இடுகைகள்

rss லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுதந்திர இந்தியாவில் சிறுபான்மை முஸ்லீம்கள்

படம்
 சுதந்திர இந்தியாவில் சிறுபான்மை முஸ்லீம்கள் ராமச்சந்திர குகா கிழக்கு பதிப்பகம் சுதந்திர இந்தியாவில் சிறுபான்மையினர், ஆர்எஸ்எஸ் ஆதரவு மனநிலை கொண்ட உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல் மூலம் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டனர் என்பதை நூல் சுருக்கமாக அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. வல்லபாய் படேல் ஆர்எஸ்எஸ் ஆதரவு மனநிலையோடு, முஸ்லீம்களின் தேச விசுவாசத்தை சந்தேகப்பட்டது, அரசியல் பிரசாரங்களில் பேசியது, அதிகாரப்பூர்வமாக முஸ்லீம்களை அரசு பதவியில் இருந்து களையெடுத்தது எல்லாமே ராமச்சந்திர குகாவின் எழுத்தில் பதிவாகியுள்ளது.  இதைப் படித்தால், மதவாத சக்திகள் வல்லபாய் படேலுக்கு எதற்கு சிலை வைத்தார்கள் என்று புரிந்துகொள்ள முடியும். இந்த நூலுக்கான விமர்சனத்தை எழுதும்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கிறித்தவ கன்னியாஸ்தீரிகள் மதமாற்றம் செய்ததாக இந்து குண்டர் அமைப்பு கொடுத்து புகாரின் பெயரில் கைதாகியுள்ளனர். ஏற்கெனவே, இ்ந்திய ஐக்கிய நாடு என்பது நொறுங்கிக்கொண்டிருக்கும் குடியரசுதான். இனி இந்த நாடு, எத்தனை துண்டுகளாக உடையப்போகிறது என்பதுதான் எதிர்பார்க்க வேண்டிய ஒரே விஷயம்.  நூலில் நேரு கொண்டிருந்த க...