள்!

படம்
        அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி சல்பைட்டுகளால் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்பு என்ன? உலர் பழங்கள், புதிதாக பறிக்கப்பட்ட காய்கறிகள், ஒயின் வகைகள் ஆகியவற்றில் சல்பைட்டுகள் சேர்க்கப்படுகின்றன. சல்பைட்டுகள், பொருட்கள் கெட்டுப்போகாமல் காக்கின்றன. நுண்ணுயிரிகளை அழிக்கின்றன. ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சல்பைட்டுகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சல்பைட்டுகள், உடலுக்குள் செல்லும்போது மூச்சு திணறல் ஏற்படும். சுயநினைவை இழந்து கீழே வீழ்வார்கள். அனபைலாடிக் ஷாக் பாதிப்பு ஏற்படும். உடனே மருத்துவ உதவிகளை செய்யவேண்டும். மாரடைப்பை மருத்துவத்தில் எப்படி குறிப்பிடுகிறார்கள்? மையோகார்டியல் இன்ஃபார்க்சன். இதய தசைகளுக்கு ரத்தம் செல்லாமல் தடுக்கப்படும்போது, அந்த செல்கள் இறந்துபோகின்றன. இதனால் உண்டாவதே மாரடைப்பு. அமெரிக்காவில், ஒருமுறை மாரடைப்பு வந்துவிட்டால் நோயாளிகளில் 33 சதவீதம் பேர் அடுத்த இருபது நாட்களில் மரணித்து விடுகிறார்கள். உடனே இறந்துபோகிறவர்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்து வருகிறது. உடலை குறிப்பிட்ட இடைவேளையில் சோதித்துக்கொள்வது நல்லது. மாரடைப்பு அபாயத்தை முன்னரே கண்டறிந்தால் சிகிச்சை ...

இதயத்தை மீண்டும் இயங்க வைக்கும் சிபிஆர் முறையைக் கண்டறிந்தவர் - மிஸ்டர் ரோனி

படம்
                      அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி திடீரென நின்றுபோன இதயத்தை துடிக்க வைக்கும் சிபிஆர் முறையை கண்டறிந்தது யார்? சிபிஆர் என்றால், கார்டியோபல்மொனரி ரீசஸ்டிகேஷன் என்பது விரிவாக்கம். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த அறுவை சிகிச்சை வல்லுநரான வில்லியம் டோசாக், வாய் வழியாக பிராணவாயுவை செலுத்தி ஒருவரைக் காப்பாற்ற முயலும் முறையைக் கண்டுபிடித்தார். அக்காலகட்டத்தில் இம்முறை, பெரிதாக மேம்படுத்தப்படவில்லை. பின்னாளில், எட்வர்ட் ஸ்காஃபர், மூச்சு விடுவதற்கு மார்பில் அழுத்தம் கொடுக்கும் முறையை உருவாக்கினார். 1910ஆம் ஆண்டு அமெரிக்க செஞ்சிலுவை சங்கம், எட்வர்டின் மார்பில் கைகளை வைத்து அழுத்தம் கொடுக்கும் முறையை செயல்படுத்த முன்வந்தது. ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தெல்லோ ஆர் லாங்வொர்த்தி, ஆர் டி ஹூக்கர், வில்லியம் பி குவென்ஹோவன் ஆகியோர் இணைந்து மார்பில் அழுத்தம் கொடுக்கும் இதயத்தை இயங்கச் செய்யும் முறையை மேம்படுத்தினர். இதயத்தில் நின்றுபோன ரத்த ஓட்டத்தை மார்பில் அழுத்தம் கொடுப்பது, மீண்டும் தடையை நீக்கி சீராக ஓடவைக்...

தூக்கத்தைப் பாதிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு! - என்ன செய்யலாம்?

படம்
        தூக்கத்தைக் குறைக்கும் ஸ்மார்ட்போன் போன்களை எந்த நேரத்தில் பயன்படுத்துவது என்பதை வரையறை செய்துகொள்ளலாம். இதற்கென ஆப்கள் சந்தையில் கிடைக்கின்றன. போனைப் பயன்படுத்தும் நேரம் போக மீதியுள்ள நேரத்தில உடற்பயிற்சிகளை செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக நேரம் போனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி ஏராளமான கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றை வாசித்து நிலைமையைப் புரிந்துகொள்ளலாம். ஸ்மார்ட்போன்களில் வெல்பீயிங் என்ற வசதியை கூகுள் வழங்குகிறது. அதை சோதித்தால் எவ்வளவு நேரம் எந்த ஆப்பை பயன்படுத்தினோம் என்ற தகவலைப் பெறலாம். போனை அணைத்துவைத்துவிட்டு குடும்பத்தோடு நேரத்தை செலவிடுங்கள் என டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழே விளம்பரம் செய்து வருகிறது. உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசலாம். வீட்டு வேலைகளைச் செய்யலாம். இனி தூக்கம் பற்றி அறையை இருட்டாக்கி, அமைதியாக இருக்கும்படி பார்த்துக்கொண்டால் போதும். சற்று குளுமையாக இருப்பது கூடுதல் நன்மை தரும். அப்போது தூக்கம் வருவது எளிதாக இருக்கும். தூங்கும்போது, சற்று முன்னதாக படுக்கைக்கு வந்து உடலை நீட்டி நெகிழ்த்தி தி...

உடற்பயிற்சியே ஒரு மருந்துதான்!

படம்
  உடற்பயிற்சியே ஒரு மருந்துதான்! உடற்பயிற்சி செய்யவே ஒருவர் சற்றேனும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். யோகா செய்ய பொறுமை தேவை. ஆனால் எடைகளை தூக்க, கயிறுகளை இழுக்க, பலம் தேவை. இப்படி செய்யும் உடற்பயிற்சி ஒருவருக்கு மருந்தாக செயல்படுகிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உடற்பயிற்சி செய்பவர்கள், திண்ணென்ற மார்பை பிறருக்கு காட்ட முயல்வார்கள். ஆனால் அதை பயில்வதன் மூலம் நோயை விரட்ட முடியுமா? மார்க் டர்னோபோலோஸ்கி என்ற ஆராய்ச்சியாளர், முன்கூட்டியே வயதாகுவதை ஏற்படுத்தும் மரபணு பிரச்னை தொடர்பாக ஆராய்ந்தார். இதில், உடற்பயிற்சி செய்தவர்களுக்கு நோயின் பாதிப்பு சற்று குறைவாக இருந்தது. பொதுவாக உடல் ஆரோக்கியம் என்ற வகையில் உடற்பயிற்சி சரிதான் என்பவர்களும் கூட பயிற்சிகளை அடர்த்தியாக தீவிரமாக செய்யத் தொடங்குபவர்களை நேரத்தை வீணடிக்கிறான் என்பார்கள். உண்மையில், உடற்பயிற்சி முன்கூட்டியே நோய்களை தடுப்பதோடு, உடலில் உள்ள நோய்களின் பாதிப்பையும் குறைக்கிறது என்பதே உண்மை.  ஆராய்ச்சியாளர் மார்க், எலிகளை வைத்து செய்த சோதனையில் பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தார். அதில், உடற்பயிற்சி செய்ய பயிற்றுவிக்கப்பட்ட எலிகளின் ...

ஒரே பெண்ணை காவல்துறை அதிகாரி காதலிக்க, சீரியல் கொலைகாரன் பாதுகாக்க நினைக்க.. மூவரது வாழ்க்கையை இணைக்கும் காலச்சரடு!

படம்
  பார்ன் அகெய்ன் கே டிராமா 32 எபிசோடுகள் இரண்டுபிறவி கதை. முதல் பிறவியில் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்த மூன்றுபேர் மீண்டும் பிறந்து வாழ்க்கையை வாழ முயல்கிறார்கள். அவர்களது வாழ்க்கை எப்படி அமைந்தது என்பதே கதை. பதினாறு எபிசோடுகள் வரும் கதையை, அரைமணி நேரமாக பிரித்து சீன தொடர்கள் அளவுக்கு நீட்டியிருக்கிறார்கள். இதுதான் தொடரைப் பற்றிய முதல் மைனஸ் பாய்ண்டாக சொல்லவேண்டும். இந்த தொடரில் கொலை, அதைப்பற்றிய விசாரணை, நீதிமன்ற உரையாடல்கள் என நிறைய விஷயங்கள் உண்டு. ஆனால் கதையின் போக்கு நிதானமாகவே இருக்கிறது. பெரிய பரபரப்பு, திகில் என எதையும் அடையவேண்டியதில்லை. இந்த கதையை அதிகாரத்தில் உள்ளவர்களின் சுயநலம், முன்முடிவுகளால் பாதிக்கப்படும் அப்பாவி ஒருவரின் கதை என்று எளிமையாக கூறலாம். சமூக பொதுப்புத்தியில் கொலைகாரரின் மகன் கொலைகாரன்தான், திருடனின் மகன் திருடன்தான் அல்லது குற்றவாளியாகவே இருப்பான் என நினைக்கப்படுவதை தொடரில் வரும் நாயகியைத் தவிர்த்த பிற பாத்திரங்கள் முழுமையாக ஏற்கிறார்கள். அதைப்பற்றிய குற்றவுணர்ச்சியே இல்லாமல் இயங்குகிறார்கள். இதனால் சீரியல் கொலைகாரரின் மகன் வாழ்க்கை அபாயத்தில் சிக்குகிறது....

மாரடைப்பைத் தடுக்கும் புதிய வழிகள்!

படம்
                மாரடைப்பைத் தடுப்பது எப்படி ? மாரடைப்பைத் தடுக்க சிபிஆர் , டிபைபிரிலேட்டர் ஆகிய வசதிகளைப் பயன்படுத்துகிறார்கள் . அப்படி இல்லாமலும் நிறைய நுணுக்கங்கள் உள்ளன . கொழுப்பைத் தடுப்பது பொதுவாக ர்த்தத்தில் உள்ள கேடு தரும் எல்டிஎல் கொழுப்பு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது . இதனை தடுக்க பிசிஎஸ்கே 9 எனும் மருந்தை பயன்படுத்தலாம் . இந்த மருந்து கல்லீரலில் உள்ள புரதத்தை முடக்கி எல்டிஎல் கொழுப்பை குறைக்கும் பணியைச் செய்கிறது . அழற்சி இதயத்திலுள்ள ஆர்டரியில் ஏற்படும் அழற்சி , மாரடைப்பை தூண்டுகிறது என்பதை கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்ற ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்துள்ளனர் . கனாகிநுமாப் எனும் மருந்தை ஆய்வாளர்கள் சோதித்தனர் . 2017 இல் நடைபெற்ற சோதனையில் மாரடைப்பை இந்த மருந்து 24 சதவீதம் குறைப்பது தெரிய வந்துள்ளது தொற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துகிற , விலையுயர்ந்த மருந்து என்பதால் இதனை பொதுபயன்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை . மாரடைப்பு பற்றிய ஆராய்ச்சிக்கான வாசலை இந்த மருந்து பற்றிய சோதனை திறந்து வைத்துள்ளத...

மரபணுக்கள் ஏற்படுத்தும் பரம்பரை நோய்களை உணவு, உடற்பயிற்சி மூலம் தடுக்கலாம்!

படம்
                மரபணுவை வெ்ல்ல முடியுமா ? ஒருவரால் அவரது குடும்பம் காரணமாக ஏற்படும் நோய்களிலிருந்து தப்பிக்க முடியாது . ஆனால் அதற்கேற்ப உணவுப்பழக்கம் , உடற்பயிற்சி அமைவது அவசியம் . ஒருவரது குடும்பம் சார்ந்து மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு , புகைப்பிடிப்பது , அதிக கொழுப்பு , உடல் பருமன் , நீரிழிவு நோய் , அதிக ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படலாம் . சிலர் பிறக்கும்போது ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருக்கும் , ரத்த தட்டுகளில் அழற்சி உருவாகியிருக்கும் . இவர்களுக்கு இதயத்தசை சார்ந்த நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது . முறையான உடற்பயிற்சி , உணவுமுறை ஆகியவற்றை ஒருவர் கையாளும்போது மரபணு ரீதியான பிரச்னைகளை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் . பழங்கள் , காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதோடு கொழுப்பு குறைவான உணவுகளையும் பானங்களையும் சாப்பிடலாம் . இதில் உப்பும் , சர்க்கரையும் கவனிக்க வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பு . உடற்பயிற்சி பொதுவாக முக்கியத்துவமானது . இதயத்தை வலுவாக்கும் என்று சொல்லும்படியான பயிற்சிகள் ஏதும் இல்லை . எனவே இதயத்தின் ஆர்டரியி...

உடலை இயக்கும் ஸ்பார்க் பிளக்கைக் கொண்ட இதயத்தின் செயல்பாடு!

படம்
                  உடலே நலமா ? உடலுக்கு சக்தி கிடைக்க உணவு அவசியம் . அதோடு சுவாசிக்க காற்று முக்கியம் . இதெல்லாம் இருந்தாலும் கூட உடலெங்கும் உறுப்புகள் செயல்பட ரத்தம் உடலெங்கு் செல்வதற்கு சர்குலேட்டர் அமைப்பு உதவுகிறது . இப்படி செல்லும் ரத்தத்தில் ஆக்சிஜன் , மினரல்கள் உள்ளன . இந்த ரத்தம் தலை முதல் கால் வரை ஓடிக்கொண்டே இருக்கிறது . இதில் தடுமாற்றம் ஏற்பட்டால் உடனே பாதிப்பு ஏற்படும் . உடலின் நரம்புகள் , ஆர்டெரி , காபிலரிஸ் என அனைத்து இடங்களிலும் ரத்தம் பயணிக்கும் தொலைவு தோராயமாக பத்தாயிரம் கி . மீ . என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர் . இதய வல்லுநர்கள் பர்ஃபியூஸ் என்ற சொல்லை அதிகம் பயன்படுத்த விரும்புவார்கள் . இதுதான் சர்குலேட்டர் அமைப்பைக் குறிக்கிறது . இதில்தான் ரத்தம் அனைத்து உறுப்புகளுக்கும் சென்று வருகிறது . இதன்மூலம்தான் சத்துகள் உறுப்புகளுக்கு சென்றுசேர்வதோடு , உடலுக்கு தேவையான ஹார்மோன்கள் சரியாக சுரப்பதையும் உறுதி செய்கிறது . செல்களுக்கு ஆபத்து ஏற்படுத்து்ம் கழிவுப் பொருட்களை அகற்றுவதோடு , கார்பன் டை ஆக்சைடையும் உடலிலி...

கலாசார அழுத்தங்கள் தூக்கத்தை பலி கேட்கிறதா?

படம்
              கலாசார அழுத்தங்கள் தூக்கத்தை பலி கேட்கிறதா ? சரியான நேரத்தில் படுத்து சரியான நேரத்தில் எழவேண்டியது ஆரோக்கியத்திற்கு முக்கியம் . ஆனால் இன்று நகரவாசிகள் நள்ளிரவில் படுத்து காலையில் 9.30 க்கு ஆபீஸ் செல்லவேண்டிய அவசரத்திற்கு வேகமாக எழுந்து வருகின்றனர் . இது அவர்களின் உடலிலுள்ள உயிரியல் கடிகாரத்தை பாதிக்கிறது . உயிரியல் கடிகாரம் என்பது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குமுறைபடுத்துகிறது . இதுவே பகலா , இரவா எந்த நேரத்தில் உறங்குகிறோம் என்பதை கவனிக்கிறது . ஆனால் இந்த கடிகாரம் நாம் தூங்கவேண்டிய நேரத்திற்கு அலாரமடித்து நம்மை உஷார் செய்யாது . ஆனால் எழவேண்டிய நேரத்தை இதுவே தீர்மானிக்கிறது . இதுபற்றி சயின்ஸ் அட்வான்ஸ் இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது . அதில் ஒருவ்ர் தூங்கச்செல்வது அவரின் கலாசார அழுத்தம் சார்ந்தது . ஆனால் எழுவதை உயிரியல் கடிகாரம் தீர்மானிக்கிறது என்றார் ஒலிவியா வாட்ச் . இவர் , மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தூக்கம் பற்றிய ஆய்வை செய்து வரும் பட்டதாரி மாணவி . . இந்த ஆய்வில் நூறு நாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரம் பங்கேற்பாள...

பகைவனுக்கும் அருளும் இதயநோய் மருத்துவனின் ரத்தசரித்திரம்! - டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் - இறுதிப்பகுதி

படம்
        பகைவனுக்கும் அருளும் நெஞ்சமுடைய மருத்துவனின் ரத்தசரித்திரம் ! டாக்டர் ஸ்ட்ரேஞ்சர் இறுதிப்பகுதி கொரிய தொடர் எம்எக்ஸ் பிளேயர் முன்னமே கூறியது போல வெறும் காதல் கதை என்பதாக எடுக்காமல் , வடகொரியா , தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான வெறுப்பு , அரசியல் சதிகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கொரிய தொடர் . துருக்கி தொடர்கள் போல வளவளவென நீளாமல் இருபது எபிசோடுகளில் கதையை நிறைவு செய்திருப்பதற்கு தொடரின் இயக்குநருக்கு நன்றி சொல்லவேண்டும் . பார்க் குவான் இதயநோய் மருத்துவர் . அவரின் அப்பா புகழ்பெற்ற இதயநோய் மருத்துவர் . அவரின் நண்பர் சோய் செய்த அறுவை சிகிச்சை தோற்றுப்போக , மனசாட்சிப்படி அது மருத்துவமனையின் , மருத்துவரின் தவறு என்று சாட்சி சொல்ல தயாராகிறார் . ஆனால் மருத்துவமனை சேர்மன் மருத்துவமனையைக் காப்பாற்ற , ஊழல் பிரதமரின் செல்வாக்கைப் பெற்று பார்க் குவானின் அப்பாவை வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கிறார் . உதவி என்று அனுப்பி வைக்கப்பட்டாலும் அவர் திரும்பி வரக்கூடாது என்பதுதான் தென்கொரியா , வடகொரியா அரச...