இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மலமிளக்கியால் தோல்நோய் தீராது!

படம்
   மருந்து = நஞ்சு ஓமியோபதி ஒவ்வாமைக்கான மருந்துகளாக தாய் திராவகம்(பத்து சொட்டுகள்), சிறிய இனிப்பு உருண்டைகள்(சாப்பிடும் முன்/பத்து உருண்டைகள்), சப்பி சாப்பிடும் மாத்திரைகள் ஆறு(மூன்று வேளைக்கு)சாப்பிட மருத்துவர் அறிவுறுத்தினார். இதில், சித்த மருத்துவம் போல பத்தியமும் உண்டு. சித்த மருத்துவத்தில் ஒவ்வாமை பிரச்னைக்கு இடையறாது மலமிளக்கி மருந்துகளை கொடுத்தனர். அடிப்படையில் தோல் நோய்களுக்கு மூல காரணம், மலம் குடலில் இருந்து வேகமாக வெளியேறாத காரணத்தால், அதிலுள்ள கிருமிகள் உடலில் புகுந்து நோய்களை உருவாக்குகின்றன. எனவே, மலமிளக்கி மருந்துகளை இரவில் உணவுக்குப் பிறகு சாப்பிட்டுவிட்டு படுத்தால், காலையில் எழுந்தவுடன் கழிவறைக்கு ஓடவேண்டியிருந்தது. அப்படி ஓடாவிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும்போது எப்படி ஒருவித உணர்வு தோன்றுகிறது. அதேவித கழிந்துவிடும் உணர்வு மருந்தால் உருவாக்கப்பட்டது. இதேபோல ஓமியோபதியிலும் வெளிக்குப்போக மருந்துகள் உண்டு. ஆனால், அவை திருகலானவை. அவற்றைத் தின்றால் எதற்கு அதை தின்றோம் என யோசிக்கவைப்பவை. ஓமியோபதியில், மலமிளக்கி மருந்துகளை கொடுப்பதை சாமுவேல் எதிர்க்கிறார். நோயை என்...

ஓமியோபதி நோயைத் தீர்க்கும் முறையை நோயாளி அறிந்துகொள்வது அவசியம்!

படம்
  மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை ஓமியோபதி ஒருவரின் நோயை தீர்ப்பது தீர்க்கவில்லை என்பது வேறுவகையான விவாதமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், நோயை தீர்க்க செய்யும் செயல்முறை, நோயை விட கடினமான இயல்புடையது. ஒருவருக்கு வலிப்பு இருக்கிறது என்றால் ஓமியோபதியில் கொடுக்கும் மருந்து, வலிப்பை பல மடங்காக உருவாக்கி பிறகே குறைக்கும். அதுவரை நோயாளி வலியை தாங்கிக்கொண்டிருந்தால் அவருக்கு நோய் குணமாகலாம். மாரடைப்பு, தலைசுற்றல், உடல் எடை குறைப்பு என பல நோய்களும் இதே திசையில் இதே வழிமுறையில் குணமாக்கப்படுகிறது. உடலில் இயற்கையாக உருவாகியுள்ள நோயைத் தீர்க்க அதேபோன்ற ஆனால் சற்று வீரியமான நோயை செயற்கையாக உருவாக்குவதே ஓமியோபதி தத்துவம். ஒருவரின் நோய் அறிகுறிகளைப் பார்த்து அதற்கேற்ப, வீரியமான மருந்துகளைக் கொடுத்து நோயை உருவாக்குகிறார்கள். நோயை உருவாக்கினாலும் உடலில் வேறு ஏதாவது இடர்ப்பான அறிகுறிகள் தோன்றினால் அதை கவனித்து மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும். உண்மையில் அக்கறையான நேர்மையான ஓமியோபதி மருத்துவர் உங்களுக்கு கிடைத்தால், விபரீதமாக ஏற்பட்ட அறிகுறிகளைப் பற்றி கூறி, அதை தீர்க்க உதவிசெய்வார். தனியாக மருத்த...

முற்பிறப்பில் சகோதரனால் படுகொலையான தம்பி, தற்காப்புக்கலையால் வலிமை பெற்று வந்து பழிவாங்கும் கதை!

படம்
     ரெக்கார்ட்ஸ் ஆஃப் டீமன் பாத் ரிடர்ன் குன்மாங்கா.காம் 57 அத்தியாயங்கள் ---- இந்த மாங்கா காமிக்ஸ் கதையில், முழுக்க தீயசக்தி இனக்குழுவில் நடைபெறும் அதிகாரப்போட்டி, வாரிசு அரசியல், வஞ்சனை, துரோகம் ஆகியவற்றைப் பற்றி பேசுகிறார்கள். கதையின் தொடக்கத்தில் நூல்களை வாசித்துக்கொண்டிருக்கும் தீயசக்தி இனக்குழுவின் ஏழாவது இளவரசனுக்கு ஒருவர் விஷத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறார். அவர் அதைக் குடித்து தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற வற்புறுத்துகிறார் ஒரு படையணித் தலைவர். இளவரசன் தன்னை வற்புறுத்துபவனைக் கொன்றுவிட்டு, அவனது படையணிகளை வெறியோடு கொல்கிறார். திடீரென பின்புறமிருந்து ஒருவன் அவனைத் தாக்கிக் கொல்கிறான். கொல்பவன்தான், தீயசக்தி இனக்குழுவின் தலைவன். நாயகனின் ஆறாவது சகோதரன், மியோன் காக். நாயகன் இறக்கு்ம்போது, அதிகாரம் இல்லாமல் இருப்பதால்தான் இப்படி அநீதியாக நாம் கொல்லப்பட்டோம் என நினைத்துக்கொண்டே சாகிறான். அவன் உயிர்மெல்ல பத்தாண்டுகளுக்கு முன்னர் செல்கிறது. ஆம் மற்றொரு மறுபிறப்பு பழிவாங்கல் கதைதான். அரசகுலத்தில் வாரிசு அரசியல் போட்டிதான் கதை. இக்கதையில் நாயகன் இருப்பதிலேயே பலவீனமானவ...

எளிய குடும்பத்தில் பிறந்து நாடுகளுக்கு இடையிலான போரில் கடவுள் தேசத்தால் பயிற்றுவிக்கப்படும் வீரனின் கதை!

படம்
    பிகினிங் ஆப்டர் தி எண்ட் மாங்கா காமிக்ஸ் 200 அத்தியாயங்கள். குன்மாங்கா.காம் இந்த காமிக்ஸில் இரண்டு கதைகள் உள்ளன. ஒன்று கிங் கிரேவின் கதை. அடுத்து அவரின் மறுபிறப்பு கதை. தொடக்கத்தில் நாம் வாசிப்பது கிங் கிரேவின் மறுபிறப்பு கதை. கிங் கிரே எப்படியோ திடீரென இறந்துபோகிறார். அவரது வாழ்க்கை பற்றிய விஷயங்கள் கூறப்படுவதில்லை. ஆனால், பதிலாக அவர் குழந்தையாக கூலிவேலைகளை செய்யும் ஒரு தம்பதிக்கு மகனாக பிறக்கிறார். அவன் இவன் என்று கூறிக்கொள்வோம். ஆர்தர் லெய்வென்னின் கதை இது. அக்கதையின் போக்கினூடே திடீரென கிங் கிரேவின் முன்கதையும் கூறப்படுகிறது. இடையில் ஜாஸ்மின் பிளேம்ஸ்வொர்த்தின் கதையும் கூட. எனவே, இருநூறாவது அத்தியாயத்தை தொடும்போது எதற்கு இத்தனை பாத்திரங்களின் முன்கதை கூறவேண்டும் என்று கூட தோன்றுகிறது. இந்த இடத்தில் கதாசிரியர் சற்று குழம்பிவிட்டாரோ என்று தோன்றுகிறது. ஆர்தர் லெய்வென் பிறப்பால் தாழ்த்தப்பட்டவன். அவன் தன்னுடைய உழைப்பால் மெல்ல முன்னேறி வளர்கிறான். ஒருகட்டத்தில் எல்ப் இளவரசியைக் காப்பாற்றி அவர்களுடை அரசரின் அன்பையும் ஆதரவையும் பெறுகிறான். அவர்களின் மருமகன் ஆகும் நிலை. அவனை ஏ...

ஓமியோபதி மருந்துகளால் உருவாக்கப்படும் செயற்கையான வியாதி!

      மருந்து = நஞ்சு ஓமியோபதி ஓமியோபதி மருந்துகளை தோல் நோய்க்கு சாப்பிடும்போது, வெளியில் தடவுவதற்கு கொடுக்கும் மருந்து பொதுவாக சூழல்களால் ஏற்படும் எரிச்சலை, அரிப்பை தடுக்க மட்டுமே. மற்றபடி உள்ளுக்குள் கொடுக்கும் தாய் திராவகம், இனிப்பு உருண்டை மருந்துகள், சப்பி சாப்பிடும் இனிப்பு மாத்திரைகள் மட்டுமே நோயைத் தீர்க்கும். தொடக்கத்தில் ஓமியோபதிக்கு கொடுத்த மருந்துகள், இருக்கும் நோயை அதிகப்படுத்தின. காளான்படை என வைத்துக்கொள்வோம். இந்த ஒவ்வாமை நோய்க்கான உணவு பிரச்னையை நான் முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன். சித்த மருந்துகளை சாப்பிட்டபோது, உள்ளுக்கும் மருந்துகளை சாப்பிடவேண்டும். வெளியிலும் நெய் மருந்துகளை பூசவேண்டும். பூசி வைத்து ஒரு மணிநேரம் அல்லது அரைமணிநேரம் வைத்து கழுவ வேண்டும். தலைமுதல் பாதம் வரை எனக்கு கொப்புளங்கள் வெடித்து அதில் சீழும் ரத்தமும் வந்தது. மருந்துகள் விலை அதிகம், தங்கியிருந்த வீட்டில் குளிக்க, குடிக்க நீர் பிரச்னை என்றாலும் கூட வேறுவழியில்லை என்பதால், சித்த மருத்துவத்தை கடைபிடிக்க நேரிட்டது. சென்னையில், வழக்குரைஞர் தொடங்கிய ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனைய...

வைரத்திற்கு அடுத்தபடியாக உள்ள கடினமான பொருள்!

  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி மோகா அளவுகோல் எதற்கு பயன்படுகிறது? கனிமங்களை அவற்றின் கடினத்தன்மை அடிப்படையில் வகைப்படுத்த மோகா அளவுகோல் உதவுகிறது. 1812ஆம் ஆண்டு, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கனிமவியலாளர் பிரடரிச் மோஹ்ஸ் மோகா அளவுகோலை கண்டுபிடித்தார். மென்மையான கனிமங்கள் தொடங்கி கடினமானவை வரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கனிமங்களை நிறங்கள் அடிப்படையில்  தரவரிசைப்படுத்தியது யார்? இதைச்செய்ததும் கூட ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்தான். ஆபிரகாம் காட்லோப் வெர்னர் என்பவர், நிறங்கள் அடிப்படையில் கனிமங்களை தரம் பிரித்து அவற்றை படங்களாக வரைந்து விளக்கியவர் இவரே. வைரத்திற்கு அடுத்து கடினமான பொருள் என எதைக் கூறலாம்? போரோன் நைட்ரைட் என்ற பொருளைக் கூறலாம். இது கடினமான செராமிக். வைரத்திற்கு அடுத்த நிலையில் இப்பொருள் இடம்பிடிக்கிறது. ஸ்ட்ராடெஜிக் மினரல்ஸ் என்றால் என்ன? ஒரு நாட்டின் பாதுகாப்பு தொழில்துறைக்கு அவசியம் தேவைப்படும் கனிமங்களை ஸ்ட்ராடெஜிக் மினரல்ஸ் என்று குறிப்பிடுவார்கள். தோராயமாக எண்பது கனிமங்களை ஒரு நாடு எப்போதுமே குறைவற வாங்கி சேமித்து வைத்திருக்கும். உதாரணமாக குரோமியம், பல்லாடிய...

பிரிவாற்றாமை பாடல்களில் பெருகி ஓடும் இயற்கை அழகு- அகநானூறு- நித்திலக்கோவை - நூறு பாடல்கள்

      அகநானூறு - நித்திலக்கோவை நூறு பாடல்கள் ந.மு.வேங்கடசாமி நாட்டார் மதுரை இலக்கியத் திட்டம் அகநானூறு பாடல்களில் மூன்று பகுதிகள் உள்ளன. அதில், நித்திலக்கோவை என்பது இறுதிப்பகுதி. இதில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இப்பாடல்கள் அனைத்துமே தலைவன் பிரிவைப் பற்றி தலைவி பிரிவாற்றாமையோடு பேசுவதை அடிப்படையாக கொண்டுள்ளது. தலைவி பாடலைப் பாடுகிறாள். அல்லது தோழி தலைவனால் தலைவி நோயுற்று வாடுவதைக் குறிப்பிடுகிறாள். தொன்மையான அழகிய தமிழ் சொற்களை வாசிக்கவேண்டுமெனில் அகநானூறு நமக்கு உறுதியாக உதவும். ஏராளமான அழகிய தமிழ்சொற்களை புலவர்கள் பயன்படுத்தியுள்ளனர். நக்கீரர், பரணர், இளவெயினியார், கபிலர் என பல்வேறு புலவர்கள் பாடல்களை இயற்றியுள்ளனர். இவர்கள், சேரன், சோழன், பாண்டியன் என மூவேந்தர்களையும் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். இதிலுள்ள பாடல்கள் அனைத்தும் பிரிவாற்றாமை பாடல்கள்தான். அத்தனையிலும் இயற்கை அழகு, வாழுமிடங்களின் செழுமை ஆகியவற்றைப் பாடிய பிறகு காதலை உரைக்கிறார்கள். பாடல்களில் காடுகளில் வாழும் பல்வேறு விலங்குகள் உருவகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இயற்கையில் எப்படி அனைத்து உயிரினங்களுக்கும் இ...

சக நண்பர்களைக் கொன்று துரோகம் செய்த முரிம் கூட்டணி அமைப்பின் தலைவரை பழிவாங்க துடிக்கும் இளம்பெண்!

பிளாக் சர்பென்ட் வெப்டூன்.காம் காமிக்ஸ் முரிம் கூட்டணி, பிளாக் சர்பென்ட் என்ற வலிமையான படையை பயிற்சி கொடுத்து உருவாக்குகிறது. தீயசக்தி இனக்குழுவை அழிக்க பயன்படுத்துகிறது. ஆனால், இறுதியில முரிம் கூட்டணி தலைவர், பிளாக் சர்பென்ட்படையை துரோகம் செய்து அவர்களை முற்றாக அழிக்கிறார். ஏனெனில் அப்படையினர், ஆதரவற்றவர்கள், பிச்சைக்காரர்கள். பெற்றோர் இல்லாதவர்கள். குழுவின் தலைவி, ஜியோன்மா, படுகாயமுற்றாலும் உயிர் பிழைத்து முரிமை பழிவாங்க முற்படுவதுதான் கதை. ஆதரவற்ற வலிமையான தற்காப்புக்கலை கொண்ட இளம்பெண்ணின் கதை. ஈட்டிதான் அவளின் ஆயுதம். தன்னையொத்த வீரர்களை துரோகம் செய்து முரிம் கூட்டணி ஏமாற்றியதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே, படுகாயமுற்ற நிலையில் கூட தன்னை பிழைக்க வைத்துக்கொண்டு எதிரிகளை கொல்ல நினைக்கிறாள். அப்படி வரும் வழியில் ஒயிட் பந்தனா என்ற கொள்ளைக்கூட்டத்தினரை சந்திக்கிறாள்.அவர்கள்,அவளை வல்லுறவு செய்து அனுபவிக்க நினைக்கிறார்கள். நாயகி ஈட்டியைச் சுழற்ற தலை காற்றில் பறக்கிறது. மெல்ல கொள்ளைக்காரர்களின் தலைமையிடத்திற்கு வந்து அத்தனை பேரையும் ஒரு விஷயம்தான் கேட்கிறாள். சாப்பிட சோறு இருக்கி...

வெப்டூனிலுள்ள இரண்டு சுவாரசியமான காமிக்ஸ் கதைகள்.....

படம்
     அப்சொல்யூட் ரெய்ன் வெப்டூன்.காம் காமிக்ஸ் பழங்களை விற்கும் வணிகரின் மகன்தான் நாயகன். இஞ்சியோன் ஜியோக். தொடக்க காட்சியிலேயே பரபரப்பை பற்ற வைக்கிறார்கள். ஒரு வணிகரின் கைகளை வெட்டிவிட்டு, அவரின் சொத்துக்களை கொள்ளையிட்டு போனவனை, ஒழித்துக்கட்ட சில ஆட்களை அனுப்புகிறார்கள். நாயகனை கொல்ல கூலிக்கொலைகாரன் வருகிறான். அவன் பல்வேறு இடங்களில் விசாரிக்க, அதன் வழியாக கதை நகர்கிறது. அவன் பெண்களை விரும்பும் லோபி, எளியோருக்கு இரங்குபவன், சூதாடி, குடிகாரன் என நிறைய விஷயங்கள் சொல்லப்ப்படுகிறது. இறுதியாக நாயகன் தங்கியுள்ள இடத்திற்கு கூலி கொலைகாரன் செல்லும்போது, அவனை மூன்று வீரர்கள் தாக்கி கொல்கிறார்கள். அவர்கள் மூவருமே மாபெரும் வீரர்கள். அவர் எதற்கு நாயகனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டே கூலி கொலைகாரன் செத்துப்போகிறான். அடுத்து நாயகிக்கான அறிமுகம். வாள் இனக்குழுவின் தலைவராக இருப்பவரின் மகள், வாள் பயி்ற்சி செய்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் முன்னேற முடியவில்லை. அவர்களது இனக்குழுவை விட வலிமையாக உள்ள இன்னொரு இனக்குழுவைச் சேர்ந்தவன். நாயகியை மணம் செய்துகொள்ள முயற்சிக்கிறான்...

சாமுவேல் ஹானிமன் எழுதிய ஆர்கனான் ஆஃப் மெடிசின் தமிழில்... நூல் விமர்சனம்

படம்
    ஆர்கனான் சாமுவேல் ஹானிமன் தமிழில் வி ஆர் மூர்த்தி, எஸ்என்கே மூர்த்தி கும்பகோணம் ஓமியோபதி இன்ஸ்டிடியூட் விலை ரூ.3 தமிழ்நாடு அரசின் மின்னூலகத்தில் கிடைத்த ஓமியோபதி நூல். நூலை தரவிறக்குவதில் பிரச்னை இல்லை. ஆனால், கோப்பின் அளவுதான் அதிகமாக உள்ளது. அதை நிர்வாகம் சற்று குறைத்தால், அல்லது வேறு கோப்பு வடிவில் நூல்களை வழங்கினால் நன்றாக இருக்கும். டேட்டா செலவு சற்று குறையும். நூலைப் பார்ப்போம். இந்த நூல், ஜெர்மனியைச்சேர்ந்த ஓமியோபதியின் தந்தையாகிய சாமுவேல் ஹானிமன் எழுதியது. அவர் ஜெர்மன் மொழியில் எழுதியதற்கு ஆறு திருத்தப்பட்ட பதிப்புகள் வந்துவிட்டன. அதாவது, அவரது ஆயுள்காலத்திலேயே.. அந்த நூலை ஆங்கிலத்தில் எழுதி, அதை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். நூலின் மொழி, எழுதப்பட்ட காலத்தில் உள்ள வடமொழி, தமிழ் சங்கமமாக உள்ளது சிலசமயங்களில் உறுத்தலாக உள்ளது. மறுக்க முடியாது. ஆனால், நூலின் அடிப்படை விஷயத்தை மருத்துவர் ஹானிமன் கூற விரும்பியதை அறிந்துகொள்வது அந்தளவு கடினமாக இல்லை. நூலில், ஓமியோபதி மருத்துவத்தின் அடிப்படை என்ன, அது எப்படி செயல்படுகிறது., நோயைத் தீர்க்கிறது, அதற்கான மருந்துகளை எப்...

கோபோ, ஸ்மாஷ்வேர்ட் வலைத்தளங்களில் வெளியாகியுள்ள மின்னூல்கள்!

          தூக்குமேடையில் சுருக்குக் கயிறு (Thookumedaiyil surukku kayiru) anbarasu shanmugam and அருளையா தீசன் https://books2read.com/u/bzxgQE ஹரி ஓம் தத் சத் (Hari om dat sat) anbarasu shanmugam and தாய் கண்ணன் https://books2read.com/u/bzxeDj விழித்தெழும் தேசம் (Vizhithelum Desam) anbarasu shanmugam and தென்னன் https://books2read.com/u/m2DoRr

வங்கதேச தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தப் போராடும் ஊழல் கறைபடிந்த போலீஸ் அதிகாரி

படம்
      டெரர் ஶ்ரீகாந்த்மேகா, நிகிதா, நாசர், பிருதிவிராஜ், கோட்டாசீனிவாசராவ் தெலுங்கு மற்றுமொரு தேசபக்தி படம். இதில் தீவிரவாதிகள் பாக்கிலிருந்து வரவில்லை வங்க தேசத்திலிருந்து வருகிறார்கள். இந்தப்படத்தை இப்போது வெளியிட்டால், வலதுசாரி மதவாத கட்சி ஆளும் ஆந்திரத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் கலவரம் செய்து களிக்கலாம். அந்தளவு வெறுப்பு விஷத்தை மதம் வழியாக கக்கியுள்ள படம். எல்லாமே முஸ்லீம் தீவிரவாதம் என்ற கிளிஷேதான். ஒரே டெம்பிளேட். ஒரே நடைமுறை. பதினைந்து நாட்களில் ஆந்திரத்தின் ஹைடெக் சிட்டியில் மாநில முதல்வர் கலந்துகொள்ளும் விழாவில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது. அதை உள்துறை அமைச்சர் ஏற்பாடு செய்கிறார். இதை நாயகன் விஜய் அறிந்துகொள்கிறான். அவனால் முதல்வர், விழாவிற்கு வரும் மக்கள் உயிரைக் காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பதே கதை. நாயகன் விஜய், தீவிரவாத தாக்குதல்களை கண்காணிக்கும் பிரிவில் மாற்றப்பட்டு வேலை செய்கிறான். இதற்கு முன்னர் நன்றாக வேலை செய்தவன். இடையில் அவனது மேலதிகாரி, சில அரசியல் தலைவர்கள் செய்த சூழ்ச்சி, சதியால் ஊழல் குற்றச்சாட்டில் மாட்டிக்கொள்கிறான். பணியில் சற்று தாழ்ந்த நிலை...

முடியை சீவும்போது ஏற்படும் வலி, சோப்பு போட்டு கைகழுவினால் கூட நீங்காத பாக்டீரியா

படம்
        அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பள்ளிகளில் இடைவேளை விடுவது ஆக்கப்பூர்வமான விளைவை தருகிறதா? ஆங்கிலத்தில் ரீசஸ் என இதைக் குறிப்பிடுகிறார்கள். இந்த இடைவேளை என்பது உடற்பயிற்சிக்கானது அல்ல. இந்த நேரத்தில் மாணவர்கள் தங்களுக்கு பிடித்து ஊக்கமூட்டும் எதையேனும் செய்யலாம். உடலும் மனமும் ஒத்திசைவாக இருக்க ஓட்டம் கூட உதவக்கூடியதுதான். மனம் அமைதியாக இருக்கும்போதுதான் நிறைய விஷயங்களைக் கற்க முடியும். ஆபத்து நெருக்கடியை உணரும்போது மூளை சிறப்பாக செயல்படுகிறது. அதேசமயம், எதிர்பார்ப்புகள் உள்ளபோது வரும் ஏமாற்றம் கடுமையாக மனதைப் பாதிக்கிறது. இதை பின்னடைவு தோல்வி என்று கூட வைத்துக்கொள்ளலாம். பொதுவாக குழந்தைகள் கிடைக்கும் இடைவேளையில் அனைவருடனும் பேசி விளையாட்டில் ஈடுபட்டாலே அவர்களது மனம், உடல் என இரண்டுமே வளம்பெறும். ஆகவே, குழந்தைகள் மூச்சுவிட சற்று இடைவேளை விடலாம் கல்வியாளர்களே! சோப்பு போட்டு கைகழுவினால் கூட பாக்டீரியா கைகளில் இருக்குமா? ஆன்டி செப்டிக் சோப்பு விளம்பரங்களை மறந்துவிடுங்கள். பாக்டீரியாக்கள் எப்போதுமே நம் கைகளில் இருக்கும். அவற்றில் சில மட்டுமே கைகழுவும்போது ந...

செயற்கையாக நோயை உருவாக்கி, இயற்கை நோயை விரட்டலாம்!

படம்
      மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவ முறை வெறுமனே ஹோமியோபதி மருந்துகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன, அதன் மூலம் என்று படித்தால் அதில் எந்த அர்த்தமும் கிடையாது. வலைப்பூவில் ஓமியோபதி பற்றி எழுதப்படுவதற்கு முக்கியக் காரணம், அம்முறை வட இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் பரவலாகி வருகிறது. மருத்துவர்கள் எளிதாக கிடைப்பது, மருந்துகள் விலை குறைவு என அரசு தரப்பில் நிறைய காரணங்கள் இருக்கலாம். அடிப்படையில் அரசு ஆங்கில மருத்துவமுறைக்கு மாற்றாக சித்தா, ஓமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் ஆகிய மருத்துவமுறைகளை பின்பற்றுவது நல்லது. இன்று மக்களுக்கு வரும் நோய்கள் அந்தளவு தீவிரமாக மாறிவிட்டன. கூட்டு மருத்துவ சிகிச்சையே இனி பயனளிக்க கூடியது. இப்போதைக்கு ஓமியோபதி பற்றிய தெளிவை பெறுவோம். ஓமியோபதி பற்றிய தகவல்களை ஆங்கிலம், தமிழ் நூல்களிலிருந்தும், என்னுடைய சொந்த அனுபவங்களிலிருந்தும் கூறுகிறேனே ஒழிய, நான் பட்டம் பெற்ற மருத்துவன் அல்ல. மருத்துவர்களுக்கு உதவியாளனும் அல்ல. உங்களுக்கு ஓமியோபதியில் சந்தேகம் வந்தால், மருத்துவரை அணுகலாம். நூல்கள் தேவை என்றால் தமிழக அரசின் மின்னூலகத்தை அணுகலாம். நூலகத்தில...

மறுவாழ்வுக்கு முயலும் ரௌடியை தடுக்கும் அதிகார சக்திகள்!

படம்
        நகரம் ஶ்ரீகாந்த், ஜெகதிபாபு, காவேரி ஜா இயக்கம் சிசி சீனிவாஸ் இசை சக்ரி தமிழில் தெலுங்குப்பட மோகம் கொண்ட சுராஜ் இயக்கிய தலைநகரம் படத்தின் ரீமேக். ரைட் என்ற முன்னாள் ரௌடி தனது நண்பன் இறந்தபிறகு திருந்தி வாழ நினைக்கிறார். ஆனால், அதை தடுக்க காசிம்பாய், இன்ஸ்பெக்டர், அரசியல் தலைவர் ஆகியோர் முனைகிறார்கள். இறுதியில் என்னவானது என்பதே கதை. முஸ்லீம் என்பவர் மாஃபியா தலைவராக, கொலை, கொள்ளை, கடத்தலை செய்பவராக இருக்கிறார். இதெல்லாம் எண்பதுகளில் வந்த படத்தின் அடையாளம். அதேதான். பெரிய மாறுபாடு இல்லை. ஒருவரிடம் வேலை செய்பவன், சுயமாக யோசித்து தன் இஷ்டப்படி இருப்பதாக கூறுவது சற்று வினோதமாக உள்ளது. நாயகனுக்கு, காசிம் பாயின் மகனுடன் விரோதம் உருவாகிறது. நாயகன் கொலை செய்யும் உத்தி, திறமை காசிம் பாயின் மகனுக்கு வருவதில்லை. அவனது திறமை சூழ்ச்சி, சதி. அதை நம்புகிறான். நாயகனைப் பொறுத்தவரை தனது குழுவினர் அனைவரையுமே திட்டத்தில் ஈடுபடுத்தி கொலையை கூட்டுத்திட்டமாக மாற்றுகிறான். அனைவருக்கும் கொலையில் முறையான பங்களிப்பு இருக்கிறது. படத்தில் வரும் தொடக்க காட்சி கொலை, உத்வேகம் தரக்கூடியது. ஆனால...

அரசியல் அழுக்குகளை அகற்ற தனிமனிதனாக நாயகன் செய்யும் கோணங்கித்தனமான வீரசாகசங்கள்!

படம்
      துச்சாசனா ஶ்ரீகாந்த், சஞ்சனா கல்ராணி இயக்கம் பொசனி கிருஷ்ண முரளி பொதுஜனம் என டைம்ஸ் ஆப் இந்தியாவில் வயசான மீசை வைத்த கோட்டு போட்ட உயர் நடுத்தரவர்க்க மனிதரை லக்‌ஷ்மண் வரைந்திருப்பார் அல்லவா? அதேபோல ஒரு பாத்திரம் உருவாகி வந்து, அரசியலை சீர்படுத்த த த்துபித்து கருத்துகளை கூறுவதுதான் படம். தலையில் தொப்பி, கருப்பு கோட், கருப்பு பேன்ட். இதுதான் நாயகனுடைய ஒரே உடை. நாயகன் பெயர் மகேஷ். இந்தப் பெயர் கூட படத்தில் இரண்டாவது மணிநேரத்தில் பார்வையாளர்களுக்கு தெரிய வருகிறது. முதல் காட்சியைப் பார்ப்போம். காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டரிடம் பேசுகிறார். அடுத்து, மருத்துவமனை சென்று கர்ப்பிணிகளை குழந்தைகளை கருக்கலைப்பு செய்யக்கூறுகிறார். அடுத்து அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று இறந்துபோன அரசியல் தலைவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்ப சொல்கிறார். இதனால் காவல்துறை அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. மனநல பிரச்னை என தீர்மானித்து நாயகனை மனநல மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள். அங்கு நாயகன், மருத்துவர், செவிலியர்களை அடித்துப்போட்டுவிட்டு தப்பிக்கிறார். முதல்வரின் மகளைக் கடத்துகிறார். ...

பழங்குடி மாணவன், தன் இன முன்னேற்றத்திற்காக படிக்க வந்து காதலில் வீழ்ந்து பின் வெல்லும் கதை!

     விஜயம் ராஜா, கஜாலா சிங்கீதம் சீனிவாச ராவ் இசை ஶ்ரீலேகா பழங்குடி மாணவன் கல்லூரி தேர்வில் தங்கப்பதக்கம் வாங்க நினைத்து படித்து, பிறகு காதலில் விழுந்து அதில் இருந்து மீண்டெழுவதே கதை. சுரேஷ் பாபு தயாரித்துள்ள படம். ஆனால், மிகவும் வணிகமாக இருக்கிறது. படத்தில் ஒரே ஆறுதல், பழங்குடிகளின் உரிமைக்காக போராடுபவராக வரும் பாத்திரம் மட்டுமே. அப்பாத்திரம் மட்டுமே, மூடநம்பிக்கையை ஒழித்து பழங்குடி இனத்தை முன்னேற்ற வேண்டும் என நம்பிக்கையை இறுதிவரை உறுதியாக பிடித்து நிற்கிறது. நாயகன் ராஜூ, நாயகி, நாயகனின் நண்பர்கள் பாத்திரம் என அனைத்துமே ஒருகட்டத்தில் நகைச்சுவை, பாடல்கள், சுயநலமான எண்ணம் என மாறிவிடுகின்றன. படத்தில் வரும் கஜாலா பாத்திரம் லூசு நாயகிக்கான அத்தனை அம்சங்களைக் கொண்டது. அதை சற்று மாறுபட்டதாக அமைத்திருந்தால் கூட படம் நன்றாக வந்திருக்கலாம். இயல்பான கதாபாத்திரங்கள் அமையவே கூடாது என இயக்குநர் முடிவெடுத்தபிறகு ஏதும் சரியாக அமையவில்லை. கடைத்தெருவில் தொப்புள் தெரிய நாயகி உடையணிந்துகொண்டு சித்து பாத்திரத்தோடு வருவது, அதேநேரம் தற்செயலாக நாயகன் ராஜூ வந்து நாயகியை குழாய் ஒன்றில் காப்பாற்...

மறுபிறப்பெடுத்து எதிர்தரப்பில் நின்று தனது அண்ணனை பழிவாங்கும் தம்பி!

படம்
    ரெக்கிரஸ்டு ட்யூக் சன் ஏஸ் எ அசாசின் மங்காகோ.காம். நிறைவுறாத கதை மங்கா காமிக்ஸ் வெர்ட் என்ற குடும்பம் உள்ளது. அரசருக்கு ஆதரவாக எல்லையில் போரிடும் குடும்பம். அதில், மூத்தவன் அசெல், மனச்சிதைவு கொண்ட பொறுக்கி. அவனுக்காக அதே குடும்பதில் உள்ள சியான் என்ற சகோதரன் செய்யும் உதவிகளும், இறுதியாக அவன் அசெல் செய்த துரோகத்தால் வீழ்வதுமே முன்கதை. அதை மாற்றுவதற்கு சியான் மறுபிறப்பில் முயல்கிறான். சியான் ஒரு தீயசக்தியைப் பின்பற்றுபவன். அந்த இனக்குழுவின் வாளை பெறும் முன்னுரிமை பெறுகிறான். பெயர் தீயசக்தி இனக்குழு என்று கூறப்பட்டாலும், அவர்கள் முக்கியப்பணி, சமூகத்தில் தீங்கிழைப்பவர்களை கொன்று களைவதே. ஆனால் ஒளிசக்தி என்ற இனக்குழு உள்ளது. காட் ஆப் லைட் என்று பட்டப்பெயரிட்டு அழைக்கப்படுபவர்கள், பெருமை புகழுக்காக எந்த இழிவையும் செய்ய தயங்காதவர்கள். தங்களுக்கு நல்லபெயர் வர மோசமான செயல்களை இவர்களே செய்து, அதை இவர்களே தடுத்து மக்களிடையே நாயகனாவது. அதன் வழியாக அதிகாரத்தை, செல்வாக்கை, பணத்தை அடைவது லட்சியம். துரோகத்தால் வீழ்த்தப்பட்ட சியான், தனது இறப்பிற்கு பிறகு பத்தாண்டுகள் பின்னோக்கி போகிறான். அதா...