இடுகைகள்

எந்திரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கையால் எழுதுவதற்கும், மூளையின் சிந்தனைத்திறனுக்கும் தொடர்பு உண்டு!

படம்
கையால் எழுதினால் சிந்தனைத்திறன் கூடும்! அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் கோப்புகளில் கையெழுத்திடும் புகைப்படங்களை நாளிதழ்களில், தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். உண்மையில் அமெரிக்க நாட்டினர், அதிபர் கையெழுத்தை பதிவு செய்து வைத்து அதை கோப்புகளில் பயன்படுத்தவென ஆட்டோபென் என்ற கருவியை தொண்ணூறுகளிலேயே உருவாக்கிவிட்டனர். இதைக் கேட்கும்போது, எந்திரம் கையெழுத்திடுவதைப் பற்றிய சந்தேகம் மனதில் தோன்றலாம். ஆட்டோபென் கருவி, இன்றும் பயன்பாட்டில் உள்ளது. கையால் எழுதுவது என்பது ஒருமுறை எழுதியது போல மறுமுறை இருக்காது. எந்திரம் கையெழுத்தை அப்படியே நகல் செய்துவிடும். கோப்புகளில் எழுதுவது, கையெழுத்திடுவது இன்றும் சமூக, அரசியல், பொருளாதார வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கையால் எழுதுவது இளையோரிடம் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. 2012ஆம் ஆண்டு, அமெரிக்க பள்ளி நிர்வாக சங்கம் ஆய்வொன்றைச் செய்தது. அதில், 33 சதவீத அமெரிக்க மாணவர்கள் பெரிய, சிறிய ஆங்கில எழுத்துகளை எழுதுவதில் தடுமாறுவது தெரிய வந்தது. இளையோரும் தாளில் தங்களது கருத்தை நண்பர்களுக்கு எழுதக்கூட திணறினர். தட்டச்சு எந்திரம் தொட...

எந்திரம் போன்ற மனிதர்களை உருவாக்கும் அரசும், மத நிறுவனங்களும்! - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  2 சரியான கல்வி ஜே.கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் உள்ள கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் மனதில் ஏராளமான குறிக்கோள்களைக் கொண்டிருக்கிறார்கள். இப்படி அவர்களின் மனதிலுள்ள முன்மாதிரிகளை  குறிக்கோள்களை மாணவர்களுக்கு வலியுறுத்திக் கூறுவது அவர்களின் எதிர்காலத்திற்கு உதவுமா? நிச்சயமாக இல்லை. இது அவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் செயல்பாடாகும். நீங்கள் நேசிக்கும் குழந்தைகளை அன்பும் அக்கறையும் இல்லாத மனிதர்களிடம் ஒப்படைக்கிறீர்கள். அப்படி குழந்தைகள் ஒப்படைக்கப்படும் இடம்தான், பள்ளி. இதனால் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு மனதில் பயம், பதற்றம், குழப்பம் உண்டாகிறது. அவர்களுக்கு வீட்டிலும், பள்ளியிலும் கூட தேவையான அன்பு கிடைப்பதில்லை. இந்த முறையில்தான் மாணவர்கள் மந்தமாக, உணர்ச்சிகள் இல்லாத வணிகம் செய்பவர்களாக உருவாக்குகிறார்கள். இன்றைய பெற்றோர் லட்சியத்தில் உறுதியாக இருந்து தங்களது தேவைக்கு ஏற்ப குழந்தைகளைப் படிக்க வைத்து பட்டம் பெற வைக்கிறார்கள். குறிக்கோள்கள், முன்மாதிரிகள் என வடிவமைத்துக்கொள்ளாமல் மாணவர்கள் தமது எதிர்காலத்தை திட்டமிடுவது முக்கியம். அப்படி குறிப்பிட்ட முறைகள் நுட்பத்திற்குள் ச...

காணாமல் போகும் அச்சகங்கள்! - திருநெல்வேலி, கோவை, மதுரையில் தள்ளாடும் பழமையான அச்சகங்கள்

படம்
            கணினி வந்தபிறகு டிஜிட்டல்ரீதியான போஸ்டர்கள் , பேனர்கள் என்று தொடங்கி வெற்றிகரமாக நடந்துவருகின்றன . இன்னொருபுறம் இதன் விளைவாக எந்திர அச்சகங்கள் அதிக வாய்புப்புகளின்றி மெல்ல மூடப்படும் நிலையில் உள்ளன . அவற்றில் சில அச்சகங்களைப் பார்ப்போம் . ஶ்ரீ ரத்னம் பிரஸ் , திருநெல்வேலி ஜெயபால் என்பவர் தற்போது இதனை நடத்தி வருகிறார் . இவரது தந்தை ரத்னம் மேலப்பாயத்தில் பிரஸ்ஸில் பணிபுரிந்துவிட்டு தனியாக அச்சகத்தை தொடங்கியுள்ளார் . முதலில் நிறைய ஆட்கள் வேலை செய்து வந்தனர் . தற்போது ஒருவர் மட்டுமே இருக்கிறார் . நகைக்கடைகள் , காபி கடைகளிலிருந்து கிடைக்கும் ஆர்டர்களை செய்து கொடுத்து வருகின்றனர் . பல்லாண்டுகளாக சோறு போட்ட தொழில் என்பதால் , ஜெயபாலுக்கு இதனை விட மனமில்லை . ஆனால் வேலைகளே இல்லாத நிலையில் எத்தனை ஆண்டுகாலம் இப்படியே நடத்த முடியும் என்பதுதான் அவர் முகத்தில் தொக்கி நிற்கும் கேள்வி . நியூ சரவணா புக் பைண்டிங் , கோவை . மேட் இன் இந்தியா பொருட்களை பயன்படுத்துவோம் என பலரும் ஊக்கம் கொண்டிருந்தபோது டவுன் ஹாலில் புகழ்பெற்றிருந்த அச்சகம் நியூ சரவணா...