இடுகைகள்

இரட்டையர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உறக்கத்தில் நடக்கும் நோயால் நேரும் பின்விளைவுகள்! - பிளாக் - ஆதி சாய்குமார், தர்சனா பானிக்

படம்
               பிளாக் ஆதி, தர்சனா பானிக் ஆதியின் அப்பா ரோந்துப் பணியின்போது கார் மோதி இறந்துபோகிறார். அவரது கான்ஸ்டபிள் வேலை கருணை அடிப்படையில் மகனுக்கு அதாவது நாயகனுக்கு வழங்கப்படுகிறது. அந்த வேலையைச் செய்ய அவருக்கு பெரிய இஷ்டமில்லை. ஆனாலும் அப்பாவின் ஆசை என்பதற்காக வேலையில் சேருகிறார். இரண்டாவது நாளே கொள்ளை, அதற்கடுத்த நாளில் கொலை என அவர் ரோந்து செல்லும் பகுதியில் நடக்கிறது. இறந்துபோனவர்கள் குறிப்பிட ரௌடி கேங்கைச் சேர்ந்தவர்கள். அந்த தரப்பும் கொன்றவர் யார் என தேடுகிறார்கள். காவல்துறையும் தேடுகிறது. உண்மையான கொலைகாரன் யார் என்பதே படத்தின் இறுதிக்காட்சி. படத்திற்கு அடுத்த பாகம் எடுக்க கூட இயக்குநர் தயாராக காட்சிகளை எடுத்து வைத்திருக்கிறார். நாயகனுக்கு தன் வேலையில் பெரிய ஆர்வமெல்லாம் இல்லை. ரோந்து செல்லும் பகுதியில் கொள்ளை, கொலை நடந்ததால் அவரது மேலதிகாரி என்ன வேலை பார்க்கிறாய் என திட்டுகிறார். இதனால் சங்கடம் கொள்பவர், கொலையாளியைக் கண்டுபிடிக்க மெனக்கெடுகிறார். இந்த மெனக்கெடல் அடுத்தடுத்த காட்சிகளில் தொடரவில்லை. ஒரு காட்சியில் இப்படி, அடுத்த காட்சிய...

குற்றங்களை அடையாளம் காண்பதில் பயன்படும் பல்வேறு கோட்பாடு முறைகள்

படம்
  குற்றத்தை எப்படி புரிந்துகொள்வது, இதில் பல்வேறு கருத்துகள், கோட்பாடுகள் உள்ளன. உளவியல், சமூகவியல், பொருளாதாரம் ஆகியவையும் இதில் உள்ளடங்கும். அதற்கு ஏற்ப அவரவர் துறை சார்ந்த கருத்துகளைச் சொல்லி குற்றங்களை பிறருக்கு புரிய வைக்கலாம். சமூகவியல் அடிப்படையில் ஒருவரின் சமூகம், அவரின் இனக்குழு, குடும்ப நிலை, வேலை செய்பவரா, வேலை கொடுப்பவரா என்றெல்லாம் பகுத்தாய்ந்து  குற்றத்தின் அடிப்படையை நோக்கம் என்ன என்று கண்டறியலாம். பத்தொன்பதாவது நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் புகழ்பெற்ற மருத்துவர் இருந்தார். அவர் பெயர், சீசர் லாம்ப்ரோஸா. இவர், பரம்பரையாக வரும் குணங்கள்  காரணமாக ஒருவர் தவறுகளை செய்கிறார். இப்படி தவறு செய்யும் குணம் நட்பு மூலமாகவும் இன்னொருவருக்கு பரவலாம். குடிநோயாளிகள் நிறைய குற்றங்களை செய்கிறார்கள் என கருத்துகளை எழுதினார். பரவலாக்கினார். வறுமையான சூழ்நிலை, கல்வி அறிவின்மை ஆகியவை குற்றங்களுக்கு முக்கியமான காரணங்கள் என்று கூறினார். மூன்றில் ஒரு பங்கு குற்றவாளிகள் பிறக்கும்போது குற்றவாளிகள் என்று எழுதினார். பிற்காலத்தில் லாம்ப்ரோஸாவின் ஆய்வுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. குற்ற...