பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களை வைத்து முஸ்லீம்களை படுகொலை செய்து வருகிறார்கள்!
இந்து சாதி முறை அமைப்பு உலகிலேயே இந்தியா ஒரு சிக்கலான நாடு என வெளிநாட்டு தோழர்களுக்கு கூற விரும்புகிறேன். ஆரியர்கள்தான் இரண்டு உலகப்போருக்கு காரணம் என ஜெர்மன் நாட்டு தத்துவவாதிகளைக்கூட நம்ப வைத்து மோசடி செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள கல்வியாளர்கள் கூட இந்துமதத்தின் மர்மங்களை கண்டறிய முடியவில்லை. வயது மூப்படையாத, இறக்காத ஒன்றாக இந்துமதம் இருக்கிறது. உலகின் மூன்றாவது பெரிய மதம். இந்த சாதி அமைப்பு, நான்கு பிரிவுகளைக் கொண்டது. மேலிருந்து கீழ் எனும் பிரமிடு சாதி அடுக்குமுறை கொண்டது. மறுபிறவியை அடிப்படையாக கொண்டு ஒருவர் செய்த புண்ணியம் மேல்சாதியிலும் பாவம் கீழ்சாதியிலும் பிறக்க வைக்கிறது என்று கூறுகிறார்கள். இந்துமதத்தில் சர்வ சக்தியும் ஆற்றலும் கொண்டவர்களாக பார்ப்பான்கள் உள்ளனர். இவர்கள் சாதி அடுக்கில் முதலாக இடம்பெறுகிறார்கள். இவர்களே நாட்டை, கட்சிகளை, ஆட்சித்தலைவர்களைக் கூட கட்டுப்படுத்துகிறார்கள். இந்த மேலாதிக்க இந்துமதம் ஆரியர்களின் கண்டுபிடிப்பு. தனியாக ஒருவரை ஒடுக்குவதை விட அமைப்பு ரீதியாக என்றென்றைக்குமாக ஒடுக்கும் அற்புத ஆற்றலைக் கொண்டது. உலகின் எட்டாவது அதிசயம் எ...